search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "swimming"

    • பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நீரில் மூழ்கி தவிப்பவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
    • அப்போது தாசில்தார் மாணவ -மாணவிகள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள காட்டாயம் நீச்சல் பழகிக்கொள்ள வேண்டும் என்றார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நீரில் மூழ்கி தவிப்பவர்களை எப்படி மீட்டு உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    கல்லிடைக்குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே கன்னடியன் கால்வாயில் அம்பை தாசில்தார் ஆனந்த் பிரகாஷ் முன்னிலையில் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம், நிலை அலுவலர் போக்குவரத்து நாகநாதன், சிறப்பு நிலைய அலுவலர் அருணாச்சலம், கமலகுமார், தீயணைப்பாளர் பசுங்கிளி, இசக்கி பாண்டியன், முருக மணி, ஜாபர் அலி ஆகியோர் கலந்து கொண்டு செயல்முறை விளக்கத்தை மாணவ- மாணவிகளுக்கு செய்து காட்டினார். அப்போது தாசில்தார் மாணவ -மாணவிகள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள காட்டாயம் நீச்சல் பழகிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இறுதி சுற்றுக்கு ஸ்ரீஹரி நடராஜ் தகுதி பெற்றதன் மூலம் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு.
    • டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்று 27வது இடம் பிடித்தார்.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன

    ஆண்களுக்கான100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டி அரை இறுதிச் சுற்றில் இந்திய இளம் வீரர் ஸ்ரீகரி நடராஜ் 54:55 வினாடிகளில் கடந்து 4 இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மேலும் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    அரையிறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்கா வீரர் பீட்டர் கோட்ஸே, 53.67 வினாடிகளில் பயண தூரத்தை கடந்து, முதலிடம் பிடித்தார்.

    கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஏ ஹீட் பிரிவு நீச்சல் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீரரான நடராஜ், 100மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் 54:31 வினாடிகளில் இலக்கை கடந்து 27வது இடம் பிடித்திருந்தார்.

    முன்னதாக, காமன்வெல்த் ஆண்களுக்கான 400மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில், இந்திய வீரர் குஷாக்ரா ராவத் 3:57.45 வினாடிகளில் இலக்கை 14வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பறிபோனது.

    • நீச்சல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை 2 பிரிவுகளாக நடக்கிறது.
    • நீர் நிலைகளில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நீச்சல் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பாளை அண்ணா விளையாட்டரங்கத்தில் கோடை கால விடுமுறையை முன்னிட்டு நீச்சல் கற்று கொள் திட்டத்தில் கோடை கால நீச்சல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை 2 பிரிவுகளாக நடக்கிறது.

    அதன்படி பயிற்சி நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரை, 7.15 மணி முதல் 8.15 வரை, 8.30 மணி முதல் 9.30 மணி வரை, 9.45 முதல் 10.45 வரையும், 11 மணி முதல் 12 மணி வரை, (பெண்கள் மட்டும் ) பெண் பயிற்சியாளரால் பயிற்சி கொடுக்கப்படும். மேலும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை பயிற்சி கொடுக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் சிறுவர், சிறுமிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்பட 233 பேர் பயிற்சி பெற்றனர். நீர் நிலைகளில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நீச்சல் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.

    எனவே நீச்சல் தெரியாதவர்கள் அடுத்த பயிற்சி முகாம் (கடந்த 1-ந்தேதி முதல் 14-ந்தேதி மற்றும் 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை) அண்ணா விளையாட்டரங்கத்தின் நீச்சல் குளத்தில் நீச்சல் கற்று கொள் திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோ மீட்டர் தூரத்தை 10½ மணி நேரத்தில் நீந்தி கடந்து தேனி சிறுவன் புதிய சாதனை படைத்தான். #SwimminginSea #TheniBoy
    ராமேசுவரம்:

    தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த தம்பதி ரவிக்குமார்-தாரணி. இவர்களுடைய மகன் ஜெய் ஜஸ்வந்த் (வயது 10). தேனியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். நீச்சலில் பல சாதனைகளை படைத்துவரும் இவன், இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி வரை 28 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து கடக்கும் சாதனையை நிகழ்த்தி உள்ளான்.

    அதற்காக ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிறுவன் ஜெய் ஜஸ்வந்த், அவருடைய தந்தை ரவிக்குமார், பயிற்சியாளர் விஜய்குமார், ஒருங்கிணைப்பாளர் ரோஜர் உள்பட 14 பேர் கொண்ட குழுவினர் ஒரு மீன்பிடி விசைப்படகு மூலமாக இலங்கை தலைமன்னாருக்கு சென்றனர். பின்னர் இலங்கை தலைமன்னார் ஊர்மலை என்ற பகுதியில் இருந்து சரியாக நேற்று அதிகாலை 4 மணிக்கு ஜெய் ஜஸ்வந்த் கடலில் நீந்த தொடங்கினான். இந்திய கடல் எல்லையை காலை 9.45 மணிக்கு கடந்த அவன், அங்கிருந்து தொடர்ந்து நீச்சல் அடித்து பகல் 2.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை வந்தடைந்தான்.



    28 கிலோமீட்டர் தூரத்தை சரியாக 10 மணி 30 நிமிட நேர்த்தில் கடந்து உலக சாதனை புரிந்துள்ள சிறுவன் ஜெய் ஜஸ்வந்தை அவருடைய பெற்றோர் ரவிக்குமார், தாரணி மற்றும் உறவினர்கள் முத்தமிட்டு வரவேற்றனர்.

    தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் சிறு வயதில் நீச்சலில் புதிய சாதனை புரிந்த சிறுவன் ஜெய் ஜஸ்வந்தை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேரில் வந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கடலோர போலீஸ் ஏ.டி.எஸ்.பி. இளங்கோ மற்றும் கடற்படை அதிகாரிகள், மத்திய-மாநில புலனாய்வு பிரிவுஅதிகாரிகள், சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    சாதனை படைத்த சிறுவன் ஜெய் ஜஸ்வந்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுதொடர்பாக அவன் கூறியதாவது:-

    தலைமன்னார் பகுதியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு நீச்சல் அடிக்க தொடங்கினேன். குற்றாலீசுவரன் சாதனையை முறியடித்து 10½ மணி நேரத்தில் நீந்தி தனுஷ்கோடி வந்தடைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர், பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

    இன்னும் 3 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து நீந்தியபடி தலைமன்னார் சென்று விட்டு மீண்டும் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் நீந்திவர திட்டமிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவன் கூறினான்.

    நீச்சல் பயிற்சியாளர் விஜய்குமார் கூறும் போது, “இதே தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடந்த 1994-ம் ஆண்டில் 12 வயதில் குற்றாலீசுவரன், 16 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளார். அதன்பின் பலர் இவ்வாறு நீந்தி கடந்திருந்தாலும் மிகவும் குறைந்த வயதில் 10½ மணி நேரத்தில் கடந்து சிறுவன் ஜெய்ஜஸ்வந்த் உலக சாதனை புரிந்துள்ளார்” என்று கூறினார். #SwimminginSea #TheniBoy
    ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பிரஸ்டிரோக் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சந்தீப் செஜ்வால் தகுதி பெற்றார். #asiangames2018
    நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பிரஸ்டிரோக் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சந்தீப் செஜ்வால் தகுதி பெற்றார். அவர் தகுதி சுற்றில் 27.95 வினாடியில் கடந்து 6-வது இடத்தை பிடித்து முன்னேறினார்.

    ஆண்களுக்கான 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டி தகுதி சுற்றில் இந்திய வீரர் அத்வாய் பேஜ் 15 நிமிடம் 29.96 வினாடியில் கடந்தார். ஆனால் இது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போதுமானதாக இல்லை. அதனால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார்.

    ஆண்கள் 4 x 100 மீட்டர் மெட்லே ரீளே பிரிவில் ஸ்ரீஹரிநட்ராஜ், சந்தீப் செஜ்வால், சாஜன் பிரகாஷ், டிசாசா ஆகியோரை கொண்ட இந்திய அணி (3.44.94) தகுதி சுற்றில் 9-வது இடத்தை பிடித்து வாய்ப்பை இழந்தது. #asiangames2018
    ×