search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire service"

    • வங்காளதேசத்தில் தீயணைப்பு படையில் முதல் முறையாக பெண்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என உள்துறை மந்திரி கூறினார்.

    டாக்கா:

    உலக அளவில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் தடம்பதித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அண்டை நாடான வங்காளதேசத்திலும் தீயணைப்புத் துறையில் பணிபுரிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    தலைநகர் டாக்கா அருகே உள்ள புர்பாச்சலில் 15 பெண்கள் தீயணைப்பு வீரர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கு முன்னரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பெண்கள் பணிபுரிந்துள்ளனர். ஆனால் தீயணைப்பு வீரர்களாக பெண்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    இதுதொடர்பாக அந்த நாட்டின் உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் கூறுகையில், இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என தெரிவித்தார்.

    • பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நீரில் மூழ்கி தவிப்பவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
    • அப்போது தாசில்தார் மாணவ -மாணவிகள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள காட்டாயம் நீச்சல் பழகிக்கொள்ள வேண்டும் என்றார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நீரில் மூழ்கி தவிப்பவர்களை எப்படி மீட்டு உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    கல்லிடைக்குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே கன்னடியன் கால்வாயில் அம்பை தாசில்தார் ஆனந்த் பிரகாஷ் முன்னிலையில் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம், நிலை அலுவலர் போக்குவரத்து நாகநாதன், சிறப்பு நிலைய அலுவலர் அருணாச்சலம், கமலகுமார், தீயணைப்பாளர் பசுங்கிளி, இசக்கி பாண்டியன், முருக மணி, ஜாபர் அலி ஆகியோர் கலந்து கொண்டு செயல்முறை விளக்கத்தை மாணவ- மாணவிகளுக்கு செய்து காட்டினார். அப்போது தாசில்தார் மாணவ -மாணவிகள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள காட்டாயம் நீச்சல் பழகிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

    ×