search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீச்சல் போட்டி"

    • 2-வது நாளான நேற்று 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.
    • 400 மீட்டர் தனி நபர் மெட்லியில் 4:54.14 வினாடியில் கடந்தும் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    சென்னை:

    39-வது சப்ஜூனியர், 49-வது ஜூனியர் நீச்சல் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.

    நெல்லை அணி வீரர் எம்.எஸ்.நிதிஷ் மேலும் 2 புதிய சாதனைகள் படைத்து 3 சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். குரூப் 2 சிறுவர் பிரிவில் 200 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவில் 2:31.62 வினாடிகளில் கடந்தும், 400 மீட்டர் தனி நபர் மெட்லியில் 4:54.14 வினாடியில் கடந்தும் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    ஆர்கா அணி வீரர் சர்வபள்ளி சாய் ஆதித்யா குரூப் 2 சிறுவர்களுக்கான 800 மீட்டர் பிரிவிலும் குரூப் 2 சிறுமியர் பிரிவில் செயின்ட் பிரிட்டோ அணி வீராங்கனை ஸ்ரீநிதி நடேசன் 400 மீட்டர் தனி நபர் மெட்லி பிரிவிலும் புதிய சாதனை படைத்தனர்.

    • கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.
    • குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது.

    தேனி:

    தேனியை சேர்ந்தவர் நீதிராஜன். இவருடைய மகன் சினேகன் (வயது 15). இந்த சிறுவன் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் தற்போது தேனியை சேர்ந்தவர் நீதிராஜன். இவருடைய மகன் சினேகன் (வயது 15). இந்த சிறுவன் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் தற்போது நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் சிறுவன் சினேகன் உள்பட 6 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு கடந்த 18-ந்தேதி டோவர் சாம்பியன் ஹோ பீச்சில் இருந்து இந்திய அணியின் சார்பாக நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இங்கிலீஸ் கால்வாயில் நீந்த தொடங்கினார்கள். கால்வாய் மொத்த 36 கி.மீ. வழக்கமாக இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று, பின்னர் அங்கிருந்து படகில் வந்து விடுவார்கள்.

    ஆனால் தற்போது இங்கிலாந்தில் இருந்து நீந்தி பிரான்ஸ்-ஐ சென்றடைந்து, மறுபடியும் இங்கிலாந்து வரை 72 கி.மீ தூரத்தை சிறுவன் சினேகன் நீந்தி கடந்த 19-ந்தேதி இங்கிலாந்து வந்து சாதனையை படைத்தார். இவர்கள் குழு இந்தியாவின் முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

    இந்த கடல் மற்ற கடல்களை போல் இல்லாமல் அதிக நீரோட்டம் உள்ளது. குளிர் 14 முதல் 15 டிகிரி வரையும் மற்றும் இந்த கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாகவும், கடல் நாய்கள், சுறா மீன்களும் உள்ளது.

    தமிழகத்திலிருந்து இதற்கு முன்பு குற்றாலீஸ்வரன் இங்கிலீஸ் கால்வாயில் நீந்தியுள்ளார். அதன் பிறகு தேனியை சேர்ந்த சிறுவன் சினேகன் இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்த 2-வது தமிழர் ஆவார்.

    இந்த சாதனை புரிந்த நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் சிறுவன் சினேகன் ஆகியோர்களுக்கு குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது. சினேகன் கடந்த ஆண்டு மார்ச்.28-ந் தேதி தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் 56 கி.மீ தூரத்தை குறைந்த நேரத்தில் நீந்திய சாதனையும், வடஅயர்லாந்து கடலில் நீந்தியும் சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் சிறுவன் சினேகன் உள்பட 6 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு கடந்த 18-ந்தேதி டோவர் சாம்பியன் ஹோ பீச்சில் இருந்து இந்திய அணியின் சார்பாக நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இங்கிலீஸ் கால்வாயில் நீந்த தொடங்கினார்கள். கால்வாய் மொத்த 36 கி.மீ. வழக்கமாக இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று, பின்னர் அங்கிருந்து படகில் வந்து விடுவார்கள்.

    ஆனால் தற்போது இங்கிலாந்தில் இருந்து நீந்தி பிரான்ஸ்-ஐ சென்றடைந்து, மறுபடியும் இங்கிலாந்து வரை 72 கி.மீ தூரத்தை சிறுவன் சினேகன் நீந்தி கடந்த 19-ந்தேதி இங்கிலாந்து வந்து சாதனையை படைத்தார். இவர்கள் குழு இந்தியாவின் முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

    இந்த கடல் மற்ற கடல்களை போல் இல்லாமல் அதிக நீரோட்டம் உள்ளது. குளிர் 14 முதல் 15 டிகிரி வரையும் மற்றும் இந்த கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாகவும், கடல் நாய்கள், சுறா மீன்களும் உள்ளது.

    தமிழகத்திலிருந்து இதற்கு முன்பு குற்றாலீஸ்வரன் இங்கிலீஸ் கால்வாயில் நீந்தியுள்ளார். அதன் பிறகு தேனியை சேர்ந்த சிறுவன் சினேகன் இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்த 2-வது தமிழர் ஆவார்.

    இந்த சாதனை புரிந்த நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் சிறுவன் சினேகன் ஆகியோர்களுக்கு குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது. சினேகன் கடந்த ஆண்டு மார்ச்.28-ந் தேதி தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் 56 கி.மீ தூரத்தை குறைந்த நேரத்தில் நீந்திய சாதனையும், வடஅயர்லாந்து கடலில் நீந்தியும் சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.
    • வெற்றி பெறும் சிறுவர் சிறுமியர் ஆசிய ஜூனியர் வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு நீச்சல் சங்கம் தேசிய நீச்சல் சம்மேளனத்தின் ஆதரவோடு 39-வது சப் ஜூனியர் மற்றும் 49-வது ஜூனியர் தேசிய டைவிங் மற்றும் வாட்டர் போலோ போட்டிகளை நடத்துகிறது.

    இந்த போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் மராட்டியம், கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஏறக்குறைய 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    டைவிங் போட்டியில் குரூப்-1 பிரிவு (16, 17, 18 வயது) குரூப் 2 பிரிவு (14, 15 வயது) குரூப் 3 பிரிவு (12, 13 வயது) சிறுவர், சிறுமியருக்கு போட்டிகள் நடைபெறுகிறது.

    வாட்டர் போலோ விளையாட்டுக்கு ஜூனியர் சிறுவர், சிறுமியருக்கு (2006-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள்) போட்டிகள் நடைபெறுகிறது.

    ஜூனியர் தேசிய வாட்டர் போலோ போட்டியில் வெற்றி பெறும் சிறுவர் சிறுமியர் ஆசிய ஜூனியர் வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு நீச்சல் சங்க பொதுச் செயலாளர் டி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

    • மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை, கேலோ இந்தியா, சாய் ஆகியவை இணைந்து 10 நகரங்களில் 10 விளையாட்டுகளை நாடு முழுவதும் நடத்துகிறது.
    • அதில் ஒன்றாக தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால் பின் நீச்சல் அகாடமியில் நடக்கிறது.

    சென்னை:

    சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை, கேலோ இந்தியா, சாய் ஆகியவை இணைந்து 10 நகரங்களில் 10 விளையாட்டுகளை நாடு முழுவதும் நடத்துகிறது.

    இந்த 10 விளையாட்டுகளில் ஒன்றான நீச்சல் போட்டிகள் 10 இடங்களில் நடத்தப்படுகிறது. அதில் ஒன்றாக தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால் பின் நீச்சல் அகாடமியில் நடக்கிறது.

    வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு போட்டி தொடங் குகிறது. 11, 14, 17, 25, 35 மற்றும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

    ஓபன் பிரிவு போட்டியான இதில் பெண்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்றும் admin@tnsaa.in என்ற இ-மெயிலில் (97915 28636) பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • போட்டிகளில் மொத்தம் 589 பேர் கலந்து கொண்டு விளையாடினர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கத்தில் கடந்த 8-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான வாலிபால் போட்டி தனித்தனியாகவும், மாணவர்களுக்கான கால்பந்து, நீச்சல் போட்டிகளும் நடைபெற்றன. 200 மீட்டர் பிரீ ஸ்டைல், பிரஸ்ட் ஸ்ட்டோக், பேக் ஸ்ட்டோக், பட்டர் பிளை, 400 மீட்டர் தனி நபர் மெட்லே ஆகிய 5 வகையான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நீச்சல் போட்டிகளில் 40 மாணவர்களும், கால்பந்து போட்டியில் 264 மாணவர்களும், வாலிபால் போட்டிகளில் 285 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 589 பேர் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.ஆயிரமும் பரிசுத்தொகையாக, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவிலான முதல் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே விளையாட்டு அரங்கத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) கல்லூரி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியும், மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இறுதி சுற்றுக்கு ஸ்ரீஹரி நடராஜ் தகுதி பெற்றதன் மூலம் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு.
    • டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்று 27வது இடம் பிடித்தார்.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன

    ஆண்களுக்கான100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டி அரை இறுதிச் சுற்றில் இந்திய இளம் வீரர் ஸ்ரீகரி நடராஜ் 54:55 வினாடிகளில் கடந்து 4 இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மேலும் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    அரையிறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்கா வீரர் பீட்டர் கோட்ஸே, 53.67 வினாடிகளில் பயண தூரத்தை கடந்து, முதலிடம் பிடித்தார்.

    கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஏ ஹீட் பிரிவு நீச்சல் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீரரான நடராஜ், 100மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் 54:31 வினாடிகளில் இலக்கை கடந்து 27வது இடம் பிடித்திருந்தார்.

    முன்னதாக, காமன்வெல்த் ஆண்களுக்கான 400மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில், இந்திய வீரர் குஷாக்ரா ராவத் 3:57.45 வினாடிகளில் இலக்கை 14வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பறிபோனது.

    ×