search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boy feat"

    • கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.
    • குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது.

    தேனி:

    தேனியை சேர்ந்தவர் நீதிராஜன். இவருடைய மகன் சினேகன் (வயது 15). இந்த சிறுவன் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் தற்போது தேனியை சேர்ந்தவர் நீதிராஜன். இவருடைய மகன் சினேகன் (வயது 15). இந்த சிறுவன் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் தற்போது நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் சிறுவன் சினேகன் உள்பட 6 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு கடந்த 18-ந்தேதி டோவர் சாம்பியன் ஹோ பீச்சில் இருந்து இந்திய அணியின் சார்பாக நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இங்கிலீஸ் கால்வாயில் நீந்த தொடங்கினார்கள். கால்வாய் மொத்த 36 கி.மீ. வழக்கமாக இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று, பின்னர் அங்கிருந்து படகில் வந்து விடுவார்கள்.

    ஆனால் தற்போது இங்கிலாந்தில் இருந்து நீந்தி பிரான்ஸ்-ஐ சென்றடைந்து, மறுபடியும் இங்கிலாந்து வரை 72 கி.மீ தூரத்தை சிறுவன் சினேகன் நீந்தி கடந்த 19-ந்தேதி இங்கிலாந்து வந்து சாதனையை படைத்தார். இவர்கள் குழு இந்தியாவின் முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

    இந்த கடல் மற்ற கடல்களை போல் இல்லாமல் அதிக நீரோட்டம் உள்ளது. குளிர் 14 முதல் 15 டிகிரி வரையும் மற்றும் இந்த கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாகவும், கடல் நாய்கள், சுறா மீன்களும் உள்ளது.

    தமிழகத்திலிருந்து இதற்கு முன்பு குற்றாலீஸ்வரன் இங்கிலீஸ் கால்வாயில் நீந்தியுள்ளார். அதன் பிறகு தேனியை சேர்ந்த சிறுவன் சினேகன் இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்த 2-வது தமிழர் ஆவார்.

    இந்த சாதனை புரிந்த நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் சிறுவன் சினேகன் ஆகியோர்களுக்கு குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது. சினேகன் கடந்த ஆண்டு மார்ச்.28-ந் தேதி தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் 56 கி.மீ தூரத்தை குறைந்த நேரத்தில் நீந்திய சாதனையும், வடஅயர்லாந்து கடலில் நீந்தியும் சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் சிறுவன் சினேகன் உள்பட 6 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு கடந்த 18-ந்தேதி டோவர் சாம்பியன் ஹோ பீச்சில் இருந்து இந்திய அணியின் சார்பாக நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இங்கிலீஸ் கால்வாயில் நீந்த தொடங்கினார்கள். கால்வாய் மொத்த 36 கி.மீ. வழக்கமாக இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று, பின்னர் அங்கிருந்து படகில் வந்து விடுவார்கள்.

    ஆனால் தற்போது இங்கிலாந்தில் இருந்து நீந்தி பிரான்ஸ்-ஐ சென்றடைந்து, மறுபடியும் இங்கிலாந்து வரை 72 கி.மீ தூரத்தை சிறுவன் சினேகன் நீந்தி கடந்த 19-ந்தேதி இங்கிலாந்து வந்து சாதனையை படைத்தார். இவர்கள் குழு இந்தியாவின் முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

    இந்த கடல் மற்ற கடல்களை போல் இல்லாமல் அதிக நீரோட்டம் உள்ளது. குளிர் 14 முதல் 15 டிகிரி வரையும் மற்றும் இந்த கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாகவும், கடல் நாய்கள், சுறா மீன்களும் உள்ளது.

    தமிழகத்திலிருந்து இதற்கு முன்பு குற்றாலீஸ்வரன் இங்கிலீஸ் கால்வாயில் நீந்தியுள்ளார். அதன் பிறகு தேனியை சேர்ந்த சிறுவன் சினேகன் இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்த 2-வது தமிழர் ஆவார்.

    இந்த சாதனை புரிந்த நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் சிறுவன் சினேகன் ஆகியோர்களுக்கு குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது. சினேகன் கடந்த ஆண்டு மார்ச்.28-ந் தேதி தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் 56 கி.மீ தூரத்தை குறைந்த நேரத்தில் நீந்திய சாதனையும், வடஅயர்லாந்து கடலில் நீந்தியும் சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீச்சல் செய்து ஆசிய சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
    • 11 வயதில் நீச்சல் அடித்துக் கடந்த முதல் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான சிறுவன் லக்‌ஷய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், ஐஸ்வர்யா தம்பதிகளின் 11 வயது மகனான லக்ஷய் கிருஷ்ணகுமார், கடலில் 15 கிலோமீட்டர் தூரம் நீச்சல் செய்து, ஆசிய சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஆசிய கண்டத்திலேயே, 15 கிலோமீட்டர் தொலைவை, 11 வயதில் நீச்சல் அடித்துக் கடந்த முதல் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான சிறுவன் லக்ஷய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நீலாங்கரை முதல் மெரினா வரையிலான கடலில் 15 கிலோமீட்டர் தொலைவை, அவர் 3 மணி நேரம் 18 நிமிடங்களில் கடந்து, ஆசிய சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

    இதற்கான பாராட்டு விழாவில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு நீச்சல் ஆணையச் செயலாளர் சந்திரசேகரன் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு, சாதனை படைத்த சிறுவனை பாராட்டினார்கள்.

    ×