search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swimming competition"

    • வருவாய் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் இன்று தொடங்கப்பட்டது.
    • போட்டியை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் திருமாறன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் இன்று தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட நீச்சல் கழக தலைவரும், வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி தாளாளருமான திருமாறன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ், மாவட்ட நீச்சல் கழக செயலாளர் லெட்சு மணன், நீச்சல் பயிற்றுநர் கர்ணன், நடுவர்கள் சுந்தர் ராஜ், உமாநாத், எடிசன் , பசுங்கிளி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டி க்கான ஏற்பாடுகளை கங்கை கொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி உடற் கல்வி ஆசிரியர் கார்த்திக்குமார் செய்திருந்தார்.

    • 2-வது நாளான நேற்று 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.
    • 400 மீட்டர் தனி நபர் மெட்லியில் 4:54.14 வினாடியில் கடந்தும் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    சென்னை:

    39-வது சப்ஜூனியர், 49-வது ஜூனியர் நீச்சல் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.

    நெல்லை அணி வீரர் எம்.எஸ்.நிதிஷ் மேலும் 2 புதிய சாதனைகள் படைத்து 3 சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். குரூப் 2 சிறுவர் பிரிவில் 200 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவில் 2:31.62 வினாடிகளில் கடந்தும், 400 மீட்டர் தனி நபர் மெட்லியில் 4:54.14 வினாடியில் கடந்தும் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    ஆர்கா அணி வீரர் சர்வபள்ளி சாய் ஆதித்யா குரூப் 2 சிறுவர்களுக்கான 800 மீட்டர் பிரிவிலும் குரூப் 2 சிறுமியர் பிரிவில் செயின்ட் பிரிட்டோ அணி வீராங்கனை ஸ்ரீநிதி நடேசன் 400 மீட்டர் தனி நபர் மெட்லி பிரிவிலும் புதிய சாதனை படைத்தனர்.

    • கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.
    • குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது.

    தேனி:

    தேனியை சேர்ந்தவர் நீதிராஜன். இவருடைய மகன் சினேகன் (வயது 15). இந்த சிறுவன் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் தற்போது தேனியை சேர்ந்தவர் நீதிராஜன். இவருடைய மகன் சினேகன் (வயது 15). இந்த சிறுவன் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் தற்போது நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் சிறுவன் சினேகன் உள்பட 6 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு கடந்த 18-ந்தேதி டோவர் சாம்பியன் ஹோ பீச்சில் இருந்து இந்திய அணியின் சார்பாக நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இங்கிலீஸ் கால்வாயில் நீந்த தொடங்கினார்கள். கால்வாய் மொத்த 36 கி.மீ. வழக்கமாக இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று, பின்னர் அங்கிருந்து படகில் வந்து விடுவார்கள்.

    ஆனால் தற்போது இங்கிலாந்தில் இருந்து நீந்தி பிரான்ஸ்-ஐ சென்றடைந்து, மறுபடியும் இங்கிலாந்து வரை 72 கி.மீ தூரத்தை சிறுவன் சினேகன் நீந்தி கடந்த 19-ந்தேதி இங்கிலாந்து வந்து சாதனையை படைத்தார். இவர்கள் குழு இந்தியாவின் முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

    இந்த கடல் மற்ற கடல்களை போல் இல்லாமல் அதிக நீரோட்டம் உள்ளது. குளிர் 14 முதல் 15 டிகிரி வரையும் மற்றும் இந்த கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாகவும், கடல் நாய்கள், சுறா மீன்களும் உள்ளது.

    தமிழகத்திலிருந்து இதற்கு முன்பு குற்றாலீஸ்வரன் இங்கிலீஸ் கால்வாயில் நீந்தியுள்ளார். அதன் பிறகு தேனியை சேர்ந்த சிறுவன் சினேகன் இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்த 2-வது தமிழர் ஆவார்.

    இந்த சாதனை புரிந்த நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் சிறுவன் சினேகன் ஆகியோர்களுக்கு குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது. சினேகன் கடந்த ஆண்டு மார்ச்.28-ந் தேதி தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் 56 கி.மீ தூரத்தை குறைந்த நேரத்தில் நீந்திய சாதனையும், வடஅயர்லாந்து கடலில் நீந்தியும் சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் சிறுவன் சினேகன் உள்பட 6 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு கடந்த 18-ந்தேதி டோவர் சாம்பியன் ஹோ பீச்சில் இருந்து இந்திய அணியின் சார்பாக நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இங்கிலீஸ் கால்வாயில் நீந்த தொடங்கினார்கள். கால்வாய் மொத்த 36 கி.மீ. வழக்கமாக இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று, பின்னர் அங்கிருந்து படகில் வந்து விடுவார்கள்.

    ஆனால் தற்போது இங்கிலாந்தில் இருந்து நீந்தி பிரான்ஸ்-ஐ சென்றடைந்து, மறுபடியும் இங்கிலாந்து வரை 72 கி.மீ தூரத்தை சிறுவன் சினேகன் நீந்தி கடந்த 19-ந்தேதி இங்கிலாந்து வந்து சாதனையை படைத்தார். இவர்கள் குழு இந்தியாவின் முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

    இந்த கடல் மற்ற கடல்களை போல் இல்லாமல் அதிக நீரோட்டம் உள்ளது. குளிர் 14 முதல் 15 டிகிரி வரையும் மற்றும் இந்த கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாகவும், கடல் நாய்கள், சுறா மீன்களும் உள்ளது.

    தமிழகத்திலிருந்து இதற்கு முன்பு குற்றாலீஸ்வரன் இங்கிலீஸ் கால்வாயில் நீந்தியுள்ளார். அதன் பிறகு தேனியை சேர்ந்த சிறுவன் சினேகன் இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்த 2-வது தமிழர் ஆவார்.

    இந்த சாதனை புரிந்த நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் சிறுவன் சினேகன் ஆகியோர்களுக்கு குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது. சினேகன் கடந்த ஆண்டு மார்ச்.28-ந் தேதி தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் 56 கி.மீ தூரத்தை குறைந்த நேரத்தில் நீந்திய சாதனையும், வடஅயர்லாந்து கடலில் நீந்தியும் சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.
    • வெற்றி பெறும் சிறுவர் சிறுமியர் ஆசிய ஜூனியர் வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு நீச்சல் சங்கம் தேசிய நீச்சல் சம்மேளனத்தின் ஆதரவோடு 39-வது சப் ஜூனியர் மற்றும் 49-வது ஜூனியர் தேசிய டைவிங் மற்றும் வாட்டர் போலோ போட்டிகளை நடத்துகிறது.

    இந்த போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் மராட்டியம், கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஏறக்குறைய 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    டைவிங் போட்டியில் குரூப்-1 பிரிவு (16, 17, 18 வயது) குரூப் 2 பிரிவு (14, 15 வயது) குரூப் 3 பிரிவு (12, 13 வயது) சிறுவர், சிறுமியருக்கு போட்டிகள் நடைபெறுகிறது.

    வாட்டர் போலோ விளையாட்டுக்கு ஜூனியர் சிறுவர், சிறுமியருக்கு (2006-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள்) போட்டிகள் நடைபெறுகிறது.

    ஜூனியர் தேசிய வாட்டர் போலோ போட்டியில் வெற்றி பெறும் சிறுவர் சிறுமியர் ஆசிய ஜூனியர் வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு நீச்சல் சங்க பொதுச் செயலாளர் டி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

    • மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை, கேலோ இந்தியா, சாய் ஆகியவை இணைந்து 10 நகரங்களில் 10 விளையாட்டுகளை நாடு முழுவதும் நடத்துகிறது.
    • அதில் ஒன்றாக தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால் பின் நீச்சல் அகாடமியில் நடக்கிறது.

    சென்னை:

    சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை, கேலோ இந்தியா, சாய் ஆகியவை இணைந்து 10 நகரங்களில் 10 விளையாட்டுகளை நாடு முழுவதும் நடத்துகிறது.

    இந்த 10 விளையாட்டுகளில் ஒன்றான நீச்சல் போட்டிகள் 10 இடங்களில் நடத்தப்படுகிறது. அதில் ஒன்றாக தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால் பின் நீச்சல் அகாடமியில் நடக்கிறது.

    வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு போட்டி தொடங் குகிறது. 11, 14, 17, 25, 35 மற்றும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

    ஓபன் பிரிவு போட்டியான இதில் பெண்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்றும் admin@tnsaa.in என்ற இ-மெயிலில் (97915 28636) பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • போட்டிகளில் மொத்தம் 589 பேர் கலந்து கொண்டு விளையாடினர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கத்தில் கடந்த 8-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான வாலிபால் போட்டி தனித்தனியாகவும், மாணவர்களுக்கான கால்பந்து, நீச்சல் போட்டிகளும் நடைபெற்றன. 200 மீட்டர் பிரீ ஸ்டைல், பிரஸ்ட் ஸ்ட்டோக், பேக் ஸ்ட்டோக், பட்டர் பிளை, 400 மீட்டர் தனி நபர் மெட்லே ஆகிய 5 வகையான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நீச்சல் போட்டிகளில் 40 மாணவர்களும், கால்பந்து போட்டியில் 264 மாணவர்களும், வாலிபால் போட்டிகளில் 285 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 589 பேர் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.ஆயிரமும் பரிசுத்தொகையாக, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவிலான முதல் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே விளையாட்டு அரங்கத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) கல்லூரி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியும், மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளது.

    • பாளை சாந்திநகர் விளையாட்டு கிராமத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி நடைபெற்றது
    • போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நீச்சல் போட்டி பாளை சாந்திநகர் விளையாட்டு கிராமத்தில் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மாணவர்கள் பிரிவில் நாகர்கோவில் எஸ்.டி.இந்து கல்லூரி முதல் இடத்தையும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி அணி 2-வது இடத்தையும், நாங்குநேரி அருள்மிகு பன்னிருபிடிஅய்யன் கல்லூரி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி அணிகள் 3-வது இடத்தையும் பிடித்தது.

    மாணவிகள் பிரிவில் நாங்குநேரி அருள்மிகு பன்னிருபிடி அய்யன் கல்லூரி அணி முதல் இடத்தையும், நாகர்கோவில் ஸ்ரீ அய்யப்பா பெண்கள் கல்லூரி அணி 2-வது இடத்தையும், நாகர்கோவில் பெண்கள் கிறித்துவ கல்லூரி, கன்னியாகுமரி அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அணிகள் 3-வது இடத்தையும் பிடித்தது.

    தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நெல்லை மாவட்ட நீச்சல் கழக தலைவரும், தமிழ்நாடு நீச்சல் கழக உதவி செயலாளருமான திருமாறன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையை பரிசாக வழங்கினார். இதில் நெல்லை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் லட்சுமணன், பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு துறை உதவி பேராசிரியர் சேது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குனர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    • நீச்சல் போட்டியில் உலக சாதனை படைத்த மதுரை மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • இவர் ராமேசுவரம்- தலைமன்னார் இடையேயான 60 கி.மீ தூரத்தை 19.45 மணி நேரங்களில் கடந்து கின்னஸ் சாதனை படைத்தவர்.

    மதுரை

    மதுரையை சேர்ந்த நீதிராஜன்-அனுஷா தம்பதியின் மகன் சினேகன் (14), 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ராமேசுவரம்- தலைமன்னார் இடையேயான 60 கி.மீ தூரத்தை 19.45 மணி நேரங்களில் கடந்து கின்னஸ் சாதனை படைத்தவர். இந்த நிலையில் சினேகன் அயர்லாந்து- ஸ்காட்லாந்து இடையே 35 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள வடக்கு கால்வாயை, 14 மணி 36 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார். அதன் மூலம் அயர்லாந்து வடக்கு கால்வாயை 14 வயதில் கடந்த முதல் நீச்சல் சாதனையாளர்' என்ற பெருமை கிடைத்துள்ளது. சர்வதேச நீச்சல் போட்டியில் சாதனை படைத்த சினேகன், அவரது பயிற்சியாளர் விஜயகுமார் ஆகியோைர தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர் செல்வம் மற்றும் பலர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

    ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. #AsianGames2018 #Swimming
    ஜகார்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று காலை நீச்சல் போட்டிக்கான தகுதி சுற்றுகள் நடந்தன. ஆண்களுக்கான 4x100 மீட்டர் பிரிஸ்டைல் ரிலே பிரிவில் டிசோசா, அன்ஷுல், சாஜன் பிரகாஷ், விர்தால்காடே ஆகியோரை கொண்ட இந்திய அணி தகுதி சுற்றில் (3 நிமிடம் 25.17 வினாடி) 8-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்திய வீரர் மணிஅபினேஷ் 56.98 வினாடியிலும், மற்றொரு இந்திய வீரரான சாஜன் பிரகாஷ் 54.06 வினாடியிலும் பந்தய தூரத்தை கடந்தனர்.

    ஆனால் இது இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதியாக இல்லை. சாஜன் பிரகாஷ் 12-வது இடமும், மணிஅபினேஷ் 26-வது இடமும் பிடித்தனர். இதன்மூலம் அவர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.

    இதேபோல் ஆண்களுக்கான 100 மீட்டர் பிரஸ்ட்ஸ்ரோக் பிரிவில் இந்திய வீரர் சந்தீப் (1 நிமிடம் 2.07 வினாடி) இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. அவர் தகுதி சுற்றில் 10-வது இடத்தை பிடித்தார்.

    டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா- ஹாங்காங்கின் சாங்வாங்குடன் மோதினார்.

    இதில அங்கிதா ரெய்னா 6-4, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் அங்கிதா ரெய்னா பதக்கத்தை உறுதி செய்தார். #AsianGames2018 #Swimming
    புதுக்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் மாணவிகள் உள்பட 90 பேர் பங்கேற்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட நீச்சல் கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏ.வி.எம்.கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அதிகாரி வாஞ்சிநாதன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50 மாணவிகள் உள்பட 90 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை மாணவ, மாணவிகள், மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நீச்சல் கழக தலைவர் ராஜமாதா ரமாதேவி, செயலாளர் முருகப்பன், பொருளாளர் குணசேகரன் உள்பட பலர் செய்திருந்தனர்.
    தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 35-வது சப்-ஜூனியர் மற்றும் 45-வது ஜூனியர் மாநில நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    சென்னை:

    தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 35-வது சப்-ஜூனியர் மற்றும் 45-வது ஜூனியர் மாநில நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. 4 வயது பிரிவுகளில் நீச்சல் போட்டிகளும், 3 வயது பிரிவுகளில் டைவிங் போட்டிகளும் நடத்தப்படுகிறது. இதில் 650 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை தமிழக போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார்.

    பரிசளிப்பு விழாவில் சர்வதேச முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

    இந்த போட்டியில் இருந்து ஜூன் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெறும் தேசிய சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் நீச்சல் போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.

    இந்த தகவலை தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 
    ×