என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநில நீச்சல் போட்டி சென்னையில் நடக்கிறது
Byமாலை மலர்30 May 2018 3:39 AM GMT (Updated: 30 May 2018 3:39 AM GMT)
தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 35-வது சப்-ஜூனியர் மற்றும் 45-வது ஜூனியர் மாநில நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 35-வது சப்-ஜூனியர் மற்றும் 45-வது ஜூனியர் மாநில நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. 4 வயது பிரிவுகளில் நீச்சல் போட்டிகளும், 3 வயது பிரிவுகளில் டைவிங் போட்டிகளும் நடத்தப்படுகிறது. இதில் 650 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை தமிழக போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார்.
பரிசளிப்பு விழாவில் சர்வதேச முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.
இந்த போட்டியில் இருந்து ஜூன் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெறும் தேசிய சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் நீச்சல் போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.
இந்த தகவலை தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 35-வது சப்-ஜூனியர் மற்றும் 45-வது ஜூனியர் மாநில நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. 4 வயது பிரிவுகளில் நீச்சல் போட்டிகளும், 3 வயது பிரிவுகளில் டைவிங் போட்டிகளும் நடத்தப்படுகிறது. இதில் 650 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை தமிழக போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார்.
பரிசளிப்பு விழாவில் சர்வதேச முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.
இந்த போட்டியில் இருந்து ஜூன் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெறும் தேசிய சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் நீச்சல் போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.
இந்த தகவலை தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X