search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swapna Suresh"

    • கேரள முதலமைச்சருக்கு எதிராக சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பவர்களை அரசு அச்சுறுத்த முயற்சிக்கிறது.
    • தங்கம் கடத்தல் விவகாரத்தில் பினராயி அரசு பயப்படுகிறது

    கொச்சி:

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தங்க கடத்தல் வழக்கில் தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்வப்னா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

    அதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

    மேலும் பினராயி விஜயனுக்கு நெருக்கமான ஷாஜ் கிரண் என்பவர் தன்னை சந்தித்து பேசியதாகவும், அப்போது கோர்ட்டில் அளித்த ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெற்றால் தன்மீதான வழக்குகள் அனைத்தையும் இல்லாமல் செய்துவிட ஏற்பாடு செய்வதாக அவர் கூறியதாகவும், இது தொடர்பான ஆடியோ பதிவு தன்னிடம் இருப்பதாகவும் ஸவப்னா தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து பினராயி விஜயன் விலக கோரி அம்மாநில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே ஸ்வப்னா மீது கேரள முன்னாள் மந்திரி ஜலீல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பவர்களை இடதுசாரி அரசு அச்சுறுத்த முயற்சிக்கிறது என்று அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் குற்றம் சாட்டியுள்ளார்.

    முதலமைச்சருக்கு எதிராக குற்றம் சாட்டிய ஒருவர் கடத்தப்பட்டார், அவரது போன் பறிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.  அரசுக்கு எதிரான ஆதாரம் இருப்பதால்தான் இவற்றைச் செய்கிறார்கள் என்றும், தங்கம் கடத்தல் விவகாரத்தில் பினராயி அரசு பயப்படுவதே இதற்குக் காரணம் என்றும் சதீசன் குறிப்பிட்டுள்ளார்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2016-ம் ஆண்டு துபாயில் வைத்து பினராயி விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டது என ஸ்வப்னா சுரேஷ் கூறினார்.
    • ஸ்வப்னா சுரேஷின் இந்த வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்பட பலர் சிக்கினர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. போலீசார் உபா சட்டத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்-மந்திரியின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். இந்தக் கடத்தலில் முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதற்கிடையே, இந்த வழக்கில் ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், தான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாகவும் கூறினார்.

    இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளது என தெரிவித்தார்.

    கேரள ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ரூ. 25 லட்சம் ரொக்கம் மற்றும் உறுதி பத்திரம் கொடுத்த ஸ்வப்னா சுரேசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு 2020-ம் ஆண்டு 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமார், சந்திப்நாயர் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. போலீசார், உபா சட்டத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த 16 மாதங்களாக அவர் சிறையில் இருந்தார். உபா சட்டத்தை எதிர்த்து அவரது தாயார் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    கேரளா ஐகோர்ட்

    கேரள ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ரூ. 25 லட்சம் ரொக்கம் மற்றும் உறுதி பத்திரம் கொடுத்த ஸ்வப்னா சுரேசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இன்று (6-ந் தேதி) திருவனந்தபுரம் அட்டா குளங்கரா மகளிர் சிறையில் இருந்து ஸ்வப்னா சுரேஷ் விடுதலை செய்யப்பட்டார்.

    இதையும் படியுங்கள்...மோடியின் வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் உள்ளது- ராகுல் காந்தி விளாசல்

    ×