search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SUSIDE"

    • ஸ்ரீரங்கத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக மனைவி, மகனுடன் விவசாயி விஷம் குடித்தார்
    • ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    திருச்சி,

    ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் மோகன். தொழிலாளி. இவர் தீராத நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார்.மயங்கி கிடந்த அவர்களை அக்க்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து உதவி கமிஷனர் நிவேதா லஷ்மி விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
    • 8 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.

    திருச்சி,

    திருச்சி மணச்சநல்லூர் கீழூர் மூவரையன் பாளை யம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி.இவரது மகன் ஹரிகிரு ஷ்ணன் (வயது 23). இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.அதைத் தொடர்ந்து பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. ஆனால் ஹரிகிருஷ்ணன் திருமணம் செய்து கொள்ள விரும்ப வில்லை.இருப்பினும் பெற்றோர் பெண் தேடி வந்ததால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். பின்னர் வீட் டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

    பெற்றோர்கள் அவரை மீட்டு மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல் சிகிச்சை க்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .கடந்த 8 தினங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்த போதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஹரி கிரு ஷ்ணன் பரிதாபமாக இற ந்தார்.இது குறித்து அவரது தந்தை ரங்கசாமி மணச்சந ல்லூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணப்பாறையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை
    • மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்

    திருச்சி,

    திருச்சி மணப்பாறை அருகே உள்ள மலையாடிப்ப ட்டி ராயம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ சேகர். இவரது மனைவி ஹஸ்பர் மேரி. கணவன்- மனைவி இருவரும் இணை பிரியாத ஜோடியாக வாழ்ந்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கஷ்ப்பர் மேரி உடல் நலக்கு றைவால் திடீரென இறந்து விட்டார். இது ஸ்டீபன் ராஜ சேகருக்கு மிகுந்த மனவே தனையை ஏற்படுத்தியது.மனைவியின் பிரிவு பிரிவு அவரை நிலைகுலைய செய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில் உள்ள யாரிடமும் சரியாக பேசாமல் அமைதி யாக இருந்தார்.பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்டீபன் ராஜசேகர் திடீரென மனைவி சேலையில் தூக்கு மாட்டி தொங்கினார்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை மீட்டு 108 ஆம்புல ன்ஸ் மூலமாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ஸ்டீபன் ராஜ சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து அவரது தந்தை தாமஸ் பீட்டர் மணப்பாறை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடனை கட்ட முடியவில்லை
    • மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை
    • திருச்சியில் பரிதாபம்

    திருச்சி,

    திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கோபால கிருஷ்ணன் (வயது 40). இவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    வியா பாரியான இவர் தனியார் வங்கி மற்றும் மகளிர் குழு மூலம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியு ள்ளார். வியாபாரத்தில் ந ஷ்டம் ஏற்பட்டதால், வா ங்கிய கடனை அவரால் கட்ட முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த கோபாலகிருஷ்ணன் எலி மருந்து பவுடரை மதுவில் கலந்து குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக கோபால கிருஷ்ணன் இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி செலின் பிரதீபா கொடுத்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரை கிராம ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
    • பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் தெரணி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 52). இவர் காரை கிராம ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் இருந்த போது தனது காதில் பூச்சு கொல்லி மருந்து ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அகரம்சீகூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    • திருமணம் நிச்சயமான நிலையில் பரிதாபம்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்து மங்களமேடு அருகே உள்ள ரஞ்சன்குடி கிராமம் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(வயது 32). விவசாய கூலித்தொழிலாளியான இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த ராஜேஷ்குமார், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயமான நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.    

    • திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
    • கலெக்டர் பிரதீப் குமார் மூதாட்டி இடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்டு அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை சேர்ந்தவர் முத்தாத்தாள்(வயது 71). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான வீட்டை 16 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி உள்ளார்.

    முன்பணமாக ரூ 6 லட்சமும் அதனைத் தொடர்ந்து ரூ 2 லட்சமும் என மொத்தம் 8 லட்சம் கொடுத்துள்ளார். மீதமுள்ள 8 லட்சம் ரூபாயை பத்திரப்பதிவு அலுவலகத்தில் செலுத்தி அந்த வீட்டை பதிவு செய்வதற்காக சென்றபோது ஏற்கனவே அந்த வீட்டின் மீது வங்கியில் கடன் பெற்றுள்ளது தெரியவந்தது.எனவே முத்தாத்தாள் தனக்கு வீடு வேண்டாம் என்று கூறி பெற்றுக் கொண்ட அட்வான்ஸ் தொகையை திருப்பி தருமாறு முருகானந்தத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தி சுமார் ஆறு வருட காலமாக பணத்தை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார்.இது தொடர்பாக அவர்கள் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் புகார் மட்டும் பெற்றுக் கொள்ளப்பட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த முத்தாத்தாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பின்னர் கலெக்டர் பிரதீப் குமார் மூதாட்டி இடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்டு அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    • புதுக்கோட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நரிமேட்டை சேர்ந்தவர் நிவேதா (வயது 27). இவர் சென்னையில் ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று புதுக்கோட்டைக்கு வந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவரை பிரிந்து கள்ளக் காதலனுடன் குடும்பம் நடத்தி வந்த ெபண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

    மண்ணச்சநல்லூர்,

    சமயபுரம் மாடக்குடி பகுதியில் உள்ள வ உ சி நகரை சேர்ந்த பஷீர் (வயது 48) இவர் மனைவி பாத் திமா (43).இவர்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் இனாம் சமயபுரம் முத்து ராஜா தெருவை சேர்ந்த குமரன் (31) கூலி வேலை செய்து வருகிறார். மேலும் குமரனுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் குமரனு க்கும் பாத்திமாவுக்கு பழக் கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.இதில் ஒரு கட்டத்தில் பாத்திமா தனது கணவரை விட்டு பிரிந்து குமரனுடன் நம்பர் ஒன் டோல்கேட் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.இதையடுத்து இருவரு க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்ப டுகிறது.இதனால் மனமுடைந்த பாத்திமா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்வி சிறியில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய குமரன் தூக்கில் தொங்கி யபடி இருந்து பாத்திமாவை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மேலும் இது குறித்து நம்பர் ஒன் டோல்கேட் கொள்ளிடம் காவல் நிலை யத்திற்கு நேரில் சென்று தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் கொள்ளி டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்ச ம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூரில் கல்குவாரி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
    • க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே அத்திபாளையத்தை சேர்ந்த தனியார் கல்குவாரியில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அழகம் பட்டியை சேர்ந்த முனியாண்டி மகன் மணிவேல் (வயது 30) பணியாற்றி வந்தார். இவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் தங்கி இருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த, க.பரமத்தி போலீசார் பிரேதத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிவேல் மனைவி முருகேஸ்வரி, அளித்த புகார்படி நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருமணமாகி ஒன்பது ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில், இருந்து வந்த மணிவேல் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • அறந்தாங்கி காவல்த்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் பெரியையா, இவரது மகன் சரவணன் (வயது 14). இவர் பெருங்காடு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.சரவணன் பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் செல்போனில் கேம் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிரு்துள்ளார்.இதனை அவ்வப்போது பெற்றோர்கள் கண்டித்து வந்துள்ளனர். சம்பவத்தின்போது சரவணன் வழக்கம்போல் செல்போனில் விளையாடியுள்ளான்.இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதில் விரக்தியடைந்த மாணவன் உடனடியாக வீட்டிற்குள் சென்று வீட்டின் கூரையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினர் மாணவனை தூக்கிலிருந்து இறக்கி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற் கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    அதனை தொடர்ந்து இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்த்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் விளையாடிய மாணவனை பெற்றோர்கள் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மண்ணச்சநல்லூர் அருகே கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு

    திருச்சி,

    திருச்சி மணச்சநல்லூர் கரியமாணிக்கம் தழுதாள ப்பட்டி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வடி வேல் (வயது 50). கூலித் தொழிலாளி.இவரது மகன் நவீன் குமார் ( 17). இவர் முசிறியில் உள்ள ஒரு தனியார் இன்ஜி னியரிங் கல்லூரியில் டிப்ள மோ மெக்கானிக்கல் இன்ஜி னியரிங் 3-ம் ஆண்டு படி த்து வந்தார்.பெற்றோர் சொற்ப வரு மானத்தை கொண்டு அவரி ன் கல்வி செலவுகளை சமா ளிக்க முடியாமல் தடுமாறி வந்தனர். அதைத்தொடர்ந்து நவீன் குமார் தனது கல்லூரி விடுமுறை நாட்களில் கட் டிட வேலைக்கு சென்று வந்தார்.அப்போது கொப்பவாளி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும், நவீன் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காத லாக மாறியது.

    இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். படி க்க வேண்டிய காலத்தில் பாதை மாறினால் மகனின் எதிர்காலம் கேள்விக்கு றியாகி விடுமே என கவலை அடைந்தனர்.

    இதையடுத்து காதலை கைவிடுமாறு நவீன் குமாரை அவரது தந்தை வடிவேல் கண்டித்தார். ஆனால் காத லியை நொடிப் பொழுதில் அவரால் மறக்க இயல வில்லை.மேலும் காதலியை சந்தி க்கவும் இயலவில்லை. இதனால் மிகுந்த மன அழு த்தத்திற்கு ஆளான நவீன் குமார் தழுதாளப்பட்டி அய்யனார் கோவில் அருகா மையில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார்.இதுகுறித்து அவரது தந்தை வடிவேல் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைத்தனர்.

    ×