என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சியில் இளைஞர் தற்கொலை
- திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
- 8 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி,
திருச்சி மணச்சநல்லூர் கீழூர் மூவரையன் பாளை யம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி.இவரது மகன் ஹரிகிரு ஷ்ணன் (வயது 23). இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.அதைத் தொடர்ந்து பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. ஆனால் ஹரிகிருஷ்ணன் திருமணம் செய்து கொள்ள விரும்ப வில்லை.இருப்பினும் பெற்றோர் பெண் தேடி வந்ததால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். பின்னர் வீட் டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.
பெற்றோர்கள் அவரை மீட்டு மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல் சிகிச்சை க்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .கடந்த 8 தினங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்த போதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஹரி கிரு ஷ்ணன் பரிதாபமாக இற ந்தார்.இது குறித்து அவரது தந்தை ரங்கசாமி மணச்சந ல்லூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






