என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக் காதலனுடன் குடும்பம் நடத்தி வந்த பெண் தற்கொலை
- கணவரை பிரிந்து கள்ளக் காதலனுடன் குடும்பம் நடத்தி வந்த ெபண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
மண்ணச்சநல்லூர்,
சமயபுரம் மாடக்குடி பகுதியில் உள்ள வ உ சி நகரை சேர்ந்த பஷீர் (வயது 48) இவர் மனைவி பாத் திமா (43).இவர்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் இனாம் சமயபுரம் முத்து ராஜா தெருவை சேர்ந்த குமரன் (31) கூலி வேலை செய்து வருகிறார். மேலும் குமரனுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் குமரனு க்கும் பாத்திமாவுக்கு பழக் கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.இதில் ஒரு கட்டத்தில் பாத்திமா தனது கணவரை விட்டு பிரிந்து குமரனுடன் நம்பர் ஒன் டோல்கேட் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.இதையடுத்து இருவரு க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்ப டுகிறது.இதனால் மனமுடைந்த பாத்திமா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்வி சிறியில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய குமரன் தூக்கில் தொங்கி யபடி இருந்து பாத்திமாவை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மேலும் இது குறித்து நம்பர் ஒன் டோல்கேட் கொள்ளிடம் காவல் நிலை யத்திற்கு நேரில் சென்று தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் கொள்ளி டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்ச ம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






