search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state govt"

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். #steliteprotest #RajnathSingh
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பல அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த சம்பவத்துக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது, துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாகவும், தற்போது தூத்துக்குடியில் நிலவும் சூழ்நிலை குறித்தும் தமிழக அரசு விரிவான விளக்கத்தினை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.



    மேலும், தூத்துக்குடி மக்கள் அமைதி காக்குமாறும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். #steliteprotest #RajnathSingh
    ×