search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sports"

    • தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சுமார் 50 டிபென்டோ விளையாட்டு வீரர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்.
    • நிறைவு விழாவில் அனைவருக்கும் சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அமைச்சுர் டிபன் டோ ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான நடுவர்களுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கம் 3 நாட்கள் கவுண்டன் பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இதில் டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, புதுவை, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சுமார் 50 டிபென்டோ விளையாட்டு வீரர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியினை புதுவை மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரும் டிபன் டோ சங்கத்தின் தலைவருமான கராத்தே சுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    மேலும் நிறைவு விழாவில் அனைவருக்கும் சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கினார். இதில் டெல்லியில் உள்ள பாரத்யா டிபென்டோ அலையன்ஸ் அசோசியேஷன் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மிதுன் யாதவ் மற்றும் புதுவை மாநிலத்தின் பொதுச் செயலாளர் ரகுமான் சேட்டு மற்றும் பயிற்சியாளர்கள் அசாருதீன், ரியாஸ்தீன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் மாணவர்கள் விளையாட்டு மையங்களில் சேர தகுதி போட்டிகள் 24-ந்தேதி நடக்கிறது.
    • மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    விருதுநகர்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயி லும் மாணவ-மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல் வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தரும புரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல் பட்டு வருகின்றன.

    மாணவர்களுக்கான முதன்மை நிலை விளை யாட்டு மைய விடுதிகள் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், திருச்சி (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.இதேபோல் மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி கள் சென்னை, ஜவஹர் லால் நேரு விளையாட்டு அரங்கம், மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    மாணவ- மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்தூவச்சாரியில் செயல்பட்டு வருகிறது.

    மேற்காணும் விளை யாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கை நடைபெ றும்.

    முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24-ந்தேதி காலை 7 மணிக்கு விருதுநகர் மாவட்ட விளை யாட்டு அரங்கில் நடக்கிறது.

    • கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
    • கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பலமுரு பல்கலைக்கழக துணை வேந்தர் லட்சுமிகாந்த் ரத்தோடு மற்றும் சென்னை யில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் நிறுவன தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    கல்லூரியின் தலைவர் செந்தில்குமார், ஆலோசகர் பேராசிரியர் கோதண்ட பாணி, நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்க ளும், சான்றித ழ்களும் வழங்கப்பட்டது.

    இதில் கல்லூரி துணை முதல்வர் கலைமணி சண்முகம் மற்றும் கல்விப்புல தலைவர் ருக்மாங்கதன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில் மற்றும் உதவியாளர் சதீஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது
    • மவுண்ட் சீயோன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மவுண்ட சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 22வது ஆண்டு விழா போட்டியின் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைப்பெ ற்றது.டீன் முனைவர் எஸ்.ராபின்சன் வரவேற்பு ரையாற்றினார். கல்வி நிறுவனத்தின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் ஒலிம்பிக் கொடியையும், இயக்குநர் முனைவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் தேசிய கொடியையும் ஏற்றினர். இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் கல்லூரி கொடியை ஏற்றி வைத்தார்.

    தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் ஆண்டுவிழா போட்டியை தொடங்கி வைத்தார். ஒலிம்பிக் ஜோதியை நான்கு ஹவுஸ் கேப்டன்கள் மற்றும் எமரால்டு குழுவினர் ஏந்திச் சென்று, ஒலிம்பிக் ஜோதி பீடத்தில் வைத்தனர்.மின்னியில் மற்றும் மின்னணு பொறியியல் துறைத் தலைவர் டி.திவ்ய பிரசாத் வரவேற்புரையாற்றினார். மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனத்தின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமையுரையாற்றினார்.

    இயக்குநர் டாக்டர். ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், கல்வி ஒருங்கிணைப்பாளர் விவியன் ரேச்சல் ஜெய்சன், முதல்வர் முனைவர் பி.பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜ சோழன் அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் சர்வதேச கூடைப்பந்து நடுவர் முனைவர் ரமேஷ்குமார் துரைராஜு கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.மாணவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பல கட்டங்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கட்டமைப்பு பொறியியல் துறை தலைவர் ராதா நன்றியுரை ஆற்றினார்.

    • சாகிர் உசேன் கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
    • தமிழ்த்துறை தலைவர் இப்ராகிம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள சாகிர் உசேன் கல்லூரியின் 53-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா வாழ்த்துரை வழங்கினார்.

    உடற்கல்வி இயக்குநர் காளிதாசன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கல்லூரி செயலர் பொன்னாடை அணிவித்தார். சிறப்பு விருந்தினராக இளையான்குடி பாரத ஸ்டேட் வங்கி தலைமை மேலாளர் காயத்ரி கலந்து கொண்டு பேசினார். பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பல்கலைக்கழக அளவில் மற்றும் கல்லூரியில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு வழங்கினார். ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அப்துல் சலீம், அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் சபினுல்லாகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை தலைவர் இப்ராகிம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற தடகள மாணவர்கள் 59 பேர் தேர்வு செய்யபட்டுள்ளனர்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்படும்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான விளையாட்டு மையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த தடகள பயிற்சிக்கான தேர்வு போட்டியினை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் தொடங்கி வைத்தார்.

    இதில் பயிற்சியாளர்கள் துர்கா (தடகளம்), பரணி (டேக்வாண்டோ), உடற்கல்வி ஆசிரியர்கள், தற்காலிக பயிற்சியாளர்கள் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நடத்தினர். தடகள போட்டிகளில் மாவட்டத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் 100க் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பாக செயல்பட்ட 35 மாணவர்கள், 24 மாணவிகள் என மொத்தம் 59 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்படும். அவர்களுக்கு 11 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவர் என மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்தார்.


    • சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாநில அணிகளுக்கு பரிசு

    பெரம்பலூர், 

    தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு, மாநில பாரா வாலிபால் சங்கம், ஈரோடு மாவட்ட வாலிபால் சங்கம், உணர்வுகள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் சேம்பியன்ஷிப்-2023 போட்டி பெரம்பலூரில் 2 நாட்கள் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டிக்கான தொடக்க விழாவில், ஆல்மைட்டி பள்ளி தாளாளர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகர், மாநில தலைவர் மக்கள்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல் நாள் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயற்கன்னி துவக்கி வைத்தார். இதில் ஜார்கண்ட், ராஜஸ்தான், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஹிரியானா, இமாச்சலபிரதேசம், தெலுங்கனா உட்பட 20 மாநிலங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.ஆண்கள் பாராவாலி போட்டியில் கர்நாடகா முதல் இடமும், ராஜஸ்தான் 2ம் இடமும், தமிழ்நாடு 3ம் இடமும், ஹரியானா 4ம் இடமும் பெற்றன. பெண்கள் பாரா வாலி போட்டியில் ராஜஸ்தான் முதலிடமும், ஜார்கண்ட 2-ம் இடமும், கர்நாடகா 3-ம் இடமும், ஹரியானா 4-ம் இடமும் பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயங்களும், பெரம்பலூர் ஐஓபி, அஸ்வின்ஸ் குழுமம், உதவியுடன் வழங்கப்பட்டது. பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, தமிழ்நாடு பாரா வாலி சங்க துணைசெயலாளர்கள் ஜெயபிரபா, கண்ணன், மாநில நடுவர்குழு தலைவர் ஜாபர், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், பாராவாலி பெரம்பலூர் மாவட்ட தலைவர் ரஞ்சித்குமரன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் சீனீவாசன் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி துணைத்தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் சிவக்குமார், சங்கீதா கோபிநாத், பள்ளி முதல்வர் ஹேமா, ஆசிரியர்கள் சந்திரோதயம், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெற்றவர்களுக்கு பண பரிசு வழங்கப்பட்டது
    • 28அணிகள் கலந்து கொண்டு விளையாடின

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான இறகு பந்து போட்டி பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தின் உள்ளரங்கில் நேற்று நடந்தது. ஆண்களுக்கு இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மொத்தம் 28 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் இடத்தை பிடித்த அணியின் வீரர்களுக்கு தலா ரூ.15 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த அணியின் வீரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 3, 4-ம் இடம் பிடித்த அணியின் வீரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

    • முதல்வர் கோப்பைக்கான போட்டியில் மாவட்ட அளவிலான வெற்றி பட்டியலில் இடம் பிடித்தனர்
    • பள்ளி தாளாளர் மாணவர்களை பாராட்டினார்

    திருச்சி,

    திருச்சி மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ஹாக்கி போட்டியில் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மணப்பாறை தியாகேஸ்வரர் ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் மோதி மூன்றாம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதைத்தொடர்ந்து சாதனை படைத்த மாணவர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆர். சி.பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்பணி சின்னப்பன அடிகளார் பாராட்டினார். பயிற்சிக்கு ஊக்கமளித்த உடற்கல்வி இயக்குனர் ஆசிரியர் ஜான் சபரி ராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்லஸ் ரேமண்ட் மற்றும் ஜீவானந்தம் ஆகியோரையும் அவர் வாழ்த்தினார். இந்த நிகழ்வில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் ஆசிரியர் சங்க செயலர் லூயிஸ் மற்றும் பொருளாளர் வின்சென்ட் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி மகிழ்ந்தனர்.

    விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் புதுவை ஒலிம்பிக் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் புதுவை ஒலிம்பிக் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    புதுவை மாநில ஒலிம்பிக் சங்க தலைவரான அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    விளையாட்டு துறை புதுவையில் விளையாட்டுத்துறை ஏற்படுத்த வேண்டும். பட்ஜெட்டில் விளையாட்டுக்கு 5 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும். அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு கிராமம் ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிக்கைகள் குறித்து உடனடியாக ஆவண செய்வதாக உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியின் போது சங்க நிர்வாகிகளான சிவசங்கரன் எம்.எல்.ஏ., கராத்தே வளவன், செயலாளர் தனசேகர், பொருளாளர் நாராயணசாமி, கபடி சங்கம் ஜெயராமன், சி.இ.ஓ. சங்க முத்து கேசவன், துணை தலைவர்கள் குணசேகரன், கோபு ஜெயபால், பூபாலன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

    • நாளை மறுநாள் தொடங்குகிறது
    • போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நாளை மறுநாள் முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2222 - 2023 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கு மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாளை மறுநாள் 8ம் தேதி தடகளம். சிலம்பம். கைப்பந்து ஆகிய போட்டிகளும் 11ம் தேதி கிரிக்கெட் 13ம் தேதி கபடி, இரவு பந்து, கைப்பந்து போட்டியிலும் 22ம் தேதி நீச்சல், கால்பந்து போட்டிகளிலும் 28ம் தேதி வலைப்பந்து, மேஜை பந்து போட்டிகளும் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன.கல்லூரி மாணவ மாணவி களுக்கான இம்மாதம் 9ம் தேதி தடகளம், கபடி, சிலம்பம், இறகுபந்து 15ம் தேதி கையுறைபந்து, கால்பந்து இறகு பந்து, கபடி, எறி பந்து போட்டிகள் காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளன. மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தலா 3ஆயிரம் இரண்டாம் பரிசாக தலா 2ஆயிரம் மூன்றாம் பரிசாக தலா ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடம் பெறுவோரும், குழு போட்டிகளில் தேர்ந்தெடு க்கப்பட்ட வீரர் வீரர்களுக்கும் மாநில போட்டிகளில் அரசு செலவில் பங்கேற்க அனுமதி க்கப்படுவர். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீரா ங்கனைகள் மாநில அளவிலான போட்டி களுக்கு அனுப்பி வைக்கப்ப டுவர். எனவே போட்டிகளில் கலந்து கொள்ள காலை 8 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703516 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்

    • ஜெய்ப்பூர் மகாகேல் விளையாட்டில் 6400-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
    • இதுபோன்ற முன்முயற்சிகள் விளையாட்டுத் திறன்களைக் கண்டறிந்து வளர்ப்பதற்கு உதவுகின்றன என்று பிரதமர் கூறினார்.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ஜெய்ப்பூர் மகாகேல்' என்ற விளையாட்டு விழா, 2017ஆம் ஆண்டு முதல் ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதி மக்களவை உறுப்பினர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் இந்த ஆண்டு மகாகேல் விளையாட்டு விழா, கபடிப் போட்டியில் கவனம் செலுத்தி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தேசிய இளைஞர் தினமான ஜனவரி 12ம் தேதி போட்டி தொடங்கியது. இதில் 450-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஜெய்ப்பூர் ஊரக மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 8 சட்டபேரவைத் தொகுதிகளின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 6400- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில் ஜெய்ப்பூர் மகாகேல் விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர்களிடையே பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார்.

    விளையாட்டு போட்டி விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவின் ஒரு பகுதியாக வைஷாலி நகர் சித்ரகூடம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    விழாவில் பேசிய பிரதமர் மோடி, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இளைஞர்களை அரசு ஊக்குவிப்பதாக கூறினார்.

    மேலும், 'ஜெய்ப்பூர் மகாகேல் விளையாட்டுத் திறமையின் கொண்டாட்டம். இத்தகைய முயற்சிகள் விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கின்றன. இந்த நிகழ்வில் பங்கேற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற முன்முயற்சிகள் விளையாட்டுத் திறன்களைக் கண்டறிந்து வளர்ப்பதற்கு உதவுகின்றன என்றும் பிரதமர் கூறினார்.

    ×