search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SLvPAK"

    • அப்ரிடிக்கு பதிலாக ஹாரிஸ் ரவுஃப் களமிறங்குகிறார்.
    • இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனாவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்க மாட்டார்.

    பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அப்துல்லா ஷபீக் தேர்வு செய்யப்பட்டார்.

    இலங்கை அணிக்கு எதிராக 341 ரன்கள் சேசிங் செய்ததன் மூலம் பாகிஸ்தான் அணி அதிக ரன்கள் சேசிங் செய்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் இதே அணிக்கு எதிராக 382 ரன்கள் பாகிஸ்தான் அணி சேசிங் செய்துள்ளது.


    இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஹாரிஸ் ரவுஃப் களமிறங்குகிறார். இது அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனாவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்க மாட்டார் என்பதை இலங்கை கிரிக்கெட் போர்ட் தெரிவித்தது.

    • பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் 160 ரன்கள் குவித்தார்.
    • பாபர் அசாம் 2-வது இன்னிங்சில் அரை சதம் அடித்து வெளியேறினார்.

    பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 16-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக சண்டிமால் 76 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 218 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை தரப்பில் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 4 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 337 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சண்டிமால் 94 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நவாஷ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரனான அப்துல்லா ஷபீக் 160 ரன்கள் குவித்தார். பாபர் அசாம் அரை சதம் அடித்து வெளியேறினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி 24-ந் தேதி தொடங்குகிறது.

    • இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 337 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 120 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    காலே:

    பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

    4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 329 ரன்களை எடுத்து இருந்தது.

    இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இலங்கை அணி மேலும் 8 ரன்கள் சேர்த்த நிலையில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சண்டிமால் 94 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டும், யாசீர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபிக் - இமாம் உல் ஹக் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

    இமாம் உல் ஹக் 35 ரன்னிலும், அசார் அலி 6 ரன்னிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து இறங்கிய பாபர் அசாம் அரை சதமடித்து 55 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷபிக் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபிக் 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதி நாளான இன்று வெற்றிக்கு 120 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் பாகிஸ்தான் கைவசம் 7 விக்கெட்கள் மீதம் உள்ளதால் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    • இலங்கை அணியின் 2வது இன்னிங்சில் சண்டிமால், குசால் மெண்டிஸ், பெர்னாண்டோ அரை சதமடித்தனர்.
    • பாகிஸ்தானின் முகமது நவாஸ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    கெல்லே:

    பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார். தீக்ஷனா 38 ரன்னும், பெர்னாண்டோ 35 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், மெண்டிஸ், தீக்‌ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    4 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் நேற்று நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஒஷாடா பெர்னாண்டோ அரை சதமடித்து 64 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 76 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஒஷாடா பெர்னாடோ, குசால் மெண்டிஸ் ஜோடி 91 ரன்கள் சேர்த்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சண்டிமால் நிதானமாக ஆடி அரை சதமடித்தார்.

    இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன்களை எடுத்துள்ளது. சண்டிமால் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டும், யாசீர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சதமடித்து அசத்தினார்.

    கெல்லே:

    பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார். தீக்ஷனா 38 ரன்னும், பெர்னாண்டோ 35 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார். பாபர் அசாம், நசீம் ஷா ஜோடி 10-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், மெண்டிஸ், தீக்‌ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை, இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    கெல்லே:

    பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாடா பெர்னாண்டோ, கேப்டன் கருணரத்னே களமிறங்கினர். கருணரத்னே ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் 21 ரன்னில் நடையைக் கட்டினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பெர்னாண்டோ 35 ரன்னில் ஆட்டமிழந்தார். ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சண்டிமால் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். 76 ரன்னில் அவர் வெளியேறினார். கடைசி கட்டத்தில் தீக்ஷனா 38 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை விளையாடியது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இலங்கை தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணியின் ஜெயசூரியா 12 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதற்கான டெஸ்ட் அணியை இலங்கை அணி அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட்டில் இலங்கை அணி வரலாற்று வெற்றி பெற்றது. அந்த டெஸ்ட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முக்கியமாக ஜெயசூரியா 12 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் போட்டியிலேயே அவரின் பந்து வீச்சு ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களை திணறடித்தது.

    இதனால் இலங்கை அணி அதிக நம்பிக்கையுடன் பாகிஸ்தானை எதிர் கொள்ளும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இலங்கை தற்போது மூன்றாவது இடத்திலும் பாகிஸ்தான் நான்காவது இடத்திலும் உள்ளது.

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி:

    கருணாரத்னே (கேப்டன்), பதும் நிசங்கா, ஓஷத பெர்னாண்டோ, மேத்யூஸ், குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா, தினேஷ் சண்டிமால், ரமேஷ் மெண்டிஸ், தீக்க்ஷனா, கசுன் ரஜிதா, விஷ்வா பெர்னாண்டோ, அஜிசா பெர்னாண்டோ, டில்சன் மதுஷங்க, பிரபாத் ஜெயசூரியா, துனித் வெல்லலகே, ஜெப்ரி வான்டர்சே.

    ×