search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivan"

    மீனவர்களுக்கான புதிய செயலியை தமிழக அரசிடம் வழங்கி உள்ளோம். அவர்கள் பயன்படுத்துவதை பொறுத்து மேலும் மேம்படுத்த முயற்சி செய்வோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். #ISRO #ISROChairman
    ஆலந்தூர்:

    இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.எல்.வி-எப் 11 ராக்கெட் மூலமாக ஜி.சாட்7ஏ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 35 நாட்களில் 3-வது செற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

    இது 3-வது தொலைதொடர்பு செயற்கைகோள். நவீன தொழில்நுட்பத்துடன் 6 மாதம் கூடுதலாக இயங்கக்கூடியது. அடுத்த வருடம் இன்னும் அதிகமான செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டிருக்கிறோம்.



    மீனவர்களுக்கான செயலியை தமிழக அரசிடம் வழங்கி உள்ளோம். அவர்கள் பயன்படுத்துவதை பொறுத்து அதை இன்னும் மேம்படுத்த முயற்சி செய்வோம். மங்கள்யான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #ISROChairman

    இஸ்ரோ தலைவர் சிவன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், சந்திராயன்-2 அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளார். #ISRO #Chandrayaan-2
    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சந்திராயன்-2 செயற்கை கோளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    சந்திராயன்-2 செயற்கை கோளின் எடை 3 ஆயிரத்து 850 கிலோவாக உயர்த்தப்பட்டதால், ஜி.எஸ்.எல்.வி.எம்.கே-2 ரக விண்கலத்தில் செலுத்த முடியாது எனவும், இதற்காக ஜி.எஸ்.எல்.வி.எம்.கே 3 மறுவடிவமைப்பு செய்யப்படுவதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.



    மேலும், காலநிலை ஒத்துழைக்காவிட்டால், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 பிப்ரவரி 16-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் தென் துருவத்தை அடைய இருக்கும் செயற்கை கோள்  சந்திராயன்-2 எனவும், இது 40 நாள்கள் பயணித்து தனது இலக்கான நிலவை அடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த செய்தியாளர் சந்திப்பில், மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் உடன் இருந்தார். #ISRO #Chandrayaan-2
    இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாயின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலை இஸ்ரோ தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது. #ISRO #VikramSarabhai
    பெங்களூரு:

    குஜராத் மாநிலத்தில் பிறந்தவரான விக்ரம் சாராபாய் இங்கிலாந்தில் இயற்கை அறிவியலில் படித்து வந்த போது, இரண்டாம் உலகப்போர் மூண்டதால் நாடு திரும்பி, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்தார். 

    சி.வி.ராமனின் வழிகாட்டுதலில் காஸ்மிக் கதிர்களின் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். போர் முடிந்ததும், இங்கிலாந்தில் படிப்பைத் தொடர்ந்தார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு, நாடு திரும்பினார்.

    இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை (INCOSPAR) தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக விக்ரம் சாராபாய் நியமிக்கப்பட்டார். 1969-ல் இதற்கு மாற்றாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக ராக்கெட்டை வடிவமைத்து, அதைச் சோதிப்பதற்கான திட்டங்களை அவர் வகுத்தார்.

    இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை என்று அழைக்கப்பட்ட விக்ரம் சாராபாயின் 99-வது பிறந்த நாள் விழா பெங்களூரு இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அவரின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    சந்திரயான்–2 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். #Chandrayaan2 #ISRO #Sivan
    கன்னியாகுமரி:

    இஸ்ரோ தலைவர் சிவன் தனது சொந்த ஊரான நாகர்கோவில் சரக்கல்விளையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

    இஸ்ரோ இந்த ஆண்டு பலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதில் முக்கியமான ஒன்று ஜிசாட்–29 எனும் செயற்கைகோளை விண்ணுக்கு செலுத்துவது. இதன் சிறப்பு அம்சம் என்னவெனில், இந்த செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி.மார்க்3–2 என்ற மிகப்பெரிய ராக்கெட் மூலமாக விண்ணுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த செயற்கைகோளை அதிவேக இணையதள பயன்பாட்டுக்காக இஸ்ரோ அனுப்ப உள்ளது. அடுத்தகட்டமாக ஜிசாட்–7ஏ, எமி சாட், ஓசன் சாட் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த உள்ளோம்.

    ஜி.எஸ்.எல்.வி.மார்க்3–2 என்பது ஜி.எஸ்.எல்.வி.மார்க் 3 ராக்கெட்டின் 2–ம் கட்ட வடிவமைப்பு. மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் வகையில் இந்த ராக்கெட்டை உருவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நிறைய தொழில்நுட்பங்களை உருவாக்கவேண்டி உள்ளது.

    ஏற்கனவே ஒருமுறை இதுபோன்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணுக்கு சென்று திரும்பி வந்த ராக்கெட் கடலில் விழுவது போன்று வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது, இந்த ராக்கெட் பத்திரமாக தரையில் வந்திறங்கும்படி உருவாக்க பணிகள் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு 10 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். அதில் 2 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுவிட்டன. அடுத்த ஆண்டு 13 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும்.

    சந்திரயான்–2 விண்கலத்தை அனுப்புவதற்கான பணி 50 சதவீதத்துக்கும் மேல் முடிந்துவிட்டது. அடுத்த ஆண்டில் விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    மங்கள்யான்–2 குறித்து பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளது. அந்த தகவல்களை விஞ்ஞானிகளுக்கு அனுப்பி அவர்களின் கருத்துகள் பெறப்படும். பின்னர், அவை பரிசீலிக்கப்பட்டு திட்டத்தின் இறுதி வடிவம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசின் ஒப்புதலுக்கு பிறகு, ஆய்வு நடைபெற்று திட்டப்பணிகள் நடைபெறும். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் பற்றி பல ஆய்வுகள் நடத்தி வருகிறோம். இதில் சுற்றுச்சூழல் பாதிப்பு, மனிதனின் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்யவேண்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Chandrayaan2 #ISRO #Sivan
    ×