search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siththar"

    • இந்த ஆலயத்தில் தைப்பூச பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • மற்றும் தங்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டியதாக மகிழ்வுடன் கூறுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் குடிகொண்டுள்ள அருள்மிகு முருகப்பெருமாள், வள்ளி, தேவயானைக்கு பால் காவடி எடுத்து

    கோவிலின் வெளிச்சுற்றை வலம் வந்து பால் மற்றும் அபிஷேகத்திற்குரியனவான பொருட்களால் அபிஷேக ஆராதனை

    செய்தால் உடனே புத்திர பாக்கியம் கிட்டுவதாக நம்பி இக்கிராமத்து மக்கள் விழா நடத்த ஆரம்பித்தனர்.

    மற்றும் தங்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டியதாக மகிழ்வுடன் கூறுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் தைப்பூச பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலயத்தில் நடைபெற்று வரும் விசேஷங்கள், மாதாந்திர விசேஷங்கள், தமிழ் வருடப்பிறப்பு, பவுர்ணமி,

    கிருத்திகை, பிரதோஷம், சித்ரா பவுர்ணமி, விநாயக சதுர்த்தி, கந்தர்சஷ்டி, சிவராத்திரி, கார்த்திகை தீபம்,

    ஆருத்ரா தரிசனம், தைப்பூசம் போன்ற விழாக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    • தாத்ரீ என்றால் நெல்லி என்று பொருள்.
    • இந்த சிவாலயத்தில் அருள்புரியும் தாத்ரீஸ்வரர் இருந்த இடம் நெல்லி மரங்கள் இருந்த இடம்.

    தாத்ரீ என்றால் நெல்லி என்று பொருள்.

    இந்த சிவாலயத்தில் அருள்புரியும் தாத்ரீஸ்வரர் இருந்த இடம் நெல்லி மரங்கள் இருந்த இடம்.

    ஒரு நெல்லி மரத்தினடியில் இச்சிவனார் அமர்ந்திருந்ததால் இவருக்கு நெல்லி அப்பர் என்ற பெயர் வழங்கலாயிற்று.

    பூவைப் போன்ற மென்மையான கூந்தலை உடையவளாய் அன்னை காணப்பட்டதால் அன்னையின் பெயர் வடமொழியில் பிரசூன குந்தளாம்பிகை என்றும், தமிழில் பூங்குழலி அம்மை எனவும் வழங்கலாயிற்று.

    மற்றொரு சிறப்பு என்னவெனில் இந்த சித்துகாடு, சித்தர்காடு, திருமணம் கிராமம் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

    தாத்ரீஸ்வரருக்கு நெல்லிச் சாறால் அபிஷேகம் செய்தும், அன்னை பிரசூன குந்தளாம்பிகைக்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து, மங்கலப் பொருட்களுடன் இறைவனுக்கும், இறைவிக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால் கால தாமதமான திருமணங்கள், தடைபட்ட திருமணங்கள் வெகு விரைவில் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

    இவ்வாறு தடைபட்ட, நாட்கள் கடந்த திருமணங்களை வழிபாடு செய்து நிறைவேற்றக் கோரும் பக்தர்கள் சுவாதி நட்சத்திரத்திலோ, அல்லது அவரவர்களது பிறந்த நட்சத்திர நாட்களிலோ செய்து கொள்வது நல்லது.

    • பூங்குழலி அன்னைக்கு பச்சை வஸ்திரம் வளையல்கள் அணிவித்து வழிபட்டால் திருமணம் கைகூடும்.
    • ஏழை-எளியவர்களுக்கு தானம் செய்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    இந்த ஊரில் சிவாலயமும், விஷ்ணு தலமும் அருகருகே அமைந்திருப்பதால் மேலும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் தலமாக சித்தர் காடு - திருமணம் ஊர் திகழ்கிறது.

    குறிப்பாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அந்த நட்சத்திர நாளில் இத்தலத்துக்கு வந்து குபேரனுக்கு

    நெல்லிகாய் ஊறுகாயுடன் தயிர் சாதம், புளியோதரை படைத்து வழிபட்டு, அதை ஏழை-எளியவர்களுக்கு

    தானம் செய்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    திருமணத் தடையால் வேதனையில் இருப்பவர்கள் இத்தலத்துக்கு வந்து நெல்லியப்பருக்கு நெல்லிச்சாறு,

    நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்தும், பூங்குழலி அன்னைக்கு பச்சை வஸ்திரம், வளையல்கள்

    அணிவித்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    சித்தர்களே இந்த பரிகார வழிபாடுகளை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.

    அதனாலேயே இந்த ஊருக்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

    படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் என்ற சித்தர்கள் இங்கு தவம் செய்தனர்.

    அவர்கள் இங்கிருந்த நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, நெல்லியப்பர் என்ற பெயர் சூட்டினர்.

    சமஸ்கிருதத்தில் நெல்லியை தாத்திரி என்பர். எனவே இவர் தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

    சிறந்த மலர்ச்செடிகளால் மணம் பொருந்திய வனத்தில் சிவன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டது.

    சித்தர்கள் வசித்ததால் சித்தர்காடு எனப்பட்ட தலம், சித்துக் காடு என மருவியது. தற்போது இப்பெயரே வழக்கில் உள்ளது.

    • இவரை சுற்றி வந்து வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகமாகும்.
    • இத்தலத்தில் கருடக்கொடி சித்தர் பல ஆண்டுகள் வசித்ததாக சுவடி தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அம்பாள் சன்னதிக்கு வலதுபுறம் ஆதிசங்கரர் சன்னதிக்கு நேர் எதிரில் உள்ள தூண்களில் ஒரு தூணில் ஸ்ரீ படுக்கை ஜடை சித்தரின் உருவம் உள்ளது.

    இவரை சுற்றி வந்து வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகமாகும்.

    சிவனுக்கு நேர் எதிரில் நந்தி பகவான் 4 தூண்கள் தாங்கியிருக்கும் சிறு மண்டபத்தில் உள்ளார்.

    இந்த நந்தி சாந்தமாக இருப்பதால் அவருக்கு மூக்கணாங்கயிறு கிடையாது.

    இந்த நந்தி மண்டபத்தின் வலது புறத் தூணில் ஸ்ரீ பிராணதீபிகா சித்தரின் உருவம் இடம் பெற்றுள்ளது.

    இவரை வழிபட்டால் இருதயம் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கையாகும்.

    இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

    அடுத்து மூன்றாவதாக அறியப்பட்டுள்ள ஸ்ரீ கருடக்கொடி சித்தர் உருவம் அருகில் உள்ள ஸ்ரீசுந்தரவல்லி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் கல்தூணில் உள்ளது.

    இத்தலத்தில் கருடக்கொடி சித்தர் பல ஆண்டுகள் வசித்ததாக சுவடி தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அங்குள்ள திருக்குளத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாக குறிப்புகள் உள்ளன.

    பெருமாள் கோவில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள ஆண்டாள் சன்னதி தூணில் இந்த சித்தரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

    சனிக்கிழமைகளில் கருடக்கொடி சித்தருக்கு அபிஷேகம் செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கண் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாகும்.

    சமீப காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களும், கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தலங்களுக்கு வருவது அதிகரித்தப்படி உள்ளது.

    • சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் நெல்லி மரங்கள் கொண்ட வனமாக இருந்தது.
    • அந்த பிரகாரத்தில் உள்ள தூண்களில்தான் சித்தர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் நெல்லி மரங்கள் கொண்ட வனமாக இருந்தது.

    ஒரு நெல்லி மரத்தின் அடியில் சித்தர்கள் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

    அந்த லிங்கத்துக்கு "நெல்லியப்பர்" என்று சித்தர்கள் பெயர் சூட்டியிருந்தனர்.

    நெல்லியை சமஸ்கிருதத்தில் "தாத்திரி" என்பார்கள்.

    அதன்படி இந்த இறைவன் தாத்திரீஸ்வர் என்றும் அழைக்கப்படுகிறார்.

    தாத்திரீஸ்வரருக்கு இடது புறம் தென் திசையை பார்த்தவாறு பூங்குழலி அம்மைக்கு தனி சன்னதி அமைத்து சித்தர்கள் வழிபட்டனர்.

    வட மொழியில்இந்த அன்னை, ஸ்ரீபிரசூன குந்தளாம்பிகை என்று அழைக்கப்படுகிறார்.

    பாண்டிய மன்னர்கள் நெல்லியப்பரையும், பூங்குழி அம்மையையும் பிரதானமாக வைத்து ஆலயத்தை கட்டிய போது கருவறையை சுற்றி ஒரு பிரகாரம் அமைத்தனர்.

    அந்த பிரகாரத்தில் உள்ள தூண்களில்தான் சித்தர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு தூணிலும் 4 சித்தர்கள் வீதம் பல சித்தர்களின் உருவங்களை அங்கு காண முடிகிறது.

    அந்த சித்தர்கள் அந்த பகுதியில் ஒன்றாக ஜீவ சமாதியாகி அடங்கி இருக்கலாம் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

    ஆனால் ஆலய அர்ச்சகர்கள் உள்பட மற்றொரு சாரார் அதை மறுக்கிறார்கள்.

    என்றாலும் சித்தர்கள் அங்கு இருந்தனர் என்பது உறுதியாகி உள்ளது.

    முதல் கட்டமாக 9 சித்தர்கள் பற்றி தெரிய வந்துள்ளது.

    அவர்களில் 3 பேரின் பெயர்கள் ஸ்ரீபடுக்கை ஜடை சித்தர், ஸ்ரீபிராண தீபிகா சித்தர், கருடக்கொடி சித்தர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    • இந்த இரு ஆலயங்களையும் உருவாக்கியதே அங்கு வாழ்ந்த சித்தர்கள்தான்.
    • குறிப்பாக தாத்திரீஸ்வரர் ஆலய தூண்களில் நிறைய சித்தர்கள் உள்ளனர்.

    இந்த ஊரில் உள்ள "தாத்திரீஸ்வரர்" ஆலயமும் "ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள்" ஆலயமும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெருமைக் கொண்டது.

    இந்த இரு ஆலயங்களையும் உருவாக்கியதே அங்கு வாழ்ந்த சித்தர்கள்தான்.

    நூற்றுக்கணக்கான சித்தர்கள் ஒருங்கே இத்தலத்தில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.

    அவர்களைப் பற்றிய தகவல்கள் இப்போதுதான் கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் தெரியத் தொடங்கியுள்ளது.

    1972ம் ஆண்டு சுவடிகள் மூலம்தான் இங்கு உறைந்துள்ள சித்தர்கள் பற்றி கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஆன்மிக ஆய்வாளர்கள் சித்தர் காட்டில் முகாமிட்டு இரு ஆலயங்களிலும் அங்குலம், அங்குலமாக தோண்டித் துருவிப் பார்த்தனர்.

    அப்போது ஆலய கருங்கல் தூண்களில் சித்தர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டு பிரமித்துப் போனார்கள்.

    குறிப்பாக தாத்திரீஸ்வரர் ஆலய தூண்களில் நிறைய சித்தர்கள் உள்ளனர்.

    • மயிலாடுதுறையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது.
    • இதே போன்று ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம் ஒன்று சென்னையிலும் இருக்கிறது.

    சென்னையில் சித்தர்காடு இந்த ஊர் பெயரைக் கேட்டதும் பெரும்பாலானவர்களுக்கு, மயிலாடுதுறை மேற்கே காவிரி தென் கீழ்க்கரையின் ஓரம் அமையப் பெற்றுள்ள சித்தர்காடு எனும் ஊர்தான் நினைவுக்கு வரும்.

    மயிலாடுதுறையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது.

    இந்த ஊரில் சிற்றம்பல நாடிகள் என்பவர் தம் சீடர்களுடன் தங்கி இருந்தார்.

    அவர் சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று தமது 62 சித்தர்களுடன் ஒரே இடத்தில் ஜீவ சமாதி அடைந்தார்.

    அந்த இடத்தில் "ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் கோவில்" கட்டப்பட்டுள்ளது.

    63 சித்தர்களும் ஒரே இடத்தில் ஐக்கியமானதைக் குறிக்கும் வகையில் கருவறை சுற்றுச்சுவரில் 63 லிங்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இதே போன்று ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம் ஒன்று சென்னையிலும் இருக்கிறது.

    இந்த இடத்தையும் சித்தர்காடு என்றே அழைக்கின்றனர்.

    பூந்தமல்லி - பட்டாபிராம் இடையில் பைபாஸ் சாலையையொட்டிய பகுதியில் இந்த புண்ணிய தலம் அமைந்துள்ளது.

    தற்போது இந்த ஊர் சித்துக்காடு என்றும் திருமணம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஊரில் அடங்கியுள்ள சித்தர்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி இருப்பதால் சமீப ஆண்டுகளாக இந்த ஊர், பக்தர்கள் தேடி வரும் தலமாக மாறியுள்ளது.

    ×