search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Science fair"

    • செய்யது அம்மாள் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    • இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் அறிவியல் கண்காட்சி கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர். சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பெரியசாமி வரவேற்று பேசினார்.

    இதில் கல்லூரி அறக்கட்டளையைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அவர்களின் அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் இடம்பெறச் செய்தனர். 30க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வு படைப்புகள் இதில் இடம் பெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா செய்தார்.

    • புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியல் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி யை ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு தொடங்கி வைத்தார்.
    • மாணவர்கள் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சுமார் 500 படைப்புகளை உருவாக்கியும் இதனை பார்க்க வந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் படைப்பின் ஆற்றலை முன்மொழிந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி யை ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு தொடங்கி வைத்தார்.

    இதில் மழலையர் பிரிவு மாணவர்கள், தொடக்கப் பள்ளி பிரிவு மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாண வர்கள் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சுமார் 500 படைப்புகளை உருவாக்கியும் இதனை பார்க்க வந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் படைப்பின் ஆற்றலை முன்மொழிந்தனர்.

    சுகாதார முறை, கணிப்பொறி, காய்கறி மற்றும் பழங்களின் வகைகள், மீன் வளர்ப்பு முறைகள், காற்றாலை, மிருகக்காட்சி சாலை, சாலை விதிகள், ஆடைகளின் வகைகள், உணவின் முக்கியத்துவம், முதலுதவி, தகவல் தொடர்பு சாதனங்கள், ேபாக்குவரத்து சாதனங்கள், எலும்பு கூட்டின் அமைப்பு, எரிமலை குழம்பு, இதயம், நுரையீரல், வயிறு ஆகியவற்றின் செயல்பாடுகள் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை வடிவமைத்திருந்தனர். 

    • புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது.
    • பள்ளி மைதானத்தில் அரசு நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனையும் அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது.

    இதன் தொடக்கவிழா நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி, ரிப்பன்வெட்டி திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்த படைப்புகளிடம் விளக்கம் கேட்டார்.

    பள்ளி மைதானத்தில் அரசு நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டி ருந்தது. இதனையும் அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டார். அறிவியல் கண்காட்சியில் புதுவை அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் 400-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருந்தது.

    விண்வெளி, நீர் சேமிப்பு, சோலார் சிஸ்டம், பேட்டரி வாகனம், தாவர வளர்ப்பு என பல படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

    கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களிடம் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துரையாடினார். மாணவர்களின் சந்தேக ங்களுக்கு அவர் பதிலளி த்தார். மண்டல அளவிலான கண்காட்சி வருகிற 30-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகள் மாநில கண்காட்சியில் இடம்பெறுகிறது. மாநில அறிவியல் கண்காட்சி வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. 

    • பாகூர் தொகுதி மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • சண்முகமுருகன் திறந்து வைத்து மாணவர்களின் அனைத்து படைப்புகளையும் பார்வை யிட்டு பாராட்டினார்.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதி மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். கண்காட்சியை ஓய்வு பெற்ற துணை முதல்வர் சண்முகமுருகன் திறந்து வைத்து மாணவர்களின் அனைத்து படைப்புகளையும் பார்வை யிட்டு பாராட்டினார்.

    கண்காட்சியில் மாணவர்களின் 96 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் ஜெயசுந்தர், தென்னரசு, சசிக்குமார், சுமதிராகவன், பாவாடைசாமி, வினோத், சதீஷ், பாலிவிஜய், வினோத், வெங்கடேசன், சரிதா, செல்வபிருந்தா உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

    • காரைக்கால் பைபாஸ் சாலையில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கில் விண்வெளி அறிவியல் கண்காட்சியை நடைபெற்றது.
    • விண்வெளி அறிவியல் கண்காட்சியை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பைபாஸ் சாலையில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விண்வெளி அறிவியல் கண்காட்சியை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார். அருகில் அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்எல்ஏ நாஜிம், கலெக்டர் முகமது மன்சூர் மற்றும் பலர் உள்ளனர்.

    • திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை மனையியல் விரிவுரையாளர் தெய்வக்குமாரி செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை பள்ளியின் துணை முதல்வா கலாவதி மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற தாவரவியல் விரிவுரையாளர் ரோஸ் வீணவதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பள்ளி மாணவிகள் செய்திருந்த அறிவியல் படைப்புக்களை விரிவுரையாளர்கள் கலியமூர்த்தி, திருநாராயணன், ஜீவராஜீ, மரியராஜ்குமார் மற்றும் பட்டதாரி ஆசிரியைகள் தனபாக்கியம், விஜயலட்சுமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு படைப்புகளை மதிப்பீடு செய்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மனையியல் விரிவுரையாளர் தெய்வக்குமாரி செய்திருந்தார். அறிவியல் விரிவுரையாளர்கள் தனலட்சுமி, பபியோலா, நற்சோனை மற்றும் ஆசிரியர்கள், சிவக்குமார், ராஜராஜேஸ்வரி, மணி–மொழி, ஜாக்குலின், சிவப்பிரியா, விஜய–லட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

    • புதுவை அரசு கல்வி துறையின் அறிவுறுத்தின் பேரில், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும், சிந்தனையும் தூண்டும் வகையில் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளியின் துணைமுதல்வர் ஆஷாராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கல்வி துறையின் அறிவுறுத்தின் பேரில், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும், சிந்தனையும் தூண்டும் வகையில் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் 200 -க்கு மேற்பட்ட அறிவியல் படைப்பு களை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.

    பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளியின் துணைமுதல்வர் ஆஷாராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கண்காட்சியை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் கண்டுகளித்தனர்.

    பின்னர் இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை என மாணவர்களின் படைப்புகளை மதிப்பீட்டு, குழு ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.

    • பள்ளி மாணவ,மாணவிகள் 1500 பேர் கலந்து கொண்டனர்.
    • கண்காட்சியில் 200 அறிவியல் படைப்புகள் வைக்கப்பட்டு இருந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் மூன்று நாள் அறிவியல் கண்காட்சி நடைபெறஉள்ளது.இதற்கான துவக்கவிழா நடைபெற்றது.

    கோவை தனியார் நிறுவன நிர்வாகிகள் பி.ரமேஷ், கே.தில்லைசெந்தில்பிரபு ஆகியோர்அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தனர். இதில் கல்லூரி தலைவர் எம்.கோவிந்தசாமி, துணைத்தலைவர் டி.கே.கருப்பண்ணசாமி, கல்லூரி நிர்வாக அலுவலர் பேராசிரியர் அன்பரசு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ,மாணவிகள் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் 200 அறிவியல் படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

    ×