search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
    X

    அறிவியல் கண்காட்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

    • திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை மனையியல் விரிவுரையாளர் தெய்வக்குமாரி செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை பள்ளியின் துணை முதல்வா கலாவதி மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற தாவரவியல் விரிவுரையாளர் ரோஸ் வீணவதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பள்ளி மாணவிகள் செய்திருந்த அறிவியல் படைப்புக்களை விரிவுரையாளர்கள் கலியமூர்த்தி, திருநாராயணன், ஜீவராஜீ, மரியராஜ்குமார் மற்றும் பட்டதாரி ஆசிரியைகள் தனபாக்கியம், விஜயலட்சுமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு படைப்புகளை மதிப்பீடு செய்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மனையியல் விரிவுரையாளர் தெய்வக்குமாரி செய்திருந்தார். அறிவியல் விரிவுரையாளர்கள் தனலட்சுமி, பபியோலா, நற்சோனை மற்றும் ஆசிரியர்கள், சிவக்குமார், ராஜராஜேஸ்வரி, மணி–மொழி, ஜாக்குலின், சிவப்பிரியா, விஜய–லட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

    Next Story
    ×