என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "salman khan"
- நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'.
- இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது.
கடந்த 2015-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'. இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர், பார்வதி நாயர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது.
அஜித்தின் கதாபாத்திரத்தை இயக்குனர் கவுதம் மேனன் மெருகேற்றி இருப்பார். மழை வரப்போகுதே.. அதாரு அதாரு போன்ற பாடல்கள் கொண்டாடப்பட்டன. இப்படத்தில் அஜித்துக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார்.
இந்நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும் நடிகர் சல்மான்கான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு 'வீரம்' படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டைகர் 3’.
- இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டைகர் 3 போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'டைகர் 3' திரைப்படத்தின் டிரைலர் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Tiger aa raha hai. 16th October. #Tiger3Trailer
— Salman Khan (@BeingSalmanKhan) October 11, 2023
Ready ho jao!? #5DaysToTiger3Trailer #Tiger3 arriving in cinemas this Diwali. Releasing in Hindi, Tamil & Telugu.#KatrinaKaif | #ManeeshSharma | @yrf | #YRF50 | #YRFSpyUniverse pic.twitter.com/XgJFSfMcN1
- மணீஷ் சர்மா இயக்கியுள்ள திரைப்படம் ‘டைகர் 3’.
- இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'டைகர் 3' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கத்ரீனாவின் சோலோ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டைகர் 3 போஸ்டர்
இது குறித்து கத்ரீனா கூறியதாவது, ஜோயா, ஒய்.ஆர்.எப். ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி, அதுபோன்ற ஒரு கதாபாத்திரம் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவள் கொடூரமானவள், அவள் தைரியமானவள், அவள் நல் இதயம் கொண்டவள் , அவள் விசுவாசமானவள், அவள் பாதுகாவலர், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் மனிதகுலத்திற்காக ஒவ்வொரு முறையும் முன் வருகிறார் .
ஒய்.ஆர்.எப். ஸ்பை யுனிவர்ஸில் ஜோயாவாக நடித்தது ஒரு நம்பமுடியாத பயணம் மற்றும் ஒவ்வொரு படத்திலும் நான் என்னை சோதனைக்கு உட்படுத்தினேன், இதற்கு டைகர் 3 விதிவிலக்கல்ல. இந்த முறை ஆக்ஷன் காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினோம், படத்திற்காக எனது உடலை பிரேக்கிங் பாயிண்டிற்கு தள்ளியுள்ளேன், மக்கள் அதை பார்ப்பார்கள். உடல் ரீதியாக இது எனக்கு மிகவும் சவாலான படம்.
எப்போதும் ஆக்ஷன் செய்வது உற்சாகமாக இருக்கும், நான் எப்போதும் போல் ஆக்ஷன் வகையின் ரசிகை . அதனால், ஜோயாவாக நடிப்பது எனக்கு ஒரு கனவு. வலிமையான, தைரியமான வேடம் ஏற்றேன் சோயாவை திரையில் பார்க்கும்போது மக்கள் என்ன எதிர்வினையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.
- டிரைலர் மற்றும் திரைப்படத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்.
- படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகளை பார்க்கும் போது ஒரு குழந்தையாக மாறி விட்டேன்.
இந்தி நடிகர் சல்மான் கான் நடிப்பில் 'டைகர்-3' படம் உருவாகி உள்ளது. இதன் டிரெய்லரை சல்மான் கான் வருகிற 16-ந் தேதி வெளியிட உள்ளார். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள 'டைகர் 3' படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
படம் குறித்து சல்மான் கான் கூறும்போது, "யஷ்ராஜ் பிலிம்சில் உருவான ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹை ஆகிய ஸ்பை யுனிவர்ஸ் படங்களை மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால் அவர்களின் பார்வைக்கு விருந்தாக புதிதாக, தனித்துவமான ஆச்சர்யமான சிலவற்றை கொடுக்க வேண்டியது முக்கியமானதாக இருந்தது. டைகர் 3 படக்குழுவினர் உண்மையிலேயே ஆக்சன் தொகுப்பாக இதை உருவாக்கியுள்ளனர். அது கண்கவரும் விதமாக உள்ளது. டிரைலர் மற்றும் திரைப்படத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்.
படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகளை பார்க்கும் போது ஒரு குழந்தையாக மாறி விட்டேன். இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத விஷயங்கள் படத்தில் உள்ளது" என்றார்.
- "ஜவான்" திரைப்படத்தை தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார்
- 2015-ல் சல்மான்கான் கதாநாயகனாக நடித்து வெளியானது "பஜ்ரங்கி பாய்ஜான்"
தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த "ஜவான்" திரைப்படம் நாடு முழுவதும் வெளியானது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மற்றொரு பிரபல இந்தி நடிகரான அமிர்கான், "ஜவான்" திரைப்படத்தையும், அதன் கதாநாயகன் ஷாருக்கானின் நடிப்பையும் பாராட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலானது. அந்த வீடியோவில் நடிகர் அமிர்கான், "படத்தை பார்த்தீர்களா? மிக நல்ல திரைப்படம். அவரது நடிப்பில் இதுதான் மிக சிறப்பான படம். அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். மீண்டும் மீண்டும் பாருங்கள்" என கூறுவது தெரிகிறது.
இதனை பகிர்ந்த பயனர்களில் ஒருவர் "அமிர்கானின் ஜவான் பட விமர்சனம்" என ஒரு குறுஞ்செய்தியையும் இத்துடன் இணைத்து பதிவிட்டுள்ளார். ஆனால், ஆய்வில் இது தவறான செய்தி என்றும் அந்த வீடியோ பொய் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான்கான் நடிப்பில் 2015-ல் வெளியான திரைப்படம் "பஜ்ரங்கி பாய்ஜான்." அந்த திரைப்படத்தை அப்போது கண்டு ரசித்த அமிர்கான், கதாநாயகன் சல்மான் கானையும், அத்திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனரையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் வெகுவாக பாராட்டி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த நீண்ட வீடியோவில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், மேலே சொன்ன வாசகங்கள் இடம்பெறுகிறது. ஆய்வில், "பஜ்ரங்கி பாய்ஜான்" திரைப்படத்தை அமிர்கான் பாராட்டும் நீண்ட வீடியோவை ஆங்காங்கே வெட்டி தொகுத்து "ஜவான்" திரைப்படத்தை பாராட்டுவதை போல் உருவாக்கி வெளியிட்டுள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை "ஜவான்" திரைப்படம் குறித்து அமிர்கான் எத்தகைய விமர்சனமும் செய்ததாக உறுதியான தகவல் இல்லை. இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’.
- இப்படம் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்காகும்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிசி கா பாய் கிசி கி ஜான்'என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
கிசி கா பாய் கிசி கி ஜான்
இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இப்படத்தை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
Your love has made KBKJ a worldwide hit, grossing 112.80 CR.
— Zee Studios (@ZeeStudios_) April 24, 2023
Watch #KisiKaBhaiKisiKiJaan In Cinemas Now!
Book Your Tickets Now ??
? - https://t.co/q8HJyYQcuQ@BeingSalmanKhan @hegdepooja @VenkyMama @farhad_samji @IamJagguBhai @bhumikachawlat @boxervijender #AbhimanyuSingh… pic.twitter.com/Y4PMp1T4rn
- பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் சல்மான்கான்.
- சமீபகாலமாக இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு சமீபத்தில் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பி இருந்தனர். இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் பந்த்ரா போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் ரவுடியான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சல்மான்கான்
இந்நிலையில், நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. அதாவது, நேற்று மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் மும்பையில் உள்ள ஆசாத் மைதான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.
- நடிகர் சல்மான் கான் தற்போது கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் நிகழ்ச்சியில் சல்மான் கான் மேடையிலேயே சட்டையை கழற்றினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிஸி கி பாய், கிஸி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் , ஹிமேஷ் ரேஷ்மியா , தேவி ஸ்ரீ பிரசாத் , பாயல் தேவ் , அமல் மல்லிக் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.
இந்நிலையில் கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் சல்மான் கான் சட்டையை கழற்றி அவருடைய சிக்ஸ் பேக் காட்டி ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் சல்மான் கான் காட்டும் சிக்ஸ் பேக் எல்லாம் வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் என விமர்சனம் வந்த நிலையில், சட்டையை கழற்றி "இதை பார்த்தால் விஎஃப்எக்ஸ்ல் வந்தது போல தெரிகிறதா?" என கேள்வி எழுப்பினார்.
- அஜித் நடித்த ‘வீரம்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
- இதில் நடிகர் சல்மான்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிஸி கி பாய், கிஸி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
என்டம்மா பாடல் -கிஸி கி பாய், கிஸி கி ஜான்
இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திலிருந்து சமீபத்தில் 'என்டம்மா'என்ற பாடல் வெளியானது. இதில், வேட்டி கட்டிக்கொண்டு சல்மான்கான் ஆடும் நடன அசைவுகளை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பாடலில் தென்னிந்திய கலாசார உடை இழிவுப்படுத்தப்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்திய கலாசாரத்தை இழிவுப்படுத்தும் வகையில் இந்த பாடல் உள்ளது. அது லுங்கி அல்ல, அது வேட்டி . நமது கலாசார உடையானது அருவருப்பான முறையில் காட்டப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அந்தப் பாடலையும் பகிர்ந்துள்ளார்.
- நடிகர் சல்மான்கானின் அலுவலகத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
- கொலை மிரட்டல் விடுத்ததாக லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி பிரார், ரோகித் கார்க் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு கடந்த வாரம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி இருந்தனர். இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் பந்த்ரா போலீசில் புகார் செய்தார்.
சல்மான்கான்
போலீசார் ரவுடியான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சல்மானுக்கு ஒய்.பிளஸ். பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சல்மான்கானுக்கு இங்கிலாந்தில் இருந்து மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இமெயில் ஐ.டி. இங்கிலாந்தை சேர்ந்த ஒரு செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த எண் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- இந்தி திரைத்துறையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான் கான்.
- சல்மான் கான் நேற்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்தி திரைத்துறையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான் கான். இவர் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் கடந்து விட்டன. இவர் நேற்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சல்மான்கானை பார்க்க வந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்
இதையடுத்து நடிகர் சல்மான் கானை பார்க்க மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் பெருமளவில் கூடினார்கள். வீட்டின் பால்கனியில் தனது தந்தை சலீம் கானுடன் வந்த சல்மான் கான் ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது, ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னே செல்ல முயன்றனர். ரசிகர்களை கட்டுப்படுத்த முடியால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கட்டுப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரேவதி.
- தற்போது இந்தியில் 'சலாம் வெங்கி' என்ற படத்தை ரேவதி இயக்கி வருகிறார்.
1983-ஆ ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரேவதி. அதன்பின் கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். ரேவதி சில படங்களையும் இயக்கியுள்ளார்.
தற்போது இந்தியில் 'சலாம் வெங்கி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கஜோல், விஷால் மற்றும் ஜெத்வா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சல்மான்கான் நடத்தும் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட ரேவதி, 32 வருடங்களுக்குப் பிறகு சல்மான்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மணீஷ் சர்மா இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் 'டைகர் 3' படம் உருவாகிறது. இப்படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ளார். மேலும் ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரேவதி நடிக்கவிருக்கும் கதாப்பாத்திரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்