search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rocket"

    விண்ணில் ஏவப்பட்ட 10 விநாடிகளில் ரஷ்யாவின் ராக்கெட்டை மின்னல் தாக்கியது.

    ரஷ்யாவின் சோயுஸ்-2.1பி  என்னும் ராக்கெட் குளோனஸ் என்னும் செயற்கைகோளுடன் திங்கள் அன்று ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்னும் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. அன்று வானிலை சற்றே மோசமாக இருந்தது. இருப்பினும் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணி தள்ளிவைக்கப்படவில்லை. விண்ணில் ஏவப்பட்ட 10 விநாடிகளில் இந்த ராக்கெட்டை மின்னல் ஒன்று தாக்கியது.

    இதை உறுதிசெய்த அதிகாரிகள், ``ராக்கெட்டுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, திட்டம் வெற்றிதான்" என்று தெரிவித்துள்ளனர். மின்னல் தாக்கிய  வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    இதுபோல் 1969-ல் நாசாவின் அப்பல்லோ 12 மிஷனில் பயன்படுத்தப்பட்ட சனி- 5 ராக்கெட் ஒன்றை இருமுறை மின்னல் தாக்கியது. இது மனிதர்களைக் கொண்டு சென்ற ராக்கெட். இது சிறிய தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும் அப்போதும் பெரிய பாதிப்புகள் இல்லை.

    ராக்கெட்களை கட்டமைக்கும் விஞ்ஞானிகள் அதில் இருக்கும் உலோகங்கள் மின்னல்களை ஈர்க்கும் என்பதை அறிந்து அதற்கேற்றபடியே அவற்றை வடிவமைக்கின்றனர். இதனால் மின்னல்கள் ராக்கெட்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது கிடையாது. 
    ராக்கெட் ஏவப்படுவதை சாதாரண பொதுமக்களும் பார்க்க இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. #ISRO #PSLVC45
    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது.

    ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை இஸ்ரோவின் அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பார்க்க முடியும்.

    இந்த நிலையில் ராக்கெட் ஏவப்படுவதை சாதாரண பொதுமக்களும் பார்க்க இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.

    இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து ராக்கெட் விண்ணில் பாய்வதை பொதுமக்கள் நேரடியாக பார்க்கலாம்.

    வருகிற 1-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதை பொதுமக்கள் தனி அரங்கில் அமர்ந்து நேரடியாக பார்த்து ரசிக்கலாம்.

    இதுகுறித்து இஸ்ரோ செய்தி தொடர்பாளர் விவேக் சிங் கூறியதாவது:-



    ராக்கெட் ஏவப்படுவதை பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் தனி அரங்கு பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    ராக்கெட் ஏவப்படுவதை நேரடியாக பார்க்க இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கேமரா, போன்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். புகைப்படத்துடன் கூடிய அரசின் அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும். குறைந்த பட்சம் 10 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

    இதில் இந்தியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வரும் காலத்தில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் அரங்கு விரிவுப்படுத்தப்படும். மேலும் அங்கு விண்வெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இனி ‘விண்வெளி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியரை சென்றடைய வேண்டும் என்ற இஸ்ரோ தலைவர் சிவனின் எண்ணத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    ராக்கெட் ஏவுகணை பொதுமக்கள் நேரில் பார்ப்பதால் குறைந்தபட்சம் சிலர் இந்திய விண்வெளி திட்டத்தில் சேர ஆர்வம் காட்டுவார்கள் என்று நம்புகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #PSLVC45
    ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. #ISRO #PSLVC43
    ஸ்ரீஹரிகோட்டா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் இன்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த ராக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில், விண்வெளியில் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.

    அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் உயரத்திலும், வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் உயரத்திலும் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன.



    பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டதாகும்.

    இது இந்தியாவின் 45-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று காலை 5.57 மணிக்கு தொடங்கியது.

    இந்நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் இன்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. #ISRO #PSLVC43
    ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும் திறன் படைத்த ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.#Chinese #OneSpace #rocket
    பெய்ஜிங்:

    சீனாவில் பெய்ஜிங் நகரில் இயங்கும் தனியார் நிறுவனமான ‘ஒன் ஸ்பேஷ்’ அதிவேக ராக்கெட் ஒன்றை தயாரித்துள்ளது. இதற்கு ‘சாங்குயிங் லியாங்ஜியாங் ஸ்டார்’ என பெயரிடப்பட்டுள்ளது.

    9 மீட்டர் நீளமும், 7200 கிலோ எடையும் கொண்டது. இது மணிக்கு 38, 742 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லக்கூடியது. அதாவது ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும் திறன் படைத்தது.

    5 நிமிடத்தில் 273 கி.மீட்டர் தூரம் பறந்து செல்லும். அந்த அளவு அதிகதிறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் வயர்லஸ் தகவல் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த ராக்கெட் நேற்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த தகவலை ‘ஒன் ஸ்பேஷ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான ஷு சாங் தெரிவித்தார்.



    மேலும் அவர் கூறும் போது, ‘‘எங்கள் நிறுவனம் முதன் முறையாக வணிக ரீதியிலான ராக்கெட் தயாரித்துள்ளது. இதன்மூலம் செயற்கைகோள்களை அனுப்ப பல நாடுகள் எங்களை தொடர்பு கொண்டுள்ளன’’ என்றார்.#Chinese #OneSpace #rocket
    ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பம் பெற்றுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் கூறினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் மாணவர் அறிவியல் பேரவை சார்பில் சமூக அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பிரேம் முன்னிலை வகித்தார்.

    இன்னர்வீல் சங்கத் தலைவி நர்மதா ரஞ்சன் குத்துவிளக்கு ஏற்றினார். மாணவர் அறிவியல் பேரவை நிறுவனர் வாசன் வரவேற்றார். பெங்களூரு இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் பேசியதாவது: -

    விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆக்கப்பூர்வ செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் மாணவர் அறிவியல் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. உண்மையை தேடும் முயற்சியே விஞ்ஞானம். விஞ்ஞான தொழில்நுட்பத்தை தனக்கு மட்டும் என்றோ, குறிப்பிட்ட துறைக்கு என்றோ உரிமை கொண்டாட முடியாது.

    சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்தும்போது விஞ்ஞானம் உயிர் பெறுகிறது. இயற்கை வளம் சுரண்டல், தனி நபர் ஏகபோகமாக அனுபவிக்க விஞ்ஞானம் பயன்படுவதை அனுமதிக்கக் கூடாது. ஆக்க பூர்வ செயல்களுக்கு விஞ்ஞானத்தை பயன்படுத்த மாணவர்கள் மூலம் சமூக மாற்றம் கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாணவர் அறிவியல் பேரவையின் நோக்கமாகும்.

    விண்வெளியில் செயற்கை கோள் ஏவும் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிற நாடுகளின் துணையின்றி ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா பெற்றுள்ளது.

    செவ்வாய் கிரகம் மட்டுமின்றி அண்டைய கோள்களை காணும் தொலைநோக்கு பார்வை என இந்தியா விண்வெளி சாதனையில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

    இயற்கை வளம் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறதோ என்ற வருத்தம் உள்ளது.

    விஞ்ஞானிகள் இதை இன்றைய தலைமுறையினரிடம் சொல்லமால் சென்றுவிட்டால் எதிர்கால சந்ததிகள் நிலை குறித்து கவலையும் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இளம் விஞ்ஞானி சிவகாசி மாணவர் ஜெயக்குமாருக்கு பரிசு வழங்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு) சிவசுப்ரமணியன், பிரண்ட்ஸ் சப்போர்ட் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், டாக்டர் சுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர். மாணவர் அறிவியல் பேரவை செயலர் சக்திவேல் நன்றி கூறினார்.
    ×