search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Religious Harmony"

    • மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    • விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    தமிழகத்தில் வன்முறையை தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகளைக் கண்டித்தும், மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், தலித், பழங்குடியின மக்கள் மற்றும் மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம் அருகில் காந்திஜி சாலையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இதில், ராஜகுமார் எம்.எல்.ஏ, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் உள்ள மகான் செய்யது சமசுதீன் ஷஹீது வலியுல்லாஹ் தர்காவில், ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம்
    • சந்தனக்கூடு பாரம்பரிய முறைப்படி கிராமத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞா்கள், பெரியவா்கள் ஒன்றுகூடி பாட்டுபாடி, களிகம்பு ஆட்டம் ஆடி ஊா்வலமாக சென்றனா்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் உள்ள மகான் செய்யது சமசுதீன் ஷஹீது வலியுல்லாஹ் தர்காவில், ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    சிறப்பு தொழுகை

    இந்த ஆண்டு கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை தொடங்கியது. ஊர்வலத்தில், வாத்தியம் மேளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் எடுத்து வரப்பட்ட சந்தனம், மகானின் சமாதியில் பூசப்பட்டது. அப்போது உலக நன்மைக்காக சிறப்பு தொழுகை நடைபெற்றன.

    மதநல்லிணக்க விழா

    ஊர்வலமாக எடுத்து வரப்படும் சந்தனக்கூட்டின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு சமூகத்தினரும் செய்து அலங்கரித்து எடுத்து வருவதால், அனைத்து மதத்தினரும் கொண்டாடும் மத நல்லிணக்க விழாவாகவும் இது நடந்து வருகிறது.

    தா்ஹாவுக்கு வந்தடைந்த சந்தனக்கூடு பாரம்பரிய முறைப்படி கிராமத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞா்கள், பெரியவா்கள் ஒன்றுகூடி பாட்டுபாடி, களிகம்பு ஆட்டம் ஆடி ஊா்வலமாக சென்றனா்.

    இந்த விழாவில் வைப்பார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மலா்கள் வழங்கி வழிபட்டனா்.

    ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவில் இந்து, முஸ்லிம்கள் இணைந்து மத பாகுபா டின்றி கொண்டா டுவதால் இவ் விழாவானது மத நல்லி ணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

    • நற்சிந்தனை களையும், நல்லொழு க்கத்தையும், எடுத்துச் சொல்லும் கருத்துக்களை ஏற்கும் மனப்பக்குவத்தை கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    • எல்லா விதமான கருத்து க்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் முனைப்பு காட்டப்பட வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் ராமஜெயம் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் மற்றும் பேராசிரியர் கலந்து கொண்டனர்.

    மத நல்லிணக்கம் குறித்தும், சகிப்புத் தன்மை குறித்தும், பிற மத உணர்வுகளை மதிக்கும், நல்லெண்ணத்தை வளர்க்கும், வகையில், ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டும் நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி முதல்வர் ராமஜெயம், மாணவ மாணவிகளிடையே, மதநல்லிணக்கத்தை பேணிக்காக்கும் நல் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிற மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், இந்தியாவின் சிறப்பு ஆகிய வேற்றுமையில் ஒற்றுமை என்பதின் பெருமையை கட்டு காக்கப்படவேண்டும்.

    மேலும் நற்சிந்த னை களையும், நல்லொழு க்கத்தையும், எடுத்துச் சொல்லும் கருத்துக்களை ஏற்கும் மனப்பக்குவத்தை கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    எல்லா விதமான கருத்து க்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் முனைப்பு காட்டப்பட வேண்டும். அன்பு அகிம்சை சகோதரத்துவம், இரக்கம், பிறருக்கு உதவுதல், துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தல், இவற்றின் அடிப்படையிலேயே அனைத்து மதங்களும் இயங்குகின்றன.

    ஏற்றத் தாழ்வையும், விருப்பு வெறுப்பு இன்றி ஏற்கும் மனப்பக்குவத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரிடத்திலும் அன்பாகவும், சகோதர உணர்வோடும் பழக வேண்டும் என பேசினார்.

    ×