search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்றத் தாழ்வையும், விருப்பு வெறுப்பின்றி ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்
    X

    ஏற்றத் தாழ்வையும், விருப்பு வெறுப்பின்றி ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்

    • நற்சிந்தனை களையும், நல்லொழு க்கத்தையும், எடுத்துச் சொல்லும் கருத்துக்களை ஏற்கும் மனப்பக்குவத்தை கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    • எல்லா விதமான கருத்து க்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் முனைப்பு காட்டப்பட வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் ராமஜெயம் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் மற்றும் பேராசிரியர் கலந்து கொண்டனர்.

    மத நல்லிணக்கம் குறித்தும், சகிப்புத் தன்மை குறித்தும், பிற மத உணர்வுகளை மதிக்கும், நல்லெண்ணத்தை வளர்க்கும், வகையில், ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டும் நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி முதல்வர் ராமஜெயம், மாணவ மாணவிகளிடையே, மதநல்லிணக்கத்தை பேணிக்காக்கும் நல் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிற மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், இந்தியாவின் சிறப்பு ஆகிய வேற்றுமையில் ஒற்றுமை என்பதின் பெருமையை கட்டு காக்கப்படவேண்டும்.

    மேலும் நற்சிந்த னை களையும், நல்லொழு க்கத்தையும், எடுத்துச் சொல்லும் கருத்துக்களை ஏற்கும் மனப்பக்குவத்தை கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    எல்லா விதமான கருத்து க்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் முனைப்பு காட்டப்பட வேண்டும். அன்பு அகிம்சை சகோதரத்துவம், இரக்கம், பிறருக்கு உதவுதல், துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தல், இவற்றின் அடிப்படையிலேயே அனைத்து மதங்களும் இயங்குகின்றன.

    ஏற்றத் தாழ்வையும், விருப்பு வெறுப்பு இன்றி ஏற்கும் மனப்பக்குவத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரிடத்திலும் அன்பாகவும், சகோதர உணர்வோடும் பழக வேண்டும் என பேசினார்.

    Next Story
    ×