search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway Flyover"

    • ரெயில்வே மேம்பாலத்திற்கு அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் வரை பழைய பஸ் நிலைய புதுப்பிக்கும் பணியை தொடங்கக்கூடாது.
    • மீறி செயல்படுத்தும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மக்களை திரட்டி போராடும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகராட்சி பழைய பஸ்நிலையத்தில் மேம்படுத்தும் பணி தொடங்க இருப்பதாகவும், அதற்காக இன்று (20-ந் தேதி) முதல் பழைய பஸ் நிலையம் செயல்படாது எனவும், மாற்று வழி த்தடங்கள் குறித்து நகராட்சி ஆணையரும், காவல்துறையும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    ராஜபாளையம் நகராட்சி ரெயில்வே மேம்பால பணி, பாதாள சாக்கடைத்திட்ட பணி, தாமிரபரணி குடிநீர் திட்ட பணி ஆகிய திட்டங்களால் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ரெயில்வே மேம்பால பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நிறைவு பெறாமல் இருப்பதையொட்டி தென்காசி சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கிறது.

    இந்த நிலையில் நகராட்சி ஆணையாளரின் அறிவிப்பும், காவல்துறை யின் அறிவி ப்பும் பொருத்த மற்றதாக இருப்பதோடு மக்களை மேலும் துன்பப்படுத்துவதாக உள்ளது.

    எனவே சத்திரப்பட்டி சாலையில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால த்திற்கு அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் வரை பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணியை தொடங்கக்கூடாது. மீறி செயல்படுத்தும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மக்களை திரட்டி போராடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொழுமம், பழநி செல்லும் ரோடு,18.80 கி.மீ., தூரம் கொண்டது.
    • பொதுமக்கள், வாகனங்கள் என போக்குவரத்து அதிகம் செல்லும் ரோடாக உள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து கொமரலிங்கம், கொழுமம், பழநி செல்லும் ரோடு, 18.80 கி.மீ., தூரம் கொண்டது. உடுமலையிலிருந்து பழனிக்கு மாற்றுப்பாதையாக மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடு உள்ளது. பொதுமக்கள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என போக்குவரத்து அதிகம் செல்லும் ரோடாக உள்ளது.

    இந்த ரோட்டில் நகர பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. பிரதான போக்குவரத்து சாலையாக உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் நிரந்தரமாக உள்ளது. எனவே இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.மேலும் திண்டுக்கல்-பாலக்காடு அகல ரெயில்பாதை செல்கிறது. அகல ரெயில்பாதையில் ரெயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அவை கடக்கும் போது பல கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே கொழுமம் ரோட்டை அகலப்படுத்தவும், ரெயில்வே கேட் பகுதியில்மேம்பாலம் அமைக்கவும் வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×