search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pushparadheshwarar"

    • ஞாயிறு திருத்தலத்தில் மொத்தம் 4 விநாயகர்கள் இருக்கிறார்கள்.
    • பல்லவ விநாயகர், ஆலயத்தின் உள்ளே சூரியனுக்கு நேரே அமர்ந்துள்ளார்.

    ஞாயிறு திருத்தலத்தில் மொத்தம் 4 விநாயகர்கள் இருக்கிறார்கள்.

    பல்லவ விநாயகர், துவார கணபதி, நர்த்தண விநாயகர், கமல விநாயகர் ஆகியோரே அந்த 4 விநாயகர்கள் ஆவார்கள்.

    இவர்களில் நுழைவு வாயிலில் துவார கணபதி இருக்கிறார்.

    கருவறை கோஷ்டத்தில் நர்த்தண விநாயகர் உள்ளார்.

    கமல விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

    பல்லவ விநாயகர், ஆலயத்தின் உள்ளே சூரியனுக்கு நேரே அமர்ந்துள்ளார்.

    பொதுவாக விநாயகர் சிலைகள் தலையில் கிரீடத்துடன் காணப்படும்.

    ஆனால் பல்லவ விநாயகர் கிரீடம் இல்லாமல் இருக்கிறார்.

    தனது தந்தையான சிவபெருமானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் இவ்வாறு இருப்பதாக கூறப்படுகிறது.

    பல்லவ மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த விநாயகர் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

    எனவே இவரை பல்லவ விநாயகர் என்றே அழைக்கிறார்கள்.

    இவரை வழிபட்டால் பொருட்கள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை குறையும்.

    சிலர் எப்போதும் பதவி பதவி என்று ஆசையோடு அலைவார்கள்.

    இவரை வழிபட்டால் அந்த பதவி ஆசையும் நிவர்த்தி ஆகும்.

    பொருள், பதவி ஆகியவற்றின் மீதுள்ள மோகத்தை குறைப்பதால் இவர் முக்திக்கு வழிகாட்டும் முதல் கடவுளாகவும் வணங்கப்படுகிறார்.

    • தானியம் - கோதுமை
    • வஸ்திரம் - சிவப்பு நிற ஆடை

    தானியம்- கோதுமை

    மலர்- செந்தாமரை

    வஸ்திரம்- சிவப்பு நிற ஆடை

    ரத்தினம்- மாணிக்கம்

    நிவேதனம்- கோதுமைச் சக்கரான்னம்

    சமித்து- வெள்ளளெருக்கு

    உலோகம்- செம்பு

    தூப தீபம்- சந்தனம்

    • சூரியன் வழிபட்ட தலம் என்பதால் ஞாயிறு தலம் எனவும் அழைக்கப்படுகிறது.
    • முஸ்லிம், கிறிஸ்துவ அன்பர்களும் இப்பெருமானை தரிசித்து தொண்டு புரிகின்றார்கள்.

    சனி தோஷம் நீங்க திருநள்ளாறு செல்வது போல், களத்திர தோஷம், விவாஹப் பிரபந்திர தோஷம், புத்திர தோஷம்,

    உத்தியோகப் பிரபந்திர தோஷம் உள்ளவர்களும், கண் பார்வை குறை உள்ளவர்களும், உடல் ரோகம் உள்ளவர்களும்,

    சூரிய தசை, சூரிய புத்தி நடக்கிறவர்களும் அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வந்து

    சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கி நவக்கிரக நாயகர்களின் அனுக்கிரகம் உண்டாகும்.

    சூரியன் வழிபட்ட தலம் என்பதால் ஞாயிறு தலம் எனவும் அழைக்கப்படுகிறது.

    முஸ்லிம், கிறிஸ்துவ அன்பர்களும் இப்பெருமானை தரிசித்து தொண்டு புரிகின்றார்கள்.

    இவ்வாலயம் சகல மதத்தினரும் போற்றிப் புகழ்பாடும் ஒரு புராதனமான வரலாற்று புண்ணிய தலம் ஆகும்.

    மத ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது.

    இதற்கு சான்றாக 1933ல் ஞாயிறு கிராமம் நாட்டாமைக்காரரும், செம்பியம் மாஜிஸ்திரேட்டுமாகிய எம்.எஸ்.காதர் முஹைதீன் சாஹிப்பால் இயற்றப்பட்டு,

    அவரது சகோதரர் எம்.எஸ்.ஷேக் முஹைதீன் சாஹிப்பால் பதிப்பிக்கப்பட்ட "ஞாயிறு நாட்டு ஸ்ரீ சங்கிலி நாச்சியார் சரித்திரம்" என்னும் நூலே ஆதாரமாக உள்ளது.

    கிறிஸ்துவ அன்பர்களில் ஒருவர் திருவிளக்கு ஏற்ற எண்ணெயையும், மற்றொருவர் ஓர் பசுவினையும் தானமாக வழங்கியுள்ளார்கள்.

    ×