என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Soorya Bagavan"
- ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின.
- எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.
இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன.
ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின.
உலகங்களே தோன்றவில்லை.
இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.
அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.
அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று
பெயர் பெற வேண்டும் என்றும் அதனை சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்
அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்று பிராத்தித்தார்.
இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்.
அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்.
- முதல் யாமம் வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்.
- இரண்டாம் யாமம் வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்.
முதல் யாமம்
வழிபட வேண்டிய
மூர்த்தம்- சோமாஸ்கந்தர்
அபிஷேகம்- பஞ்சகவ்யம்
அலங்காரம்- வில்வம்
அர்ச்சனை- தாமரை, அலரி
நிவேதனம்- பால் அன்னம்,சக்கரைபொங்கல்
பழம்- வில்வம்
பட்டு- செம்பட்டு
தோத்திரம்- இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம்- பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
புகை- சாம்பிராணி, சந்தணக்கட்டை
ஒளி- புட்பதீபம்
இரண்டாம் யாமம்
வழிபட வேண்டிய
மூர்த்தம்- தென்முகக் கடவுள்
அபிஷேகம்- பஞ்சாமிர்தம்
அலங்காரம்- குருந்தை
அர்ச்சனை- துளசி
நிவேதனம்- பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம்- பலா
பட்டு- மஞ்சள் பட்டு
தோத்திரம்- யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
மணம்- அகில், சந்தனம்
புகை- சாம்பிராணி, குங்குமம்
ஒளி- நட்சத்திரதீபம்
மூன்றாம் யாமம்
வழிபட வேண்டிய
மூர்த்தம்- லிங்கோற்பவர்
அபிஷேகம்- தேன், பாலோதகம்
அலங்காரம்- கிளுவை, விளா
அர்ச்சனை- மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
நிவேதனம்- எள்அன்னம்
பழம்- மாதுளம்
பட்டு- வெண் பட்டு
தோத்திரம்- சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம்- கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
புகை- மேகம், கருங் குங்கிலியம்
ஒளி- ஐதுமுக தீபம்
நான்காம் யாமம்
வழிபட வேண்டிய
மூர்த்தம்- சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம்- கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம்- கரு நொச்சி
அர்ச்சனை- நந்தியாவட்டை
நிவேதனம்- வெண்சாதம்
பழம்- நானாவித பழங்கள்
பட்டு- நீலப் பட்டு
தோத்திரம்- அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
மணம்- புணுகு சேர்ந்த சந்தணம்
புகை- கர்ப்பூரம், இலவங்கம்
ஒளி- மூன்று முக தீபம்
- மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
- சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.
இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.
சிவராத்திரி விரத வகைகள்
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
நித்திய சிவராத்திரி
மாத சிவராத்திரி
பட்ச சிவராத்திரி
யோக சிவராத்திரி
மகா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும்.
சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய்
காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும்.
அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி
(பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
- சிவராத்திரிக்கு ஞாயிறு தலத்தில் இரவில் 4 ஜாம பூஜை நடைபெற உள்ளது.
- 4-வது ஜாம பூஜை அதிகாலை 3 மணிக்கு நடைபெறும்.
சிவராத்திரிக்கு ஞாயிறு தலத்தில் இரவில் 4 ஜாம பூஜை நடைபெற உள்ளது.
முதல் ஜாம பூஜை இரவு 7 மணிக்கு நடைபெறும். 2-வது ஜாம பூஜை இரவு 9 மணிக்கும்,
3-ம் ஜாம பூஜை நள்ளிரவு 11.30 மணிக்கும் நடைபெறும்.
4-வது ஜாம பூஜை அதிகாலை 3 மணிக்கு நடைபெறும். அன்று இரவு முழுக்க கோவில் நடை திறந்திருக்கும்.
ஒவ்வொரு ஜாம பூஜைக்கும் அபிஷேகங்கள், ஆராதனைகள் அனைத்தும் மாறுபடும்.
பக்தர்கள் சிவராத்திரி அபிஷேக பூஜைகளுக்கு தேன், பால், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வகைகளை
வாங்கி கொடுத்து சிவபெருமான் அருளை பெறலாம் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
- பின்னர் புத்தாடை அணிய வேண்டும். புத்தாடை என்றால் புதிய ஆடை என்று அர்த்தம் அல்ல.
- வீட்டில் இருந்து கொண்டு வரும் ஏதாவது ஒரு தூய்மையான ஆடையை அணிய வேண்டும்.
ஞாயிறு திருத்தலம் கண்நோய் தீர்ப்பதோடு பித்ருக்கள் வழிபாட்டுக்கும் மிக மிக உகந்த தலமாக திகழ்கிறது.
சிலருக்கு பித்ருக்கள் தோஷம் இருந்து கொண்டேஇருக்கும். சிலர் தங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை அறியாமல் இருப்பார்கள்.
மேலும் சிலர் பித்ருக்கள் தோஷம் இருப்பதை அறிந்தும் அதற்கு உரிய பரிகாரத்தை செய்யாமல் இருப்பார்கள்.
அத்தகைய நிலையில் இருப்பவர்கள் இந்த தலத்துக்கு ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை வந்து முறையான வழிபாடு செய்ய வேண்டும்.
முதலில் அவர்கள் அங்குள்ள சூரிய தீர்த்தத்தில் இறங்கி குளிக்க வேண்டும்.
பிறகு நனைந்த உடைகளை அங்கேயே குளத்துக்குள் விட்டு விடவேண்டும்.
பின்னர் புத்தாடை அணிய வேண்டும். புத்தாடை என்றால் புதிய ஆடை என்று அர்த்தம் அல்ல.
வீட்டில் இருந்து கொண்டு வரும் ஏதாவது ஒரு தூய்மையான ஆடையை அணிய வேண்டும்.
பிறகு ஆலயத்துக்குள் வந்து சூரிய பகவானுக்கும், சிவபெருமானுக்கும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
பித்ரு தோஷம் காரணமாக என்ன பிரச்சினை ஏற்பட்டு உள்ளது என்று அர்ச்சகரிடம் கூறினால் அவர் அதற்கேற்ப வழிபாடுகளை செய்ய உதவுவார்.
இதன் மூலம் பித்ரு தோஷங்களை மிக எளிதாக தீர்க்கலாம்
- சிலரது ஜாதகத்தில் சூரியன் மறைந்திருந்து தொல்லை கொடுக்கும்.
- இத்தகைய அவஸ்தைகள் அனைத்துக்கும் ஞாயிறு திருத்தலத்தில் மட்டுமே விடிவு கிடைக்கும்.
சிலரது ஜாதகத்தில் சூரியனின் திசை மிக மோசமாக நடக்கும்.
இல்லையெனில் சூரியன் அமைந்துள்ள இடம் சரியான பலனை தராது.
சிலரது ஜாதகத்தில் சூரியன் மறைந்திருந்து தொல்லை கொடுக்கும்.
சூரியனால் ஏற்படும் இத்தகைய அவஸ்தைகள் அனைத்துக்கும் ஞாயிறு திருத்தலத்தில் மட்டுமே விடிவு கிடைக்கும்.
சூரியன் இத்தலத்தில் அமைந்து உள்ளதால் சூரியனின் மனம் குளிர்ச்சி அடையும் வகையில்
நாம் விரும்பி செய்யும் வழிபாடுகள் நன்மையை தேடி தரும்.
கோதுமை மற்றும் கோதுமையில் செய்யப்பட்ட உணவு பொருட்களை வைத்து வழிபட்டால்
நிச்சயம் சூரிய திசையால் ஏற்படும் கெடுதல்கள் தன்னை தாக்காமல் விலகி சென்று விடும்.
- இதனால் ஞாயிறு தலம் கண் நோய்களுக்கு மிகச்சிறந்த பரிகார தலமாக திகழ்கிறது.
- இந்த வழிபாட்டின் போது கோதுமை பிரசாதம் நைவேத்தியமாக படைப்பது நல்லது.
ஞாயிறு தலத்துக்கு வந்த சோழ மன்னன், சிவபெருமான் உறைந்திருந்த தாமரை மலரை வாளால் வெட்டியதால் தனது கண் பார்வை இழந்தான்.
அந்த ஆலயத்தை கட்டி பிறகுதான் அவனுக்கு பார்வை கிடைத்தது.
இதனால் ஞாயிறு தலம் கண் நோய்களுக்கு மிகச்சிறந்த பரிகார தலமாக திகழ்கிறது.
கண்களில் பிரச்சினை இருப்பவர்கள் இந்த தலத்துக்கு வந்து கோதுமை, சிவப்பு துணி, தாமரை பூ,
தாமிர உலோகம் ஆகியவற்றை சூரிய பகவானுக்கு படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் பலன் கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை இந்த வழிபாடு செய்வது நல்லது.
அப்படி முடியாதவர்கள் அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் இந்த வழிபாட்டை செய்யலாம்.
இந்த வழிபாட்டின் போது கோதுமை பிரசாதம் நைவேத்தியமாக படைப்பது நல்லது.
கோதுமை கேசரி, கோதுமை பொங்கல் ஆகியவற்றை படைக்கலாம்.
இந்த கேசரி, பொங்கலை பக்தர்கள் வீட்டில் இருந்தே தயார் செய்து கொண்டுவந்து சூரியனுக்கு படைக்கலாம்.
வழிபாடு முடிந்த பிறகு இந்த பிரசாதங்களை ஆலயத்தில் உள்ள ஏழை எளியவர்களுக்கு விநியோகம் செய்யலாம்.
இப்படி செய்தால் நிச்சயம் கண் பிரச்சினைகள் தீரும்.
- 11 வாரங்கள் இந்த தலத்துக்கு சென்று தயிர் சாதம் அபிஷேகம் செய்ய வேண்டும்.
- அப்படி செய்தால் தொழில் பிரச்சினைகள் மற்றும் சொத்து பிரச்சினைகளும் தீரும்.
தொழில் செய்பவர்களில் சிலருக்கு எப்போதும் இடையூறுகள் இருந்து கொண்டே இருக்கலாம்.
பண ரீதியாக, வியாபார ரீதியாக, தொழிலாளர்கள் ரீதியாக என்று பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம்.
இது வியாபாரிகளின் நிம்மதியை அடியோடு கெடுப்பதாக இருக்கும்.
வியாபாரம் சம்பந்தமான பிரச்சினை இல்லாமல் வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த தலத்தை நாடலாம்.
11 வாரங்கள் இந்த தலத்துக்கு சென்று தயிர் சாதம் அபிஷேகம் செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் தொழில் பிரச்சினைகள் தீரும். சொத்து பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு ஏற்படும்.
- ஞாயிறு திருத்தலத்தில் திருமண தடை நீங்குவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
- சமீப காலமாக திருமணம் கை கூடாமல் தவிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
ஞாயிறு திருத்தலத்தில் எத்தனையோ பிரச்சினைகள் தீர்ந்தாலும்
திருமண தடை நீங்குவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
சமீப காலமாக திருமணம் கை கூடாமல் தவிக்கும் இளைஞர்கள், இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
அத்தகைய நிலையில் இருப்பவர்கள் 11 வாரங்கள் ஞாயிறு தலத்துக்கு சென்று
உரிய வழிபாடு செய்தால் திருமணம் யோகம் கைகூடும்.
சிவபெருமானுக்கும், சூரிய பகவானுக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட
நினைத்த இடத்தில் இருந்து மணமகன் அல்லது மணமகள் கிடைப்பார்.
- ஞாயிறு திருத்தலத்தில் ஞாயிற்றுகிழமை வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.
- இந்த நேரத்தில் வழிபாடு செய்தால் ஜென்ம பாவம் நீங்கி மோட்சம் கிடைப்பது என்பது ஐதீகம் ஆகும்.
ஞாயிறு திருத்தலத்தில் ஞாயிற்றுகிழமை வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரை வரும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும்
மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் வழிபாடு செய்வது
மிக சிறப்பான நேரமாக கருதப்படுகிறது.
இந்த நேரத்தில் வழிபாடு செய்தால் ஜென்ம பாவம் நீங்கி மோட்சம் கிடைப்பது என்பது ஐதீகம் ஆகும்.
சிலருக்கு பக்கத்து வீட்டுக்காரர்களால் அடிக்கடி தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.
சிலருக்கு தொழில் ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக கண் தெரியாத எதிரிகள் இருப்பார்கள்.
அத்தகைய எதிரிகளால் ஏற்படும் துன்பத்தை விரட்டும் சக்தி இந்த ஆலயத்துக்கு உண்டு.
ஞாயிற்றுக்கிழமை இந்த ஆலயத்தின் வளாகத்தில் ஏதாவது பகுதியில் அமர்ந்து ஆதித்த இருதயம் நூலை பாராயணம் செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
- ஒவ்வொரு சிவ தலத்திலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார்.
- சூரியனின் பிரதான சீடராக கருதப்படுபவர் யக்ஞவல்கியர்.
ஒவ்வொரு சிவ தலத்திலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார்.
அவர்களது அருள் ஆற்றல் ஆலயத்துக்கு வரும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.
அந்த வகையில் ஞாயிறு திருத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்த புருஷராக கண்வ மகரிஷி திகழ்கிறார்.
இவர் சகுந்தலம் காவியத்தில் வரும் சகுந்தலையின் தந்தை ஆவார்.
சூரியனின் பிரதான சீடராக கருதப்படுபவர் யக்ஞவல்கியர்.
இவரது முதன்மை சீடராக திகழ்ந்தவர்தான் கண்வமகரிஷி ஆவார்.
சூரியனின் தலம் என்பதால் இந்த மகரிஷி இந்த தலத்தில் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இவருக்கு ஞாயிறு திருத்தலத்தின் கருவறைக்குள் ஜீவசமாதி இருப்பதாக ஒருசாரார் கூறுகிறார்கள்.
ஆனால் மற்றொரு சாரார் கண்வமகரிஷி ஜீவசமாதி சூரிய தீர்த்தம் குளத்துக்குள் இருப்பதாக சொல்கிறார்கள்.
இதில் மாறுபட்ட தகவல்கள் இருந்தாலும் கண்வமகரிஷி இந்த தலத்தில்தான் ஒடுங்கி இருக்கிறார் என்பது உறுதியாகிறது.
கண்வமகரிஷியை வழிபட்டால் பல் தொடர்பான நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.
இவரை பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.
- சைவ திருமுறை புத்தகங்கள் மொத்தம் 12 பாகங்களாக இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும்.
- இவர்கள் 27 பேரும் மொத்தம் 18 ஆயிரத்து 360 பாடல்கள் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சைவ திருமுறை புத்தகங்கள் மொத்தம் 12 பாகங்களாக இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும்.
சைவ திருமுறைகளை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருக்கோவையார், மாணிக்க வாசகர்,
திருமூலர், திருமாளிகை தேவர், சேந்தனார், கருவூர் தேவர், பூந்துருத்தி நம்பிகா நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள்,
திருவாலியமுதனார், புருடோத்த நம்பி, சேதியராயர், திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன்,
சேரமான் பெருமாள், நக்கீரதேவ நாயனார், கல்லாடதேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார்,
இளம்பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்துப்பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய 27 பேர் பாடியுள்ளனர்.
இவர்கள் 27 பேரும் மொத்தம் 18 ஆயிரத்து 360 பாடல்கள் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
12 திருமுறைகளாக வெளியாகி உள்ள இந்த பாடல்களை ஞாயிறு திருத்தலத்தில் போற்றி பாதுகாத்து வருகிறார்கள்.
அங்குள்ள சொர்ணாம்பிகை சன்னதியில் இதற்காக தனி கண்ணாடி கூண்டுக்குள் சைவ திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்