search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pushpa"

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன்.
    • இவர் தனது குடும்பத்துடன் பொற்கோவில்லு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    குடும்பத்துடன் அல்லு அர்ஜுன்

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    குடும்பத்துடன் அல்லு அர்ஜுன்

    இந்நிலையில், அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    • சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இந்த படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது.

    தெலுங்கில் பிரபல இயக்குனராக வலம் வரும் சுகுமார் இயக்கத்தில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படம் 'புஷ்பா. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் நடிகர் ஃபஹத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தன.


    குறிப்பாக சமந்தாவின் முதல் கவர்ச்சி பாடலான 'ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா' பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தியேட்டரில் இவர் ஆடிய நடன அசைவுகள் ஒட்டுமொத்த திரையரங்கையும் கட்டிப்போட்டது. இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ, ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் பக்கத்தில் உலக அளவில் நம்பர் 1 என்ற அந்தஸ்தை பெற்றது.


    இந்தநிலையில், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றுள்ள புரோமோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றனர். இதில் பல கேள்விகளுக்கு இருவரும் வெளிப்படையான பதிலளித்துள்ள நிலையில், ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு இருவரும் மாஸ் டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளனர். இருவரும் நடனம் ஆடிய இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



    • பான் இந்திய திரைப்படமாக வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

    அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.


    புஷ்பா

    இந்நிலையில், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக நடிகர் பகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகத் ஃபாசில் கூறியதாவது, " புஷ்பா படத்தின் கதையை வெப் தொடராக எடுக்கத்தான் இயக்குனர் திட்டமிட்டிருந்தார். பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டார்.


    புஷ்பா

    முதலில் என்னிடம் கதை சொல்லும் போது 'புஷ்பா 2' எடுக்கும் எண்ணம் இயக்குனர் சுகுமாருக்கு இல்லை. காவல் நிலைய காட்சிகளை படமாக்கிய பின்புதான் அவருக்கு 'புஷ்பா 2' எடுக்கும் எண்ணம் வந்தது.

    சமீபத்தில் இயக்குனர் சுகுமாரிடம் பேசியபோது புஷ்பா மூன்றாம் பாகத்திற்கு தயாராக இருங்கள். நிறைய கதைகள் சொல்லவேண்டி இருப்பதால் மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று பேசினார்" என பகத் ஃபாசில் கூறியுள்ளார்.

    • சமந்தாவின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • சமந்தா நடித்துள்ள சகுந்தலம், யசோதா படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன.

    தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை சமந்தா. இவர் நடித்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் மெகா ஹிட்டாகி புஷ்பா படத்திற்கு பலம் சேர்த்தது.


    சமந்தா

    இதையடுத்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள யசோதா, சகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடரில் படு போல்டாக ராஜி கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா, தொடர்ந்து பிரபல பிராண்டுகளுக்கு விளம்பர தூதுவராகவும் மாடலாகவும் நடித்து அசத்தி வருகிறார். இவ்வாறு பான் இந்தியா நடிகையாக வலம் வரும் சமந்தா படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

    இந்நிலையில், நேற்று சமந்தாவின் சமூகவலைதளத்தில் அறிமுகமும் இல்லாத நபரின் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் சமூக வலைதளப்பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து வந்தனர்.


    விளக்கமளித்த சமந்தா மேனேஜர்

    அதன் பின்னர், இதுகுறித்து விளக்கமளித்த சமந்தாவின் மேனேஜர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடிகை சமந்தாவின் சமூக வலைதளப்பக்கத்தில் அந்த பதிவு தவறுதலாக பதிவாகி உள்ளது என்றும் தற்போது அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் கூறி இருந்தார். இதையடுத்து சமந்தாவின் சமூக வலைதளப்பக்கம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

    • பான் இந்திய திரைப்படமாக வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • புஷ்பா-2 ​​படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

    புஷ்பா

    புஷ்பா

    இந்த நிலையில் புஷ்பா ​​படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் விஜய் சேதுபதியை இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா முதல் பாகத்தில் வன அதிகாரி வேடத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவருடைய படப்பிடிப்பு தேதிகளில் ஏற்பட்ட சிக்கலால் படத்திலிருந்து விலகினார்.

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது 'புஷ்பா: தி ரூல்' படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 'புஷ்பா: தி ரூல்' படத்திற்கான எதிர்பார்ப்பு இரட்டிப்பாக உள்ளது. இந்த படத்திலும் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகமும் பான்-இந்தியா வெளியீடாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான படம் புஷ்பா.
    • இப்படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா...' என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.

    அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கிய திரைப்படம் புஷ்பா. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா...' என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் தற்போது வரை ரசிகர்கள் பலரின் முணுமுணுப்பாக இருந்து வருகிறது.

    புஷ்பா - சமந்தா

    புஷ்பா - சமந்தா

    இப்படம் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டி நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெருமளவு காட்சிகள் படமாக்கப்பட்டன. இதன் 2-ம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் வெளிநாட்டைச் சேர்ந்த முன்னணி நடிகையும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    புஷ்பா - சமந்தா

    புஷ்பா - சமந்தா

    இந்நிலையில் இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்துப் பாடல் இடம்பெறுவுள்ளது. இதன் முதல் பாகத்தைப் போலவே 2-ம் பாகத்திலும் ஒரு பாடலுக்கு சமந்தாவை கவர்ச்சி நடனமாட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இப்பாடலுக்காக அவருக்கு பெருமளவு சம்பளம் பேசப்பட்டு வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ×