search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priya Bhavani Shankar"

    `மேயாத மான்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரியா பவானி சங்கர், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கணும். அதுதான் முக்கியமே தவிர, உடம்பை வருத்திக்கிறதுல இல்லை என்று கூறியுள்ளார். #PriyaBhavaniShankar
    `மேயாத மான்' படம் மூலம் கவனிக்க வைத்த பிரியா பவானி சங்கர், `கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் முறைப் பெண்ணாக நடித்தார். அடுத்து அதர்வா நடிக்கும் `குருதி ஆட்டம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். `8 தோட்டாக்கள்' படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்குகிறார். 

    கட்டுக்கோப்பான உடலுக்காக தான் கடைப்பிடிக்கும் உணவுக் கட்டுப்பாடு பற்றி பிரியா பவானி ஷங்கர் கூறும்போது ’சைவம், அசைவம், சைனீஸ் என எல்லா வகை உணவுகளையும் நிறைய சாப்பிடுவேன். ஆரோக்கிய பானம் எதையும் எடுத்துக்கொள்ள மாட்டேன்.



    என்னுடைய பேவரைட் உணவு பாசுமதி அரிசியில் செய்யப்பட்ட செட்டிநாடு மட்டன் பிரியாணிதான். சில நாள்களாக வெஜிடேரியனாக இருக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கிறேன். ஒரு பொண்ணு அழகா, ஒல்லியா இருக்கணும். வெயிட் போடக்கூடாது. இதுலல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நம்முடைய கண்ணுக்கு நாம அழகா தெரிஞ்சா போதும். உடலை ஆரோக்கியமா வெச்சுக்கணும். அதுதான் முக்கியமே தவிர, உடம்பை வருத்திக்கிறதுல இல்லை’ என்று கூறி இருக்கிறார். #PriyaBhavaniShankar

    சென்னையில் அழகு நிலையம் ஒன்றை திறந்துவைத்த பிறகு நிரூபர்களை சந்தித்த நடிகை ப்ரியா பவானிசங்கர், பாலியல் துன்புறுத்தல் பற்றி தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறியது சரியல்ல என்று கூறினார். #PriyaBhavaniShankar #SriReddy
    மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் இன்று காலை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ்நிலையம் அருகே தனியார் அழகு நிலையத்தை திறந்து வைத்தார். இதில் வில்லன் நடிகர் சாம் பாலும் கலந்து கொண்டார்.

    பின்னர் நடிகை பிரியா பவானி சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை மறுக்க முடியாது. அனைத்து துறைகளிலும் பாலியல் வன்கொடுமைகளும், துன்புறுத்தலும் இருக்கிறது. அதனை ஏற்றுகொள்வதும், மறுப்பதும் நம் கையில் தான் உள்ளது.



    திரைத்துறையில் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக வெளிப்படையாக கூறி இருக்கிறார். ஒரு தவறை செய்துவிட்டு அதை வெளிப்படையாக கூறுவது நல்லது அல்ல. என்னை பொறுத்த வரை குடும்பபாங்கான கதைகளில் மட்டும் நடிக்கப் போகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #PriyaBhavaniShankar #SriReddy

    மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர், ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார். #PriyaBhavaniShankar
    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களான ரஜினி, கமல் இருவரும் அரசியல் பயணத்தை துவங்கி விட்டனர். இருவரின் அரசியல் பயணம் குறித்து பேசி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் படத்தில் அறிமுகமான இவர் சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து இருந்தார்.

    ‘நாம் எப்போதுமே நடிகர்களிடமிருந்து சில வி‌ஷயங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரையில் பேசும் வசனங்களை அவர்களுடைய நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுகிறோம். எல்லோருக்குமே அரசியலில் தொடர்பு இருக்கிறது. நம்முடைய முகநூல் பக்கத்தைப் பார்த்தாலே நாம் பேசுவதுதான் அரசியல் எனப் புரிந்துவிடும். ரஜினி, கமல் இருவரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.



    அவர்கள் அரசியலில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேரப் படம் கிடையாது, அவர்கள் தேர்தலில் ஜெயித்து வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யப்போகிறார்கள். இந்த வி‌ஷயத்தில் நான் ஒரு சாதாரண குடிமகளாக முடிவெடுப்பேன். நான் அவர்களுடைய படம் ரிலீஸ் ஆனால் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை’ என தெரிவித்துள்ளார்.
    மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் தான் திருட்டு கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன், ஊரை கூட்டி சந்தோ‌ஷமாக செய்துகொள்வேன் என்று கூறினார். #PriyaBhavaniShankar
    பிரியா பவானி சங்கர், செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாகி சினிமாவில் கதாநாயகியாக வளர்ந்து இருக்கிறார். மேயாத மான் படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் அக்கா மகளாக நடிக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து...

    நான் பார்த்த எல்லா வேலைகளுமே எனக்கு திருப்தி தந்தவை தான். என்னை பொறுத்தவரை எல்லாமே ஒன்று தான். இது பெரியது, இது சிறியது என்று பார்ப்பதில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் ரசிகர்கள் தான். சீரியலில் நடிக்க தொடங்கியபோதே என்னை ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு நன்றி.

    மேயாத மான் படத்துக்கு கிடைத்த வரவேற்பை எதிர்பார்த்தீர்களா?

    எதிர்பார்த்ததால் தான் நடித்தேன். அதனால் தான் அந்த படத்தில் நடிக்கவே சம்மதித்தேன். அதற்கு முன்பு நிறைய வாய்ப்புகள் வந்தன. அந்த படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கதை கேட்கும்போதே தெரிந்தது.



    விஜய்யிடம் இருந்து வாழ்த்து வந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

    ஆமாம். என்னாலேயே அதை நம்ப முடியவில்லை. படம் வெளியாகி 8 மாதங்கள் ஆகிறது. அதனால் எஸ்.எம்.எஸ் வந்தபோது அவரிடம் இருந்து வந்ததா என்று சந்தேகம் இருந்தது. பின்னர் எல்லோரும் பகிர்ந்த பிறகே உண்மை தெரிந்தது. திடீர் என்று கிடைத்த இன்ப அதிர்ச்சி அது.

    மிகப்பெரிய குழுவில் பணிபுரிந்தேன். படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் இருக்கும்.

    எல்லாமே வதந்தி தான். நான் திருட்டு கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன். திருமணம் செய்வதாக இருந்தால் ஊரை கூட்டி சந்தோ‌ஷமாக செய்துகொள்வேன். சீரியலில் நடிப்பதை நிறுத்தியபோது நான் திருமணத்துக்காக தான் நிறுத்தியதாக நினைத்துக் கொண்டார்கள் போல. நான் இதற்கு எல்லாம் விளக்கம் தருவதில்லை. எனவே செய்தி பரவி விட்டது.

    எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு படம் முடிந்துவிட்டது. இன்னும் சில படங்களின் அறிவிப்பு வரும்.

    படங்களின் எண்ணிக்கை முக்கியம் இல்லை. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து படத்தை பார்க்கும் போதும் சலிப்பு வரக்கூடாது. அதே நேரத்தில் என் பெற்றோருடன் அமர்ந்து பார்க்கும் படியான படங்களில் தான் நடிப்பேன். #PriyaBhavaniShankar

    கண்ணே கலைமானே படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்த புதிய படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Udhayanidhi
    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நிமிர். யதார்த்தமான கதையாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உதயநிதியின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. அத்துடன் உதயநிதி சினிமா வரலாற்றில் நிமிர் முக்கிய படமாக அமைந்தது. 

    இப்படத்தை அடுத்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    உதயநிதி அடுத்ததாக அட்லியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கரும், இந்துஜாவும் ஒப்பந்தமாகினார்கள்.

    தற்போது இந்த புதிய படம் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Udhayanidhi #PriyaBhavaniShankar #Indhuja
    ×