என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Police registered a case"
- மயக்க பொடி தூவி துணிகரம்
- போலீசார் தீவிர விசாரணை
செங்கம்:
செங்கம் அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சென்னம்மாள் (வயது 70). இவர்கள் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
வீட்டின் அருகே சென்னம்மாள் தனியாக நின்று கொண்டிருந்தார். இதனை காரில் 2 ஆண்களுடன் வந்த மர்மபெண் நீண்ட நேரமாக சென்னம்மாளை நோட்டமிட்டார்.
திடீரென அந்த பெண் சென்னம்மாளிடம் சென்று உங்களுடைய கணவரிடம் நான் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன், அதனை திருப்பி தருவதற்காக வந்துள்ளேன் என்று கூறினார்.
இதனால் செல்லம்மாள் அவர்களை வீட்டின் முன் அழைத்து சென்றார்.
பின்னர் அவர்கள் கொடுத்த ரூ.2 ஆயிரத்தை கையில் வாங்கினார். அந்த நேரத்தில் மூதாட்டி மீது மயக்கபொடி தூவினர். சிறிது நேரத்தில் சென்னாம்மள் மயங்கி கீழே விழுந்தார். சிறிது நேரத்திற்குப் பின்பு மயக்க நிலையில் இருந்து மீண்டு எழுந்து பார்த்தார்.
அப்போது அந்த மர்ம பெண்ணும் அவர்களுடன் இருந்த 2 பேரும் மாயமாகி உள்ளனர். மேலும் கட்டில் அடியில் வைத்திருந்த 7 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னம்மாளின் கணவர் பாலகிருஷ்ணன் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியிலும் இதே போல அந்த மர்ம பெண் தனியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியிடம் உறவினர் என்று கூறி 8 பவுன் நகை கொள்ளையடித்த சென்றுள்ளனர்.
இதே போல கலசப்பாக்கம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் துக்கம் விசாரிப்பது போல் காரில் வந்து கதறி அழுது பெண் 13 பவுன் நகையை நேற்று திருடி சென்று விட்டனர்.
இந்தப் பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது குடித்து விட்டு தகராறு
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்தவர் அஸ்ரத் (22), இவரது தம்பி ரியாஸ் (21). 2 பேரும் கதவுகளுக்கு பாலீஸ் போடும் தொழில் செய்து வந்தனர். அஸ்ரத் நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார்.
மேலும் அஸ்ரத், அவரது தாய் மற்றும் தம்பிரியாசை கட்டையால் தாக்கினார்.
இதில் ஆத்திரமடைந்த ரியாஸ் அண்ணன் அஸ்ரத்தை கட்டையால் சரமாரியாக தாக்கி, வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டார். பின்னர் இன்று காலை அவரது தாய், அறையின் கதவை திறந்து பார்த்தபோது, அஸ்ரத் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரியாசை கைது செய்தனர்.
- முன்பக்க கண்ணாடி உடைந்தது
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜாவை அடுத்த மருதாலம் கூட்ரோடு பகுதியில் கடந்த 28-ந் தேதி நெய்வேலியில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.கவினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக திருத்தணியில் இருந்து வேலூர் நோக்கி செல்வதற்காக வந்த அரசு பஸ் மீது கற்கள் வீசப்பட்டது.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இது தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில் பஸ்மீது கல் வீசி தாக்கியதாக ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரியை சேர்ந்த மணிவண்ணன் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
- மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள செங்கலி குப்பம் ஊராட்சியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 41) .
இவரது மனைவி அறிவுக்கொடி (37). 2 பேரும் தனியார் ஷூ கம்பெனியில் தொழிலா ளியாக வேலை செய்து வருகின்றனர்.
கணவன்- மனைவி 2 பேரும் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்துபார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 பவுன் தங்கநகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரோந்து பணியில் விசாரணை
- மருத்துவமனையில் சிகிச்சை
ஆம்பூர், மே.26-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரி ஒன்று பழுதாகி நின்றுக்கொண்டிருந்தது.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் சங்கர் ஆகியோர் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு விசாரணை செய்ய நடந்து சென்றனர். அப்போது பின்னால் வந்த கனரக லாரி போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது மோதியதுடன் நடந்து சென்ற போலீசார் மீதும் மோதியது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் சங்கர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறிந்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்ணன் என்பவர் அவரிடம் தகராறு
- கண்ணன் வெங்கடாசலத்தை கட்டையால் தாக்கினார்.
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா என்.குமாரபாளையம் அருகில் உள்ள அண்ணா மலைபட்டி கலர்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 48). இவர் அங்குள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை யில் ரேஷன் கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு போவதற்காக வெளியே வந்தார்.
அப்போது நாடார் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. அப்போது ஆத்திரம் அடைந்த கண்ணன் வெங்க டாசலத்தை கட்டையால் தாக்கினார். இதில் வெங்கடா சலத்திற்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதுகுறித்து வெங்கடாசலம் வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.
- சுரேஷ்க்கும் அவரது மனைவிக்கும் குடும்பத்த கராறு
- மனைவியின் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி ஆறுமுகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). டெய்லர் கடை வைத்து நடத்தி வரும் இவருக்கு விஜயா (28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் சுரேஷ்க்கும் அவரது மனைவிக்கும் குடும்பத்த கராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த விஜயா ஜலகண்டாபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சுரேஷ் நேற்று மனைவியின் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
- மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கீழே விழுந்தார்.
தாரமங்கலம்:
மேட்டூர் அருகிலுள்ள தங்காமபுரி பட்டணம் பகுதியை சேர்ந்த வக்கீல் சத்தியமூர்த்தி என்பவரின் மனைவி கஸ்தூரி (வயது 48). இவர் கருமலைக்கூடலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது தங்கை மகன் பிரசன்னாவுடன் மொபட்டில் சேலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றனர்.
தாரமங்கலத்தில் இருந்து கே ஆர் தோப்பூர் படையப்பா நகர் அருகே சென்றுகொண்டு இருந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கீழே விழுந்த கஸ்தூரிக்கு தலையில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்தார். அக்கம்பக்கம் உள்ள வர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகம்மாள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்
- மினிடெம்போ எதிர்பாராதவிதமாக நாகம்மாள் மீது மோதியது
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி நாகம்மாள் (வயது 87). உடல் நிலை சரியில்லாமல் இருந்த இவர் இன்று காலை பாரதி நகர் விநாயகர் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மினிடெம்போ எதிர்பாராதவிதமாக நாகம்மாள் மீது மோதியது. இதில் படுகா யம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே நாகம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஓமலூர் அருகே உள்ள கோட்ட கவுண்டம்பட்டியைச் சேர்ந்த வேன் டிரைவர் ராம்கி (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- லாரி மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதி விபத்து
- டிரைவர், கண்டக்டர் உள்பட 17 பயணிகள் படுகாயமடைந்தனர்.
சேலம்:
சேலம் அருகே மகுடஞ்சா வடி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கனரக லாரி சென்றுகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக லாரி மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 17 பயணிகள் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்று காயமடைந்தவர்களை மீட்டு மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் சிவில் கட்டுமானம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார்.
- தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் பிரசாத் (வயது 35). சிவில் என்ஜினீயரிங் படித்துள்ள இவர், சென்னையில் சிவில் கட்டுமானம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். இவருடைய மனைவி அபிஷா ஜூபி. டாக்டரான இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு டாக்டராக பணியாற்றி வருகின்றார். இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த ஸ்ரீராம் பிரசாத், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊரான தாதம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார். மீண்டும் செல்போன் மூலம் தம்பதியினர் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீராம் பிரசாத் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த வீராணம் போலீசார், அங்கு சென்று, ஸ்ரீராம் பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவரின் உடலை பார்த்து மனைவி மற்றும் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் இரும்பாலை அருகே உள்ள கீரம்பாப்பம்பாடி ஓலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (52). இவர் தொடர்ந்து சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை எடுத்த பிறகும் சர்க்கரை நோய் குணமாகவில்லை. நோய் கொடுமையால் சிரமப்பட்டு வந்த அவர் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மடுவுகாவிரி ஆற்றில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் நிர்வாண நிலையில் கிடந்தது.
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கோட்டை மடுவுகாவிரி ஆற்றில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் நிர்வாண நிலையில் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.இது குறித்து சிங்கிரிபட்டி கிராம நிர்வாக அதிகாரி பாக்யராஜ் கொளத்தூர் போலீசில் புகார் செய்தார்.
கொளத்தூர் போலீசார் பிணத்தை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்