என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் டெய்லர் தற்கொலை
- சுரேஷ்க்கும் அவரது மனைவிக்கும் குடும்பத்த கராறு
- மனைவியின் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி ஆறுமுகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). டெய்லர் கடை வைத்து நடத்தி வரும் இவருக்கு விஜயா (28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் சுரேஷ்க்கும் அவரது மனைவிக்கும் குடும்பத்த கராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த விஜயா ஜலகண்டாபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சுரேஷ் நேற்று மனைவியின் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






