search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் வழக்குபதிவு"

    • தேன்மொழி கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    கடலூர்:

    கோண்டூர் ராதா கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தேன் மொழியை அவரது மகள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. தேன்மொழியை கண்டு பிடிக்கும்படி அவரது மகள் கடலூர் புதுநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • லாரி மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதி விபத்து
    • டிரைவர், கண்டக்டர் உள்பட 17 பயணிகள் படுகாயமடைந்தனர்.

    சேலம்:

    சேலம் அருகே மகுடஞ்சா வடி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கனரக லாரி சென்றுகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக லாரி மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 17 பயணிகள் படுகாயமடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்று காயமடைந்தவர்களை மீட்டு மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×