search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை பலி
    X

    விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை பலி

    • தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கீழே விழுந்தார்.

    தாரமங்கலம்:

    மேட்டூர் அருகிலுள்ள தங்காமபுரி பட்டணம் பகுதியை சேர்ந்த வக்கீல் சத்தியமூர்த்தி என்பவரின் மனைவி கஸ்தூரி (வயது 48). இவர் கருமலைக்கூடலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது தங்கை மகன் பிரசன்னாவுடன் மொபட்டில் சேலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றனர்.

    தாரமங்கலத்தில் இருந்து கே ஆர் தோப்பூர் படையப்பா நகர் அருகே சென்றுகொண்டு இருந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கீழே விழுந்த கஸ்தூரிக்கு தலையில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்தார். அக்கம்பக்கம் உள்ள வர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×