search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pickle"

    ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்றாக பூண்டு ஊறுகாயை எப்படி எளிமையான முறையில் வீட்டில் செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டு - 1 கப்
    எலுமிச்சை சாறு - 1/2 கப்
    சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 1/4 கப்



    செய்முறை :

    பூண்டை தோல் உரித்து தனியாக வைக்கவும்.

    சீரகம், வெந்தயம், மல்லியை தனித்தனியாக கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டை போட்டு வதக்க வேண்டும்.

    பூண்டு வதங்கம் போதே அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு அதனுடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.

    அடுத்து எலுமிச்சை சாற்றை விட்டு, நன்கு கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். சற்று கெட்டியானதும், இறக்கி அதனை குளிர வைத்து, ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு, பயன்படுத்த வேண்டும்.

    இப்போது பூண்டு ஊறுகாய் தயார்!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், பழைய சாதம், சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மாவடு. இன்று மாவடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாவடு - 8 கப்
    கல் உப்பு - தேவையான அளவு
    மிளகாய்த் தூள் - தேவைக்கு
    வெந்தய தூள் - 2 டீஸ்பூன்
    கடுகு தூள் - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    கடுகு - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    கெட்டியான மாவடுக்களைக் கழுவி, ஈரம் போக துடைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் போடுங்கள்.

    அதில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டுக் கலக்குங்கள்.

    தூள் செய்த கல் உப்பை அதில் சேர்த்து, தினமும் கைபடாமல் குலுக்கிவிடுங்கள். மூன்று நாட்களில் தண்ணீர் ஊறிவரும்.

    பின்னர் கடுகு, வெந்தயப் பொடிகளைச் சேர்த்து மஞ்சள் தூளைச் சேருங்கள். மரக் கரண்டியால் அடிக்கடி கிளறிவிடுங்கள்.

    இரண்டு நாட்கள் ஊறியபின் அரை கப் நல்லெண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து ஆறிய பின்னர் மாவடுவில் கலந்துவிட்டால் சுவையான மாவடு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாங்காய், எலுமிச்சையில் ஊறுகாய் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பேரீச்சம்பழத்தில் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம்பழம் - ஒரு கப்
    மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
    வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்
    பூண்டு - 5 பல்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கடுகு - ஒரு டீஸ்பூன்
    வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நறுக்கிய பேரீச்சம் பழத்துடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

    இதனுடன் பூண்டு சேர்த்து வறுக்கவும்.

    பிறகு, ஊறவைத்த பேரீச்சக் கலவையைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மென்மையான கூழ் போல ஆகும்வரை வதக்கவும்.

    நன்றாக கூழ் பதம் வந்தவுடன் இறுதியாக வினிகர் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    ஆறிய பிறகு சுத்தமான பாட்டிலில் சேகரித்து வைத்து பரிமாறவும்.

    சூப்பரான பேரீச்சம்பழ ஊறுகாய் ரெடி.

    இந்த ஊறுகாய் புளிப்பு, காரம், இனிப்பு சுவையுடன் அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைவருக்கும் ஊறுகாய் பிடிக்கும். இன்று கத்தரிக்காய் வைத்து எளிய முறையில் சூப்பரான காரசாரமான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்திரிக்காய் - 500 கிராம்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    புளி - எலுமிச்சம் பழ அளவு,
    மிளகாய்தூள் - 50 கிராம்,
    வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 100 கிராம்,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் சேர்த்து கலக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் கத்திரிக்காயையும் சேர்த்து கலந்து அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை மட்டும் தனியாக எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 3 நாட்கள் செய்யவும்.

    பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி கத்தரிக்காய் கலவையில் ஊற்றிக் கலக்கவும்.

    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால். கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாகற்காய் என்றாலே கசப்பு என்று பல பேர் அதை தொடுவதே இல்லை. ஆனால், பாகற்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்யலாம். இதன் செய்முறை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - 200 கிராம்
    நல்லெண்ணெய் - 100 கிராம்
    மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
    வெந்தைய தூள் - 2 டீஸ்பூன்
    பெருங்காய் தூள் -1 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    கல் உப்பு - சுவைக்கேற்ப.
    வினிகர் - 150 மில்லி



    செய்முறை :

    பாகற்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு அதை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும் .அதை ஈரம் இல்லாத ஒரு பாத்திரத்தில் விட்டு அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

    ஒரு 10 நிமிடங்கள் கையால் பிசைந்து விட்டு, அதை அப்படியே ஒரு நாள் மூடி போட்டு வைத்து விட வேண்டும். கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது.

    மறுநாள், ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகை போட்டு பொரிய விடவும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து பெருங்காய தூள், வெந்தய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும்.

    மறு நிமிடமே ஊற வைத்துள்ள பாகற்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

    பாகற்காய் ஒரு அளவு வதங்கியதும், அதில் வினிகரை ஊற்றவும்.

    அடுப்பை சிம்மில் வைத்து வினிகர் வற்றும் வரை கைவிடாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

    வினிகர் முழுவதும் வற்றி எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வர தொடங்கும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.

    நன்கு ஊறுகாய் பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவைத்து மீண்டும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊறியதும் எடுத்து உபயோகப்படுத்தலாம்.

    சூப்பரான பாகற்காய் ஊறுகாய் ரெடி.

    குறிப்பு:

    பெருங்காயதூள், வெந்தய தூள் இவற்றை எண்ணெயில் போட்டு பொரிந்த உடனே மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். மிளகாய் தூளை எண்ணெயில் போட்டதும் கருக விட கூடாது. உடனே பாகற்காயை சேர்த்து விட வேண்டும்.

    கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களில் ஊறுகாய் வைப்பதன் மூலம் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாது. சுவையும் மாறாது. ஈர ஸ்பூன்கள் பயன்படுத்த கூடாது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 1 கிலோ
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
    சர்க்கரை (சீனி) - கொஞ்சம்
    வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்து கொள்ளவும்.

    தக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத்தாளித்த பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி ஓரளவு வதங்கியதும் அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி ஓரளவு வதங்கியவுடன் சர்க்கரை (சீனி) யையும், வெந்தயப் பொடியையும் சேர்க்கவும். கலவையை சுவை பார்த்து, தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

    அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிடவும்.

    தக்காளியில் உள்ள நீர் எல்லாம் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

    சூப்பரான தக்காளி ஊறுகாய் ரெடி.

    சூடு ஆறியபின் பாட்டில்களில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளவும். சில வாரங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. அசைவ பிரியர்களுக்கு பிடித்த மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்)
    மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி
    வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி
    பூண்டு - 1
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    வினிகர் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - 1 மேஜைக்கரண்டி
    கறிவேப்பில்லை - சிறிது
    நல்லெண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை  :

    இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

    மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.   

    பின்னர் அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    5 நிமிடம் ஆனதும் அதில் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த கலவை நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    சுவையான மீன் ஊறுகாய் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெங்காய ஊறுகாய் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்ன வெங்காயம் - கால் கிலோ,
    காய்ந்த மிளகாய் - பத்து,
    புளி - எலுமிச்சை அளவு,
    உப்பு - தேவையான அளவு,
    நல்லெண்ணெய் - 100 மில்லி,
    பெருங்காயம் - தேவையான அளவு,
    வெல்லம் - நெல்லிக்காய் அளவு,
    கடுகு - அரை டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    கால் டீஸ்பூன் கடுகை வெறும் கடாயில் வறுத்து பொடித்து கொள்ளவும்.

    மிக்ஸியில் காய்ந்த மிளகாய், ஊற வைத்த புளி, உப்பு ஆகியவற்றை போட்டு விழுதாக அரைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கால் டீஸ்பூன் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

    ஊறுகாய் அடிபிடிக்காமல் அடிக்கடி கரண்டியால் கிளறிக்கொள்ளவும்.

    ஊறுகாய் சுண்ட சுருள வதங்கி எண்ணெய் பிரிந்து வெங்காயம் நல்ல மணம் வந்தவுடன் வறுத்து பொடித்த கடுகை போட்டு ஊறுகாயில் கலந்து ஆறிய பின் ஊறுகாயை காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.

    சூப்பரான வெங்காய ஊறுகாய் ரெடி.

    குறிப்பு - சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்க்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. இன்று நாரத்தங்காய் வைத்து சுவையான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :      

    நாரத்தங்காய் - 3,  
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    வெந்தயம் - அரை டீஸ்பூன்,  
    காய்ந்த மிளகாய் - 8,  
    கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்,  
    நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - 2 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :     

    நாரத்தங்காயை நன்றாக கழுவிய துடைத்த பின்னர் துண்டுகளாக வெட்டி விதைகளை நீக்கி விடவும்.

    வெட்டிய நாரத்தங்காய் துண்டுகளை ஜாடியில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும்.

    இதை பத்து நாள்கள் வரை தினமும் கிளறிவிடவும்.

    வெறும் வாணலியில் வெந்தயம், காய்ந்த மிளகாயைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

    நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    குறிப்பு : நாரத்தங்காய் ஊறுவதற்கு 10 நாள்களாகும். தேவைப்படும்போது தாளித்துக்கொண்டால் ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகவும், மேலும் சுவையாகவும் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இஞ்சி புளி ஊறுகாய். இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்),
    புளி - சிறிய எலுமிச்சை அளவு,
    வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்.

    தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும்.

    அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    பச்சை மிளகாய், இஞ்சி சிறிது வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும்.

    அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

    சூப்பரான இஞ்சி - புளி ஊறுகாய் ரெடி.

    குறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய் ஊறுகாய் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊறுகாயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 200 கிராம்,
    கடுகுத்தூள்  - ஒரு டீஸ்பூன்,
    ஆம்சூர்பொடி  - ஒரு டீஸ்பூன்,
    வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன்,   
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    பச்சை மிளகாயை வட்ட வடிவில் கொஞ்சம் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும்.

    நறுக்கிய பச்சை மிளகாயுடன் கடுகுத்தூள், மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

    கடைசியாக, கடுகு எண்ணெய் விட்டுக் கலந்து… ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைத்து, தினமும் குலுக்கி விட வித்தியாசமான சுவையில் பச்சை மிளகாய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள தயார்.

    இந்த ஊறுகாய் இரண்டு, மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி - கால் கிலோ
    பூண்டு - 6 பல்
    காய்ந்த மிளகாய் - 6
    வெந்தயப் பொடி - ஒரு டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    நல்லெண்ணெய், - தேவையான அளவு
    புளி - சிறிதளவு
    பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளுங்கள்.

    மிளகாய் ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைத்து, பூண்டு, புளி, தக்காளியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக சுருண்டு வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெந்தயப் பொடியைத் தூவி இறக்கிவையுங்கள்.

    இந்தத் தக்காளி ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×