search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomato pickle"

    தோசை, இட்லி, சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 1 கிலோ
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
    சர்க்கரை (சீனி) - கொஞ்சம்
    வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்து கொள்ளவும்.

    தக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத்தாளித்த பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி ஓரளவு வதங்கியதும் அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி ஓரளவு வதங்கியவுடன் சர்க்கரை (சீனி) யையும், வெந்தயப் பொடியையும் சேர்க்கவும். கலவையை சுவை பார்த்து, தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

    அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிடவும்.

    தக்காளியில் உள்ள நீர் எல்லாம் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

    சூப்பரான தக்காளி ஊறுகாய் ரெடி.

    சூடு ஆறியபின் பாட்டில்களில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளவும். சில வாரங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி - கால் கிலோ
    பூண்டு - 6 பல்
    காய்ந்த மிளகாய் - 6
    வெந்தயப் பொடி - ஒரு டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    நல்லெண்ணெய், - தேவையான அளவு
    புளி - சிறிதளவு
    பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளுங்கள்.

    மிளகாய் ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைத்து, பூண்டு, புளி, தக்காளியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக சுருண்டு வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெந்தயப் பொடியைத் தூவி இறக்கிவையுங்கள்.

    இந்தத் தக்காளி ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×