என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "passanger"
- மது குடித்துவிட்டு, பாட்டில்களை உடைத்து வீசுவதால் விலங்குகளுக்கு பாதிப்பு
- மலை உச்சியில் தடுப்பு வேலி அமைத்து காட்சி முனையை சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த அழகான பள்ளதாக்குகள் உடைய சோலூர் தட்டனேரி காட்சிமுனையம் உள்ளது. இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்து, அங்கு உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
சோலுார் தட்டனேரி காட்சிமுனையம் பகுதியி ல்விடுமுறை தினங்களில் கூட்டம் அலைமோதும். ஆனால் இங்கு பாதுகாப்பு தடுப்பு இல்லை.
எனவே சுற்றுலா பயணி கள் மற்றும் பொதுமக்கள் காட்சிமுனையின் ஆபத் தான பகுதியான மலையின் விளிம்பில் நின்று 'செல்பி' மற்றும் புகைபடம் எடுக் கின்றனர்.மேலும்ஒருசில இளை ஞர்கள், காட்சி முனை பகுதியில் அமர்ந்து மது குடித்துவிட்டு, பாட்டி ல்களை உடை த்து வீசு கின்றனர். இதனா ல்அங்கு வரும் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.
தட்டனேரி பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தால் காடுகள், பைசன் பள்ளத்தாக்கு மலைகள், வளைந்து நெளிந்து செல் லும் மலைப்பாதை மற்றும் மசினகுடி வாழ்விடங்களின் அற்புத அழகிய காட்சியை பார்க்க முடியும்.நீலகிரியின் காடுகள், தேயிலை வயல்கள் மற்றும் நீர்நிலைகள் வழி யாக சோலூருக்கு செல்வது மகிழ்ச்சியான அனுபவம்.
எனவே சோலுார் தட்டனேரி காட்சி முனை பகுதியை சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். அங்கு போதிய பாதுகாப்பு தடுப்புகளை ஏற்படுத்தி, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர்.
- தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
கோவை
கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை என தொடர்ந்து விடுமுறை வருவதால் கோவையில் தங்கி வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர்.
இதற்காக கோவையில் இருந்து நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. இன்றில் இருந்து விடுமுறை தொடங்கி விட்டதால் நேற்று மாலையே பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இதனால் கோவையில் உள்ள சிங்காநல்லூர், காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் வசதிக்காக சிங்காநல்லூரில் இருந்து திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும், காந்திபுரத்தில் இருந்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டன.
இருப்பினும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் அவர்களுக்கு போதிய பஸ்கள் கிடைக்கவில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. காத்திருந்தும் பஸ்கள் வராததால் மக்கள் சிரமம் அடைந்தனர்.பண்டிகை காலங்களில் முன்கூட்டியே அதிகளவு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கையும் வைத்தனர்.
பயணிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் கோவையில் கூடுதலான பஸ்கள் இயக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, பண்டிகை காலம் என்பதால், நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 70 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறை சார்பில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்