search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pakistan cricket board"

    இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இரண்டு பந்தை லீவ் செய்வதற்காக இரண்டு லட்சம் டாலர் விலை பேசினார்கள் என உமர் அக்மல் கூறியுள்ளார். #UmarAkmal
    பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் உமர் அக்மல். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது இவரது வழக்கம். தற்போது உடற்தகுதி பிரச்சனையால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருக்கிறது சமீபத்தில் டிவி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின்போது இரண்டு பந்தை லீவ் செய்வதற்கு இரண்டு லட்சம் டாலர் பணம் தருவதாக தன்னை அணுகிறார்கள் என்ற வெடிகுண்டை தூக்கிப்போட்டார்.

    மேலும், இதுகுறித்து அக்மல் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக விளையாடிய ஒவ்வொரு போட்டியில் சூதாட்டக்காரர்கள் என்னை அணுகிறார்கள். பெரும்பாலும் ஐசிசி தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரின்போது இந்த சம்பவங்கள் நடைபெற்றன.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக்கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்தது. இதில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் உமர் அக்மல் நான்கு பந்துகளை சந்தித்து டக்அவுட் ஆனார். இந்த தொடரின்போதுதான் தன்னை அணுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து டிவிக்கு அவர் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பந்துகளை லீவ் செய்தற்காக என்னை அணுகிறார்கள். அதற்காக இரண்டு லட்சம் டாலர் தருவதாக கூறினார்கள்.



    உலகக்கோப்பையில் இது எங்களுடைய முதல் போட்டி. இந்தியாவிற்கு எதிராக நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் என்னை அணுகிறார்கள். ஆனால், நான் அவர்களிடம், நான் மிகவும் கண்டிப்பானவன், பாகிஸ்தானுக்காக விளையாடும்போது, இதுகுறித்து என்னிடம் மீண்டும் பேசக்கூடாது என்றேன்’’ என்று கூறியுள்ளார்.

    இவரது பேட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் எதிர்ப்பு பிரிவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு உமர் அக்மலுக்கு சம்மன் வழங்கியுள்ளது.
    பாகிஸ்தான் வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக் தொடரில் விளையாடும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முடிவு எடுத்துள்ளது. #PAK #PCB
    டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட்டாக மாற்றமைடைந்து, தற்போது டி20 கிரிக்கெட்டாக விளையாடப்பட்டு வருகிறது. டி20 கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்பட்டதால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரை தொடங்கியது. இதற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அத்துடன் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக வழங்கப்பட்டது.

    இதனால் சர்வதேச அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டினார். ஐபிஎல்-ஐ தொடர்ந்து முன்னணி கிரிக்கெட் வாரியங்கள் டி20 லீக் தொடர்களை நடத்தின.

    ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதில்லை. அதேபோல் இந்திய வீரர்கள் மற்ற தொடர்களில் பங்கேற்பதில்லை. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வீரர்கள் பல்வேறு டி20 லீக்கில் ஆடுகிறார்கள்.

    பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், வங்காள தேச பிரீமியர் லீக் போன்றவற்றில் விளையாடுகிறார்கள். மற்ற கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 லீக்கில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்க வேண்டும். தற்போது தடையில்லா சான்றிதழ் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.



    புதிய மாற்றத்தின்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக்கில்தான் விளையாட முடியும். அதற்கு மேல் விளையாட முடியாது.

    பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவார்கள். இதை தவிர்த்து மேலும் என்றில்தான விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் தொழில்முறையாக சம்பளம் குறைவு. இந்நிலையில் இந்த கட்டுப்பட்டால் மேலும் அவர்களது வருமானம் தடைபெற வாய்ப்புள்ளது.

    வேலைப்பளு அதிகம், காயம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
    ×