என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "NZvIND"
- பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் உள்ளனர்.
- இதுவரை நடந்த 20 போட்டியில் இந்தியா 11-ல், நியூசிலாந்து 9-ல் வெற்றி பெற்றுள்ளன.
வெல்லிங்டன்:
இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் , ஒருநாள் ஆட்டத்துக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா ஒருநாள் தொடரில் ஆடவில்லை. ரிஷப் பண்ட் இரு தொடர்களிலும் துணை கேப்டனாக இருக்கிறார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் நாளை (18-ந்தேதி ) நடக்கிறது.
20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த மோசமான ஆட்டத்தால் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
இதனால் நியூசிலாந்து மண்ணில் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடி உள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் உள்ளனர். ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர்.
உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். உலக கோப்பையில் சரியான முறையில் வாய்ப்பு வழங்கப்படாத யசுவேந்திர சாஹல், தீபக் ஹூடா ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுகிறார்கள்.
நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான டிரெண்ட் போல்ட், அதிரடி பேட்ஸ்மேன் மார்டின் குப்தில் ஆகியோர் ஒயிட் பால் போட்டிகளில் (20 ஓவர், ஒரு நாள் ஆட்டம்) இடம் பெறவில்லை.
கேப்டன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாகும். அந்த அணியும் உலக கோப்பையில் அரை இறுதி வரை சென்று பாகிஸ்தானிடம் தோற்றது. பிலிப்ஸ், கான்வே, பெர்குசன், ஜிம்மி நீசம் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 21-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 20 போட்டியில் இந்தியா 11-ல், நியூசிலாந்து 9-ல் வெற்றி பெற்றுள்ளன.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), இஷான் கிஷன், சுப்மன் கில், ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்.
நியூசிலாந்து: வில்லி யம்சன் (கேப்டன்), பின் ஆலன், கான்வே, பிலிப்ஸ், பிரேஸ்வெல், ஜிம்மி நீசம், டாரல் மிச்சேல், சான்ட்னெர், சவுத்தி, ஆடம் மிலின், பிளையர் டிக்னெர், சோதி.
- எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது.
- டிரெண்ட் போல்ட் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி அரையிறுதியில் தோற்று வெளியேறின. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து செல்ல உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் செயல்படுவார். இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக வில்லியம்சன் தொடர்கிறார். டிரண்ட் போல்ட் மற்றும் கப்திலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவுடனான தொடர் குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது. டிரெண்ட் போல்ட் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார். அவரை மீண்டும் நியூசிலாந்து அணியில் பார்ப்போம் என நம்புகிறேன்.
இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.
- டி20 மற்றும் ஒருநாள் அணியில் கேஎல் ராகுல் இடம் பெறவில்லை
- 20 ஓவர் போட்டிக்கு ஹர்த்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெலிங்டன்:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடர்களில் ரோகித் சர்மா, விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந் தேதியும், 3-வது போட்டி 22-ந் தேதியும் நடக்கிறது.
3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் 25-ந் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் நியூசிலாந்துக்கு எதிராக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டிக்கு ஹர்த்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி20 மற்றும் ஒருநாள் அணியில் கேஎல் ராகுல் இடம் பெறவில்லை. இந்த இரண்டு தொடரிலும் அதிவேக இளம் பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம்பெற்றுள்ளார்.
இந்திய ஒருநாள் அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், சக்ரன் யாதவ். மாலிக், குல்தீப் சென்.
இந்திய டி20 அணி:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்ஷல் சிராஜ், முகமது சிராஜ், முகமது சிராஜ் குமார். சிங், உம்ரான் மாலிக்.
விஜய் சங்கர் 28 பந்தில 43, ரிஷப் பந்த் 12 பந்தில் 28, ஹர்திக் பாண்டியா 11 பந்தில் 21 ரன்கள் விளாசினர். டோனி 16-வது ஓவரின் 2-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டோனி ஆட்டமிழக்கும்போது கடைசி 28 பந்தில் 68 ரன்கள் தேவைப்பட்டது.
7-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்தி உடன் இணைந்து குருணால் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவுக்கு வாய்ப்பு இருந்தது. தினேஷ் கார்த்திக் - குருணால் பாண்டியா 22 பந்தில் 52 ரன்கள் குவித்ததால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது தினேஷ் கார்த்திக் 11 பந்தில் 24 ரன்னுடனும், குருணால் பாண்டியா 12 பந்தில் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 16 ரன்கள்தானே, இந்தியா வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் நம்பினர்.
முதல் பந்தில் தினேஷ் கார்த்திக் இரண்டு ரன்கள் அடித்தார். 2-வது பந்தில் ரன்ஏதும் இல்லை. அடுத்த பந்தை தூக்கியடித்தார். ஆனால் பந்து சரியாக பேட்டில் படவில்லை. ஆனால் ஈசியாக ஒரு ரன் எடுத்திருக்கலாம். குருணால் பாண்டியா ‘ஸ்ட்ரைக்கர்’ க்ரீஸ் நோக்கி ஓடினார். ஆனால் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுக்க வேண்டாம் என்று குருணால் பாண்டியாவை தடுத்தார்.
இதனால் குருணால் பாண்டியா விரக்தியடைந்தார். ரசிகர்களுடன் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால், குருணால் பாண்டியா ஏற்கனவே 19-வது ஓவரின் கடைசி பந்தில் இமாலய சிக்ஸ் விளாசியிருந்தார். இதனால் அதிக நம்பிக்கையில் இருந்தார்.
3-வது பந்தில் ஒரு ஓடாததால் இந்தியாவுக்கு கடைசி 3 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 3 பந்தையும் பவுண்டரிக்கு வெளியே அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. 4-வது பந்தும் பேட்டிங் சரியாக படவில்லை. ஆனால், இந்த முறை தினேஷ் கார்த்திக் ஒரு ரன் அடித்தார். கடைசி இரண்டு பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை குருணால் பாண்டியா தூக்கியடிக்க முயன்றார். ஆனால் ஒரு ரன்தான் கிடைத்தது. அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது.
கடைசி பந்தில் 12 ரன்கள் வேண்டும் என்ற நிலையில், வைடு மற்றும் சிக்ஸ் மூலம் இந்தியாவிற்கு 7 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
தினேஷ் கார்த்திக் அதீத நம்பிக்கையில் இருந்ததால் அவரை ‘திருவாளர் அதீத நம்பிக்கை’ என டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஒருவேளை 3-வது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுக்கு ஓடியிருந்து, 4-வது பந்தில் குருணால் பாண்டியா சிக்ஸ் அடித்திருந்தால், இந்தியாவுக்கு கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டிருக்கும். இப்படி நிகழ்ந்திருந்தால் நியூசிலாந்து பந்து வீச்சாளர் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பார். இதனால் தினேஷ் கார்த்திக்கை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விஜய் சங்கர் 3-வது பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டார். அந்த இடத்தில் அவர் சிறப்பாக விளையாடினார். முதல் போட்டியில் 23 ரன்கள் அடித்த அவர், கடைசி போட்டியில் 28 பந்தில் 43 ரன்கள் விளாசி அனைவரது பார்வையையும் ஈர்த்தார்.
இந்நிலையில் இந்தியா திரும்பியுள்ள அவர், அணி நிர்வாகம் 3-வது இடத்தில் களம் இறக்கியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் சங்கர் கூறுகையில் ‘‘அணி நிர்வாகம் என்னை 3-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்யுங்கள் என்று கூறியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது. சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி விளையாடுவதில் கவனம் செலுத்தினேன். இந்தியா போன்ற அணிக்காக விளையாடும்போது, எல்லா விதங்களிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர் முழுவதில் இருந்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன். நான் அதிக அளவில் பந்து வீசவில்லை. ஆனால், வித்தியாசமான சூழ்நிலைகளில் பந்து வீச கற்றுக் கொண்டேன். விராட் கோலி, ரோகித் சர்மா, டோனி எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பார்த்தேன். அதில் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டேன்.
என்னைப் பொறுத்தவரையில் கடைசி போட்டி கூட கற்றுக் கொள்வதற்கான அனுபவம்தான். இன்னொரு பவுண்டரியை விட ஒன்று அல்லது இரண்டு ரன்களுக்கு முயற்சி செய்திருக்கனும். நான் எப்போதும் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்றுதான் விரும்பிவேன். அணிக்காக என்னால் வெற்றியை தேடிக்கொடுக்க முடியும் என்றால், தானாகவே அது என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தை வளர்க்கும்.
என்னைப் பொறுத்தவரைக்கும், முக்கியமான விஷயம், வித்தியாசமான சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக மாறி தொடர்ச்சியாக ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
இந்தத் தோல்வியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என இழந்தது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பபு டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனை முடிவிற்கு வந்தது.
இதற்கு முன் இந்தியா 9 இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றியை ருசித்து வந்தது. நியூசிலாந்து மிகக்குறைவான ரன்னில் வெற்றி பெறுவது இது நான்காவது முறையாகும்.
இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்தின் 2-வது மிகக்குறைந்த ரன் வெற்றி இதுவாகும். கடந்த 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்திலும், 2012-ல் இந்தியாவிற்கு எதிராக 1 ரன்னிலும், 2009-ல் இலங்கைக்கு எதிராக 3 ரன்னிலும் வெற்றிப் பெற்றிருந்தது.
இந்த தோல்வியில் மூலம் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 8 போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. எந்தவொரு அணிக்கெதிராகவும் இந்தியா இந்த எண்ணிக்கையில் தோல்வியை சந்தித்ததில்லை.
குருணால் பாண்டியா 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார்.
கொலின் முன்ரோ டி20 கிரிக்கெட்டில் 92 சிக்சர்கள் விளாசி, சர்வதேச அளிவில் 4-வது இடத்தையும், நியூசிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
நேற்றைய போட்டியின் மூலம் எம்எஸ் டோனி 300-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அடியெடுத்து வைத்தார். இதன்மூலம் 300 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரோகித் சர்மா 298 போட்டிகளிலும், சுரேஷ் ரெய்னா 296 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எழுச்சி பெற்றது. இதனால் இந்த 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்திய அணி ஹாமில்டனில் 4-வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்கி ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 92 ரன்னில் சுருண்டதை யாரும் மறந்து விட முடியாது. அதே மைதானத்தில் தான் இந்த போட்டியும் நடப்பதால் இந்திய வீரர்கள் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சிலும் நல்ல நிலையிலேயே உள்ளது. ஆனால் ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதில் சீரான போக்கு இல்லை. அது தான் அவர்களின் பலவீனமும் கூட. ஏற்கனவே ஒரு நாள் தொடரை பறிகொடுத்து விட்ட நிலையில், 20 ஓவர் தொடரை வென்று அதற்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் அந்த அணி வீரர்கள் இருப்பதால் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.
ஹாமில்டனில் இதுவரை எட்டு 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் நியூசிலாந்து அணி 6-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். இந்திய அணி இங்கு 20 ஓவர் போட்டியில் ஆட இருப்பது இதுவே முதல்முறையாகும்.
இரண்டாவது 20 ஓவர் போட்டி நடந்த ஆக்லாந்து ஸ்டேடியத்தை விட இது சற்று பெரியது. ஆனாலும் பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம், வேகமான அவுட் பீல்டு ஆகியவற்றை பார்க்கும் போது இங்கு ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல்.
நியூசிலாந்து: டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, சோதி, பிளைர் டிக்னெர்.
இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 மற்றும் டி.டி. ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
முன்னதாக இதே மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் சந்திக்கின்றன.
முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்குகிறது.#NZvIND
பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா 50 ரன்னும், தவான் 30 ரன்னும் அடித்தனர். ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 40 ரன்களும், டோனி ஆட்டமிழக்காமல் 20 ரன்களும் சேர்த்தனர். இதனால் இந்தியா 18.5 ஓவரில் 162 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குருணால் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. கடைசி போட்டி நாளைமறுநாள் ஹாமில்டனில் நடக்கிறது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த வெற்றி குறித்து கூறுகையில் ‘‘முதலில் சிறப்பாக பந்து வீசிய பின், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட விதம் மகிழ்ச்சியளிக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் எங்களது திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை. ஆனால், இந்த போட்டியில் சரியாக செயல்படுத்தினோம். அதற்கான வெகுமதி இன்று எங்களுக்கு கிடைத்தது.
நமது தவறுகளை புரிந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது. தெளிவான மனநிலையுடன் வீரர்கள் களம் இறங்கி விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். தரமான அணியை நாங்கள் பெற்றுள்ளோம். அடுத்த போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று எப்படி விளையாடினோமோ, அதைபோல் கடைசி போட்டியிலும் விளையாடுவோம் என்று நம்புகிறேன்’’ என்றார்.
தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா - தவான் ஜோடி 9.2 ஓவரில் 79 ரன்கள் குவித்தது.
3 விக்கெட் வீழ்த்திய குருணால் பாண்டியா
அடுத்து தவான் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். தவான் 31 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஜய் சங்கர் 8 பந்தில் 14 ரன்கள் சேர்த்தார்.
4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. இந்தியா 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அரைசதம் அடித்த ரோகித் சர்மா
ரிஷப் பந்த் 28 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்தும், எம்எஸ் டோனி 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 1-1 என சமநிலை செய்தது. 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நாளைமறுநாள் (10-ந்தேதி) நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது.
தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மா 35 ரன்னைத் தொட்டபோது சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்திருந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை (2272) பின்னுக்குத்தள்ளி முதல் இடம்பிடித்தார்.
இந்த போட்டிக்கு முன் ரோகித் சர்மா 2238 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் இருந்தார். இந்த போட்டியில் 50 ரன்கள் அடித்ததன் மூலம் 2288 ரன்கள் சேர்த்துள்ளார். ஹிட்மேன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் 4 சதம், 15 அரைசதம் விளாசியுள்ளார். பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2263 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
செய்பெர்ட், கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தலா 12 ரன்னில் ஆட்டமிழந்தனர். சுழற்பந்து வீச்சாளர் குருணால் பாண்டியா துள்ளியமாக பந்து வீச கேன் வில்லியம்சன் 20 ரன்னிலும், மிட்செல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்னுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராண்ட்ஹோம் 28 பந்தில் 4 சிக்சர், 1 பவுண்டரியுடன் 50 ரன்கள் சேர்த்தார். ராஸ் டெய்லர் 42 ரன்கள் சேர்த்தார். சான்ட்னெர் 7 ரன்னிலும், சவுத்தி 3 ரன்னிலும ஆட்டமிழக்க நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.
இதனால் இந்தியாவிற்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குருணால் பாண்டியா 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்