search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதன்முறையாக இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இழந்தது இந்தியா
    X

    முதன்முறையாக இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இழந்தது இந்தியா

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இழந்ததன் மூலம் இந்தியாவின் தொடர் சாதனை முடிவிற்கு வந்துள்ளது. #NZIND #TeamIndia
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 208 ரன்கள் மட்டுமே அடித்து 4 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இந்தத் தோல்வியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என இழந்தது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பபு டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனை முடிவிற்கு வந்தது.

    இதற்கு முன் இந்தியா 9 இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றியை ருசித்து வந்தது. நியூசிலாந்து மிகக்குறைவான ரன்னில் வெற்றி பெறுவது இது நான்காவது முறையாகும்.

    இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்தின் 2-வது மிகக்குறைந்த ரன் வெற்றி இதுவாகும். கடந்த 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்திலும், 2012-ல் இந்தியாவிற்கு எதிராக 1 ரன்னிலும், 2009-ல் இலங்கைக்கு எதிராக 3 ரன்னிலும் வெற்றிப் பெற்றிருந்தது.

    இந்த தோல்வியில் மூலம் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 8 போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. எந்தவொரு அணிக்கெதிராகவும் இந்தியா இந்த எண்ணிக்கையில் தோல்வியை சந்தித்ததில்லை.

    குருணால் பாண்டியா 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார்.

    கொலின் முன்ரோ டி20 கிரிக்கெட்டில் 92 சிக்சர்கள் விளாசி, சர்வதேச அளிவில் 4-வது இடத்தையும், நியூசிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

    நேற்றைய போட்டியின் மூலம் எம்எஸ் டோனி 300-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அடியெடுத்து வைத்தார். இதன்மூலம் 300 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரோகித் சர்மா 298 போட்டிகளிலும், சுரேஷ் ரெய்னா 296 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
    Next Story
    ×