search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Niti Aayog"

    நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் 17-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. #NITIAayog #pmmodi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டது.

    மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் கடந்த 1-1-2015 அன்று உருவாக்கப்பட்ட புதிய அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணை தலைவராக ராஜிவ் குமார் என்பவரும் செயல்பட்டு வருகின்றனர். 

    மாநில அரசின் பங்களிப்புடன் நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக விவாதித்து, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்டவை இந்த அமைப்பின் முக்கிய அம்சமாக உள்ளது.

    இந்த நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் 17-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

    வரும் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி மாலைவரை நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், மாநில முதல் மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஆயுஷ்மன் பாரத், தேசிய சத்துணவு திட்டம், இந்திரதனுஷ், மாவட்டங்களின் வளர்ச்சி மற்றும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது போன்ற விவகாரங்கள் இந்த கூட்டத்தின்போது விவாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது. #NITIAayog #pmmodi
    இந்தியாவில் நிலவும் கடும் வறட்சியால் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் ஆண்டிற்கு 2 லட்சம் பேர் இறப்பதாக ஆய்வில் கிடைத்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #NitiAayog
    புதுடெல்லி:

    இந்தியாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து மத்திய அரசின் நிதி ஆயக் குழு ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

    இந்தியாவில் ஆண்டுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அறிக்கையின் படி பல முக்கிய நகரங்களில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படும். அடுத்த 10 ஆண்டுகளில் குடிநீர் தட்டுப்ப்பாடு இரண்டு மடங்காகும்.

    தற்சமயம் 600 மில்லியன் இந்தியர்கள் கடுமையான நீர் பற்றாக்குறையால் தவிக்கின்றனர். சுத்தமான குடிநீர் கிடைக்காமல் ஆண்டிற்கு 2 லட்சம் பேர் பலியாகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபடுகிறது. அம்மாநிலத்தின் நீர் மேலாண்மை, நிலத்தடி நீர் சேமிப்பு, பாசனமுறை மற்றும் குடிநீர் மேலாண்மை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இது கணக்கிடப்படுகிறது.


    நீர் தட்டுப்பாடு இந்தியாவில் மட்டும் ஏற்பட வில்லை. உலகின் பல நாடுகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எதிர்காலத்தில் கடும் வறட்சி ஏற்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவறினால் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். #NitiAayog


    விளம்பர மதிப்பு அடிப்படையில் பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசுகள் வரி விதிப்பதால், அவர்கள் வரியை கூடுதல் அளவு குறைக்க வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். #NITIAayog #PetrolDiesel
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 11-வது நாளாக நேற்று உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து, ரூ.80.11-ல் இருந்து ரூ. 80.42 ஆனது.

    டீசல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.72.14-ல் இருந்து ரூ.72.35-க்கு விற்பனை ஆனது.

    நாளும் விலை உயர்ந்து, சாமானிய மக்களும், வாகன ஓட்டிகளும் அல்லாடுகிறபோதும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை முன் வரவில்லை.இந்த நிலையில் நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியின்போது, “வரியைக் குறைக்கும் தகுதி இருக்கிறது. ஆனால் வரி குறைப்பு நடவடிக்கையை மாநில அரசுகளும், மத்திய அரசும் சேர்ந்து செய்ய வேண்டும். விளம்பர மதிப்பு அடிப்படையில் பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசுகள் வரி விதிப்பதால், அவர்கள் வரியை கூடுதல் அளவு குறைக்க வேண்டும்” என்று கூறினார்.

    மாநில அரசுகள் 10-15 சதவீத அளவுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். #NITIAayog #PetrolDiesel
    ×