search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Air Services"

    புதுவையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தின் சேவையை விரிவுபடுத்தி ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங்கிற்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #puducherryAirport

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ‘உதான்’ திட்டத்தில் சிறிய நகரங்களில் விமான சேவை செய்யும் விமான நிறுவனங்களுக்கு 50 சதவீத கட்டணத்தை மத்திய அரசே ஏற்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    புதுவையில் தடைபட்டிருந்த விமான சேவை மீண்டும் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கியது. புதுவையில் இருந்து ஐதராபாத்துக்கும், புதுவையில் இருந்து பெங்களூருக்கும் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த 2 விமானங்களும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பெங்களூருவுக்கு கூடுதலாக ஒரு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் விமான சேவையை விரிவு படுத்தும் வகையில் புதுவையில் இருந்து சென்னை, சேலம், கோவை, கொச்சின் நகரங்களுக்கு விமான சேவை இயக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல் கட்டமாக சென்னை, சேலம் நகரங்களுக்கு கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் விமானங்களை இயக்க ஏர் ஒடிசா நிறுவனம் அறிவித்தது. இதற்கான முன்பதிவும் தொடங்கியது. ஆனால், திடீரென இந்த விமான சேவை கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் ஐதராபாத்துக்கு செல்லும் விமான சேவையை விரிவு படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுவை விமான நிலையத்தின் ஓடு தளம் விஸ்தாரமாக இல்லாததால் நேரடியாக வெளி நாடுகளுக்கு விமானத்தை இயக்க முடியாது.


    இதனால் புதுவையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தின் சேவையை விரிவுபடுத்தி ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங்கிற்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் தொடங்க உள்ளது.

    இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கி உள்ளது. காலை 11.15 மணிக்கு புதுவையில் இருந்து புறப்படும் ஐதராபாத் விமானம் அங்கு பேங்காக் செல்லும் விமானத்துடன் நேரடி இணைப்பை ஏற்படுத்தி கொடுக்கும். அந்த விமானம் இரவு 9.40 மணிக்கு பேங்காங் சென்று அடையும்.

    அதே போல் இரவு 10.40 மணிக்கு பேங்காங்கில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து, அங்கிருந்து மறுநாள் காலை 11.25 மணிக்கு புதுவை வந்தடையும். உணவில்லா பயணத்துக்கு ரூ.12 ஆயிரத்து 500-ம், உணவுடன் கூடிய பயணத்துக்கு ரூ.13 ஆயிரத்து 200 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் இருந்து சென்னை மற்றும் சேலத்துக்கு வருகிற 15-ந் தேதி முதல் புதிய விமான சேவையை தொடங்க உள்ளது. #puducherryAirport
    புதுச்சேரி:

    புதுவை விமான நிலையத்திலிருந்து தற்போது பெங்களூர் மற்றும் ஐதராபாத்துக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை அளித்து வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி முதல் புதுவையில் இருந்து சென்னை மற்றும் சேலத்துக்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளது. ஏர் ஒடிஷா நிறுவனம் பயணித்திற்கான முன் பதிவையும் தற்போது தொடங்கியுள்ளது.

    அதன்படி, சென்னையிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.55 மணிக்கு புதுவை வந்தடையும். மீண்டும் மதியம் 1.15 மணிக்கு புதுவையில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 2 மணிக்கு சென்னையை சென்றடையும்.



    அதேபோல், காலை 9.10 மணிக்கு புதுவையில் இருந்து புறப்படும் விமானம் காலை 10 மணிக்கு சேலம் சென்றடையும். மீண்டும் மதியம் 12.15 மணிக்கு சேலத்திலிருந்து புறப்படும் விமானம் மதியம் 1 மணிக்கு புதுவை வந்தடையும். #puducherryAirport
    ×