என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Navagragam"
- சந்திரனுடன் இணைந்தால், மனத் தெளிவை ஏற்படுத்துவான்.
- சூரியனுடன் இணைந்த புதன், சிந்தனை வளத்தைப் பெருக்குவான்.
சூரியனுடன் இணைந்த புதன், சிந்தனை வளத்தைப் பெருக்குவான்.
அதனை நிபுணயோகம் எனப் பெருமைபடத் தெரிவிக்கிறது ஜோதிடம்.
ஆனால் அவனுடன் முற்றிலும் ஒன்றினால், விபரீத பலனைத் தந்து, துயரத்தைச் சந்திக்க நேரிடும்.
குருவுடன் சேரும் போது, ஆன்மிக நெறியைத் தந்தருள்வான்.
செவ்வாயுடன் இணையும் போது, உலகவியலில் திளைத்து, சிறப்பான செயலால் பேரும் புகழும் பெற்றுத் திகழலாம்.
சந்திரனுடன் இணைந்தால், மனத் தெளிவை ஏற்படுத்துவான்.
சுக்கிரனுடன் இணைந்தால், தாம்பத்தியத்தை இழக்க நேரிடும், சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டு, செல்வ வளம் பெற்றாலும், செல் லாக்காசாக மாற நேரிடும்.
ராகுவுடன் சேர்ந்தால் வீண்பழி, அவப் பெயர்தான் மிஞ்சும். பலவீனமான மேகம், சில தருணங்களில் சூரியனின் ஒளிபரவாமல் தடுப்பது உண்டு. அதே போல், ஒளிப்பிழம்பான சூரியனை, இருள் கிரகம் மறைப்பதும் உண்டு.
கேதுவுடன் சேர்ந்தால், வசதி இருந்தும் அனுபவ அறிவு இல்லாது போகும்.
வசதி உலகவியலில் அடங்கும், சுகம், மனம் சார்ந்த விஷயம், ஒன்றை அழித்து மற்றொன்றை அளிக்க வைப்பான்.
உச்சம், ஸ்வஷேத்திரம் போன்ற நிலைகளில் சூரியன் இருந்தால், செல்வாக்கு மிகுந்தவனாக மாற்றி விடுவான்.
அவனது தனித்தன்மையை அழியாமல் காப்பாற்றுவான்.
நீசம், சத்ருஷேத்திரம் ஆகிய நிலைகளில் இருந்தால், விழுந்து, விழுந்து வேலை செய்தாலும், தகுதி இருந்தும் சிறக்க முடியாது போகும்! சமூகத்தில் அங்கீகாரம் இருக்காது.
பலம் பொருந்திய குரு, புதன் ஆகியோருடன் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும், தன்னம்பிக்கை பிறக்கும்,
மக்கள் சேவையுடன் திகழலாம், புகழுடன் வாழலாம்!
ஆன்ம காரகனின் தொடர்பு, பலன்களைச் சுவைக்கத் துணைபுரியும், சூரியனும் சந்திரனும் பலம் பெற்றிருந்தால், மற்ற கிரகங்களின் தாக்கத்தை, அதனால் விளையும் சங்கடங்களை எளிதாகக் கடந்து விடலாம்.
- அவனுடன் இணைந்த கிரகங்கள் அனைத்தும் வலுப்பெறும்.
- ஆன்ம சம்பந்தம் இருப்பதால் திறமை வெளிப்படும்.
சூரியனின் வெப்பம் ஏறும் போதும் இறங்கும் போதும், நாம் படாதபாடுபடுகிறோம்.
நீரை உறிஞ்சுபவனும், மழையைப் பொழியச் செய்பவனும் அவனே.
இன்பத்தை அளிப்பதும் துன்பத்தைச் சுமக்க வைப்பதும் சூரியனே! இயற்கையின் சட்ட திட்டங்களில் இவனது பங்கு உண்டு.
இயற்கையில் தோன்றிய சாஸ்திரம், ஜோதிடம். ஆகவே அதற்கு அழிவில்லை.
பிரளயம் முடிந்து, புதிய படைப்பு துவங்கும் போது, பிரளயத்துக்கு முன்பு இருந்த சூரியனையும், சந்திரனையும் அப்படியே தோற்றி வைக்கிறார் கடவுள் என்கிறது வேதம்.
இனப் பெருக்கத்துக்கு காரணமான ராசி புருஷனின் ௫ ஆம் வீடான சிம்மத்தை அவனது ஆட்சிக்கு உட்பட்டதாகச் சொல்கிறது ஜோதிடம்.
தன்னம்பிக்கை, துணிச்சல், வீரம், பெருந்தன்மை, அலட்சியம், பொறுமை, அபிமானம் ஆகியவை சிம்மத்துக்கு உண்டு, சூரியனுக்கும் உண்டு, பொருட்களின் தோற்றத்துக்கு அவனது வெப்பம் வேண்டும்.
எனவே அவனை பித்ருகாரகன் என்றும் சொல்வர். அவனுடன் இணைந்த கிரகங்கள் அனைத்தும் வலுப்பெறும்.
ஆன்ம சம்பந்தம் இருப்பதால் திறமை வெளிப்படும்.
அவனது கிரணத்தில் மூழ்கி, உருத்தெரியாமல் மங்கி விடுவதும் உண்டு.
- எண்ணக் குவியல்களின் தொகுப்பை மனம் என்கிறோம்.
- ஆன்மாவும், மனமும் இணைந்தால் மட்டுமே புலன்கள் செயல்படும்.
சிம்மத்துக்கு அதிபதியாக சூரியனைச் சொன்னாலும், அத்தனை ராசிகளிலும் சூரியன் (ஆன்மா) நிறைந்திருக்கிறான்.
எண்ணக் குவியல்களின் தொகுப்பை மனம் என்கிறோம்.
மனசஞ்சல இயல்பு, சந்திரனுக்கும் உண்டு. சந்திரனுக்குக் கடகம் என்று சொன்னாலும், எல்லா ராசிகளிலும் நிறைந்திருக்கிறான்.
அவன்! "ஹோரா" என்கிற பெயரில், எல்லா ராசிகளிலும் இரண்டு பேரும் சமபங்கில் நிறைந்திருப்பதாகச் சொல் கிறது ஜோதிடம்.
இந்த 2 பேரின் தொடர்புடன் ராசி நாதனான மற்ற கிரகங்கள் செயல்படுகின்றன.
ஆன்மாவும், மனமும் இணைந்தால் மட்டுமே புலன்கள் செயல்படும்.
ஜீவாத்மா வெளியேறிய பிறகு, மனம் இருந்தும் உடல் இயங்குவதில்லை.
ஒவ்வொரு ராசியும் ஆன்மாவுடன் இணைந்த மனம் படைத்த உடலாகவே செயல்படுகிறது.
த்ரேக்காணம், ஸப்தமாச்சம், நவாம்சம், தசாம்சம், த்ரிம்சாம்சம் ஆகிய ராசியின் உட்பிரிவுகளில் மற்ற கிரகங்களும் சேர்ந்திருக்கும்.
ஒவ்வொரு ராசியிலும் எல்லா கிரகங்களின் பங்கு இருக்கும்.
ராசிச்சக்கரத்தில் சூரியனின் ஊடுருவல், அத்தனை கிரகங்களையும் செயல்பட வைத்து, நன்மை தீமைகளை, கர்ம வினைக்குத் தக்கபடி, நடைமுறைப்படுத்த வைக்கிறது.
- சேற்றில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி, கட்டியாக்கும், தாமரையை மலரச் செய்யும்
- மாறுபாட்டை வெளிப்படுத்த மாறுபட்ட கிரகங்களை துணைக்கு அழைத்துக் கொள்வான் சூரியன்.
மாறிக்கொண்டே இருக்கிற உலகில், அதனை நடைமுறைப்படுத்துபவனே சூரியன்!
சூரியனின் கிரணம், பனியை உருக வைக்கும்.
சேற்றில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி, கட்டியாக்கும், தாமரையை மலரச் செய்யும், ஆம்பலை வாட வைக்கும்.
இலைகளை காயச் செய்யும், ஈரத்தை உலரவைக்கும், வெப்பம் ஏறிய புழுக்கத்தில், ஈசல் போன்ற உயிரினங்களைத் தோற்றி வைக்கும்.
பொருளின் இயல்புக்கு உகந்தபடி, மாறுபாட்டை ஏற்படுத்தும், கர்மவினையின் இயல்பை ஒட்டி, மாறுபாட்டை நடைமுறைப்படுத்தும்.
மாறுபாட்டை வெளிப்படுத்த மாறுபட்ட கிரகங்களை துணைக்கு அழைத்துக் கொள்வான் சூரியன்.
அவனுடைய வெப்பம், குளிச்சியை சந்தித்த சந்திர கிரணத்துடன் இணைந்து ஆறு பருவ காலங்களை உருவாக்குகிறது.
தட்பவெட்பங்கள் தான் உலகச் சூழல் என்கிறது சாஸ்திரம், இடைவெளியை நிரப்பும் இந்த இரு பொருள்களின் மூலாதாரம் அவன் என்கிறது வேதம் மோட்சத்தின் நுழைவாயில் சூரியன் என்கிறார் வராகமிஹிரர்.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களைப் படிப்படியே அடையச் செய்பவன் சூரியன்!
கர்மத்தை முற்றிலும் துறந்த துறவியும், கர்மமே கடவுள் என அதில் ஒட்டிக் கொண்டு போராடும் வீரனும் சூரிய மண்டலத்தைப் பிளந்து, வீடுபேறு அடைகின்றனர் என்கிறது புராணம்.
- நட்சத்திரங்களும், மற்ற கிரகங்களும் இவனது ஒளி பட்டு மிளிருகின்றன.
- எதிர்காலத்திலும் தொடருவான். ஆக முக்கால நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி.
ஓய்வில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிற சூரியனைப் பார்த்து, கர்மமே கண்ணாக இருக்க வேண்டும் என்கிறது வேதம்.
இருண்ட சந்திரனுக்கு ஒளியை வழங்குபவன் சூரியன்.
நட்சத்திரங்களும், மற்ற கிரகங்களும் இவனது ஒளி பட்டு மிளிருகின்றன.
ஒளியை வெளியிடும் அனைத்துப் பொருட்களும் சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்றவையே.
இருளில் ஒளிந்திருக்கிற பொருளை அடையாளம் காட்டுகிறது வெளிச்சம்.
ஒளிந்திருக்கிற கர்ம வினையை அடையாளம் காட்டுகிறது, இவனுடைய வெளிச்சம்.
மற்ற கிரகங்களும் இவனுக்குத் துணை போகின்றன. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய அனைத்தும் சூரியனை வைத்தே நிகழ்கின்றன.
அதாவது, முற்பிறவியில் நம் செயல்பாட்டைக் கண்காணித்தவன் அவன். இந்தப் பிறவியிலும் அதனைத் தொடர்கிறான்,
எதிர்காலத்திலும் தொடருவான். ஆக முக்கால நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி.
"முக்காலத்திலும் நிகழ்கிற பலன்களை வெளியிடும் தகுதியை எனக்கு அளித்து அருளுங்கள்" என வராகமிஹிரர் சூரிய பகவானை வேண்டுகிறார்.
நம் உடலில் உள்ள சூடு, அவனுடைய பங்கு.
அவனுடைய வெப்பம், பொருளில் அதன் இயல்பை வெளிக்கொண்டு வர உதவும்.
- தினமும் சூரிய நமஸ்காரம் செய்துவந்தால், கண் ஆஸ் பத்திரிக்குச் செல்ல வேண்டியிருக்காது
- அன்றாட அலுவல்களை அவனை வைத்தே நிர்ணயம் செய்து கொள்கிறோம்.
தினமும் சூரிய நமஸ்காரம் செய்துவந்தால், கண் ஆஸ் பத்திரிக்குச் செல்ல வேண்டியிருக்காது.
பூதவுடலை, பெரும்பூதங்களுடன் இணைக்கும் போது, கண்கள் சூரியனில் இணையட்டும் என்கிறது வேதம்.
தோற்றம் மறைவு இல்லாதவன் சூரியன்.
ஒளிப் பிழம்பாகத் தோன்றுபவன் அவன். நம் கண்களுக்குத் தென்படுகிற போது, "சூரியன் தோன்றுகிறான்" என்கிறோம்.
தென்படாத போது, "சூரியன் மறைந்து விட்டான்" என்கிறோம்.
ஆனால், அப்போது சூரியன் வெளிநாட்டில் தோன்றுகிறான்.
சூரியன் தோன்றி மறைகிற இடைவெளியை பகலாக ஏற்கிறோம்.
அன்றாட அலுவல்களை அவனை வைத்தே நிர்ணயம் செய்து கொள்கிறோம்.
நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் ஆகியவை அனைத்தும் சூரியனை வைத்துத் தீர்மானிக்கப்பட்டவையே.
சூரியனின் கிரணம் படாத இடமே இல்லை.
கிரணம் பட்டு, அதன் தாக்கத்தால் பொருளில் தென்படும் மாற்றங்களைக் கொண்டு உருவானதே காலம்.
அதாவது வேளை என்கிறது வேதம்.
சூரியனின் செயல்பாட்டின் அளவே கால அளவாக மாறியது.
- கிரகங்களின் நாயகன் சூரியன். ஒளி வடிவானவன்.
- வேதத்தின் வடிவமான ஒலி, ஆகாயத்தில் ஒளி வடிவில் உலா வருகிறது. அதுவே சூரியன்.
கிரகங்களின் நாயகன் சூரியன். ஒளி வடிவானவன்.
அவன் "உலகின் அணையா விளக்கு" என்பவார் வராகமி ஹிரர் சூரியனது கிரணங்களே, மற்ற கிரகங்களை இயக்க வைக்கிறது.
காலை, மதியம் மற்றும் அந்தி சாயும் வேளைகளில் அவனை ஆராதிப்பது சிறப்பு என்கிறது வேதம்.
மேலும், சராசரங்களின் ஆன்மா என சூரியனை அடையாளம் காட்டுகிறது வேதம்.
சூரியன், உலகை உணர்த்துகிறான். இயங்க வைக்கிறான், உறங்க வைக்கிறான் என்கிறது ஜோதிடம்.
அவன் தோன்றும் போது உயிரினங்களுக்கு உயிரூட்டுகிறான்.
மறையும் வேளையில், உறக்கத்தில் ஆழ்த்தி இளைப்பாறச் செய்கிறான் என்கிறது வேதம்.
மும்மூர்த்திகளும் அவனுள் அடக்கம்.
முத்தொழில்களையும் அவனே நடத்துகிறான்.
வேதத்தின் வடிவமான ஒலி, ஆகாயத்தில் ஒளி வடிவில் உலா வருகிறது. அதுவே சூரியன் என்கிறது வேதம்.
- நவகிரகங்களை வழிபடும் போது நவகிரக ஸ்தோத்ரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பாகும்.
- கோவிலை விட்டு வெளிவரும் முன்பு மறுபடியும் சண்டிகேஸ்வரரை வணங்கி வருவது சிறப்பு தரும்.
நவகிரகங்களை வழிபடும் போது நவகிரக ஸ்தோத்ரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பாகும்.
கோவில் பிரகாரத்தை 3 முறை இடமிருந்து வலமாக சுற்றி வரவும்.
சுற்றி வந்த பின்பு பிரகார தலத்தில் விழுந்து கும்பிடகூடாது.
கோவிலில் கொடி கம்பம் இருக்கும் கொடி கம்பத்திற்கு முன்பு தான் விழுந்து கும்பிட வேண்டும்.
கும்பிடுபவரின் தலை வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.
உடல் அங்கங்கள் முழுவதும் தரை மீதும் பட வேண்டும்.
நமஸ்கரித்துவிட்டு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து வரவேண்டும்.
கோவிலை விட்டு வெளிவரும் முன்பு மறுபடியும் சண்டிகேஸ்வரரை வணங்கி வருவது சிறப்பு தரும்.
பிரதட்சணத்தின்போது தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும்.
நிலம் அதிர நடக்கக் கூடாது. பிறருடன் பேசிக் கொண்டு பிரதட்சணம் செய்யக் கூடாது.
இறைவன், இறைவிக்கு அபிஷேகம் நடக்கும் போது பிரட்சண நமஸ்காரங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஆலயத்தில் ஆண்டவனைத் தவிர வேறு எவரையும் நமஸ்கரிக்கக் கூடாது.
ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும்.
நல்லெண்ணை ஆரோக்கியத்தை அளிக்கும். தேங்காய் எண்ணை வசீகரத்தை அளிக்கும்.
இலுப்பெண்ணை சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும். மறுஜென்மத்திலும் நன்மை அளிக்கும்.
நவக்கிரகங்களில் தான் மட்டுமே அதிக பலத்துடன் இருக்க வேண்டும் என்றும், அத்துடன் தன் பார்வை பட்டால் மற்றவர்கள் எல்லா பலமும் இழந்து விடவேண்டும் என்றும் ஈசனிடம் வரம் கேட்டார் சனி பகவான்.
சிவபெருமான், சனிபகவானின் இந்த வேண்டுகோளையும் ஏற்று, நவக்கிரகங்களில் அதிக பலத்தையும், விண்ணுலகம், மண்ணுலகம் அனைத்தையும் அவரது ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சிபுரியும் பெருமைக்கு உரிய கடவுளாக்கினார்.
இயம தர்மராசாவும், தாம் உயிரைப் பறிக்கும் தொழிலைச் செய்வதால் எம்மோரும் தம்மை குறைவாக மதிக்கின்றனர் என எண்ணி தவமிருந்து இறைவனிடம் "தர்மராசா" என்னும் பட்டத்தினைப் பெற்றார்.
- அமிர்தத்தின் பயனால், தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் வளர்ந்தது என்பர்.
- கேதுவின் மனைவி சித்ரலேகா என்பவள் ஆவாள். இவனுக்கு எட்டு பிள்ளைகள் உண்டு.
முறை தவறி அமிர்தத்தை உண்ணும் பொழுது, திருமால் சட்டுவத்தால் ராகுவின் தலையில அடிக்க, தலைவேறு உடல் வேறாக ராகு துண்டிக்கப்பட்டான்.
அமிர்தத்தின் பயனால், தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் வளர்ந்தது என்பர்.
கேதுவின் மனைவி சித்ரலேகா என்பவள் ஆவாள். இவனுக்கு எட்டு பிள்ளைகள் உண்டு.
இவன் சிவபெருமானை வணங்கி சாயாக்கிரக பதத்தைப் பெற்றான்.
கேது வழிபட்ட சிவாலயங்கள்:
திருமுருகன்பூண்டி,
கீழப்பெரும்பள்ளம்,
திருப்பாம்புரம்,
திருக்காளத்தி முதலியன
இந்த ஒன்பது கிரகங்களும், தங்களின் தீவினை நீங்கி நல்வினைப் பெறுவதற்கு சிவபெருமானையே வழிபட்டுள்ளன.
வினையின் போகங்களை உயிர்கட்கு ஊட்டுபவன் சிவபெருமானே ஆவார்.
அவரை வணங்கினால்தான் வினையின் தாக்குதலில் இருந்து விடுபட முடியும்.
- காசிபரின் மகன் விப்ரசித் எனும் அசுரனுக்கும் தட்சனின் மகள் சிம்மிகை எனும் அசுர மாதுவிற்கும் பிறந்தவன் ராகு.
- இவனுக்கு சிம்கி எனும் மனைவியும் உண்டு.
காசிபரின் மகன் விப்ரசித் எனும் அசுரனுக்கும் தட்சனின் மகள் சிம்மிகை எனும் அசுர மாதுவிற்கும் பிறந்தவன் ராகு.
இவனுக்கு சிம்கி எனும் மனைவியும் உண்டு.
பார்கடலில் தோன்றிய அமிர்தத்தை முறை தவறி உண்டான் இவன்.
இதற்காக திருமாலால் இவன் தண்டிக்கப்பட்டான்.
பிறகு சிவபெருமானை வழிபட்டு சாயாக்கிரக பதத்தைப் பெற்றான்.
ராகு வழிபட்ட சிவாலயங்கள்:
திருப்பாம்புரம்,
திருநாகேஸ்வரம்,
சீர்காழி,
திருக்காளத்தி
- இவன் சூரியனுக்கும், சாயாதேவி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.
- இவன் சிவபெருமானை வழிபாடு செய்து குறைகள் நீங்கப் பெற்று, கிரகப்பதமும் பெற்றான்
இவன் சூரியனுக்கும், சாயாதேவி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.
இவனுக்கு நீலா, மந்தா என இரு மனைவியர் உண்டு என நூல்கள் கூறுகின்றன.
எமனால் தண்டிக்கப்பட்டு சனியினுடைய வலக்கால் ஊனமாயிற்று என்றும், தட்சயாகத்தினால் ஒரு கண் போயிற்று என்றும் வரலாறு கூறுகிறது.
இவன் சிவபெருமானை வழிபாடு செய்து குறைகள் நீங்கப் பெற்று, கிரகப்பதமும் பெற்றான்
சனி வழிபட்ட சிவாலயங்கள்:
நெல்லிக்கா,
கொள்ளிக்காடு,
திருநள்ளாறு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்