search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naga Chaitanya"

    • இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ள படம் லால் சிங் சத்தா.
    • இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.


    லால் சிங் சத்தா

    இதில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் நாக சைதன்யா பேசியதாவது, ''நானும் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் தான். லால் சிங் சத்தா படத்தில் நடித்ததற்காகவும், அதனை விளம்பரப்படுத்துவதற்காகவும் சென்னைக்கு வருகை தருவதை மகிழ்ச்சியான தருணம் என நினைக்கிறேன். இந்தத் திரைப்படம் என்னுடைய கலை உலக பயணத்தில் முக்கியமான திரைப்படம்.


    லால் சிங் சத்தா

    ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குனர் அத்வைத் சந்தன் மற்றும் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான அமீர்கான் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் இணைந்து ஒரு நேர்த்தியான படைப்பை, உங்களுக்காக ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று வழங்குகிறோம். திரையரங்கத்திற்கு சென்று கண்டு களித்து ஆதரவு தர வேண்டுகிறேன்" என்று பேசினார்.

    • நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்கள் கடந்த ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.

    பிரபல நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருட திருமண வாழ்விற்கு பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். தற்போது இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.


    சமந்தா -நாக சைதன்யா

    இந்நிலையில், நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்த ஹைதராபாத் வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். சமந்தா - நாக சைதன்யாவின் பிரிவிற்கு பிறகு அவர்களின் வீடு விற்கப்பட்டது.

    இதையடுத்து நடிகை சமந்தா தற்போது அந்த வீட்டை வாங்கியவரிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அந்த வீட்டில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    • இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள படம் தேங்க் யூ.
    • இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் என்சி22 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார்.

    தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. படக்குழு முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார்.


    தேங்க் யூ

    இதையடுத்து, இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள படம் 'தேங்க் யூ' . இந்த படத்தில் கதாநாயகியாக ராசி கண்ணா நடித்திருக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தேங்க் யூ' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். ஆனால் பிரிவதற்கான காரணத்தை இருவரும் வெளியிடவில்லை.


    சமந்தா - நாக சைதன்யா

    இதையடுத்து இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் சீசன் 7 என்கிற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை சமந்தா கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


    கரண் ஜோகர் - சமந்தா

    அதில் திருமண வாழ்க்கை குறித்து கரண், சமந்தாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சமந்தா திரைப்படங்களில் நீங்கள் திருமண வாழ்க்கையை காட்டிய போது அது நன்றாக இருந்தது. ஆனால், உண்மையில் கே.ஜி.எப் போன்றுதான் திருமண வாழ்க்கை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மன்மத லீலை படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கி வரும் படம் என்சி22.
    • இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

    'மாநாடு', 'மன்மத லீலை' போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதன்படி இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாகவும் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


    என்சி22

    மேலும் வெங்கட்பிரபு முதல் முறையாக இளையராஜாவுடன் இணைந்துள்ளார். இதுவரை இயக்கிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி மட்டுமே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சமந்தாவும் நாக சைத்தன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர்.

    பிரபல நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருட திருமண வாழ்விற்கு பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். தற்போது இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகை சமந்தாவை பிரிந்த பிறகு தற்போது நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யா கடந்த சில வாரங்களாக நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், சமந்தாவிற்கு நெருக்கமானவர்கள் சிலர் தான் இதுபோன்ற செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று தனியார் செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளது.

    நாக சைதன்யா - சோபிதா துலிபாலான்

    நாக சைதன்யா - சோபிதா துலிபாலான்

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா தனது சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 'ஒரு பெண்ணைப் பற்றி வதந்தி செய்திகள் வெளியானால் அது உண்மையாக இருக்கும் என்றும் அதுவே ஒரு ஆண் பற்றி வெளியானால் அதை ஒரு பெண் தான் செய்திருப்பார் என்றும் நினைக்கிறீர்கள். சிந்தனையை வளர்த்து கொள்ளுங்கள். சம்பந்தப்பட்டவர்களே இதனை கடந்து சென்று விட்டனர். நீங்களும் கடந்து செல்லுங்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • நட்சத்திர ஜோடிகளான சமந்தா, நாக சைதன்யாவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவாகரத்தானது.
    • தற்போது நடிகர் நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தென்இந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நாக சைதன்யாவும் சமந்தாவும் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். விவாகரத்திற்கு யார் காரணம் என பல வதந்திகள் பரவி வந்தன. இதையடுத்து இருவரும் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை சமந்தாவை பிரிந்து ஒரு வருடம் கழித்து தற்போது நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.


    நாக சைதன்யா - சோபிதா துலிபாலான்

    நாக சைதன்யா - சோபிதா துலிபாலான்


    நாக சைதன்யா கடந்த சில வாரங்களாக நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அண்மையில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாக சைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்படட்டதாகவும் அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் 'மேஜர்' படப்பிடிப்பின் போது இருவரும் ஓட்டலில் பலமுறை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெலுங்கு வட்டாரத்தில் மிகவும் சென்சேஷனலாக பேசப்படும் நிலையில் இந்த செய்திகளை இருவரும் இதுவரை மறுக்கவில்லை.

    நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்ட நடிகை சமந்தா, அவரது அன்பில் வித்தியாசம் இருப்பதாக கூறியிருக்கிறார். #Samantha #Majili
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாகர்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சமந்தா தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

    கணவன் - மனைவியாக இருவரும் இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படம் ‘மஜிலி’. இந்த படத்தில் ஜோடியாக நடித்தது ஏன் என்று சமந்தா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ’நாங்கள் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எங்களால் பூர்த்தி செய்ய முடியாது. நானும் சைதன்யாவும் மரத்தைச் சுற்றிப் பாடிக்கொண்டிருந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். நாங்கள் இன்னொரு படம் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால், அது வித்தியாசமாக இருக்க வேண்டும்.



    ‘மஜிலி’ அப்படி ஒரு படம். எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமணத்துக்கு முந்தைய அன்புக்கும், பிந்தைய அன்புக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு பெண்ணுக்கும், அவள் கணவருக்கும், கணவரின் குடும்பத்திற்கும் இடையே இருக்கும் அழகிய உறவைக் காட்டும் படம் ‘மஜிலி’.

    இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.
    சமந்தாவின் செயல்களைக் கண்டு அவரது கணவர் நாக சைதன்யா கோபப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Samantha #NagaChaitanya
    நட்சத்திர காதல் தம்பதிகள் சமந்தா, நாக சைதன்யா இருவரும் சந்தோ‌ஷமாக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். ஆனாலும் இருவருக்குள்ளும் ஒரு வித்தியாசம் காணப்படுகிறது. சமூக வலைதள பக்கங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர் சமந்தா. 

    நாக சைதன்யா அப்படி இல்லை. முக்கியமான நேரங்களில் மட்டுமே சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்கிறார். சமந்தாவின் சமூக வலைதள ஆர்வத்தை கண்டு சில சமயம் நாகசைதன்யா கோபப்படுகிறாராம். 



    இதுபற்றி சமந்தா கூறும்போது, ‘திரையில் தான் நம்மை ரசிகர்கள் பார்க்கிறார்கள். நம் சொந்த வாழ்க்கையையும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் அவர்கள் பார்க்க வெளியிட வேண்டுமா என்று நாக சைதன்யா கேட்கிறார். அதனால் அவர் என் அருகில் இருக்கும்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் எதையும் தொடமாட்டேன்’ என்று கூறி இருக்கிறார்.
    கிறிஸ்துமஸை முன்னிட்டு எஸ்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அமைப்பிற்கு சென்ற நடிகை சமந்தா, அவர்களுக்கு புதிய உடைகளை பரிசாக அளித்து மகிழ்வித்துள்ளார். #Samantha #NagaChaitanya
    சினிமா நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடும் படங்கள் கடந்த 2 நாட்களாக வைரல் ஆகின்றன. இதில் வித்தியாசமாக சமந்தா மட்டும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அமைப்பிற்கு சென்று கொண்டாடி உள்ளார்.

    கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்துக்கு பதிலாக கிறிஸ்துமஸ் தேவதைபோல் சென்றுள்ளார். அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியதுடன் அவர்களுடன் இணைந்து நடனம் ஆடி மகிழ்ந்தார். முன்னதாக அனைவரையும் பிரபல துணிக்கடைக்கு அழைத்து சென்று, ‘உங்களுக்கு என்ன உடை பிடிக்குமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்.



    சந்தோ‌ஷத்தில் குதித்த குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான உடைகளை தேர்வு செய்தனர். இதுகுறித்து சமந்தா கூறும்போது, ’தொண்டு என்பது பரிதாபத்தால் செய்யப்படுவது அல்ல. அது அன்பால் செய்யப்படுவது. இன்றைக்குத்தான் நான் அதிகமாக அன்பை பெற்றேன், பகிர்ந்தேன்.



    இன்றைக்கு ஒரு நாள் மட்டுமல்லாமல் இந்த ஆண்டு முழுவதும் என்னுடைய பணி இவர்களுக்காக செய்ய காத்திருக்கிறேன். கிறிஸ்துமஸ் தாத்தா வருகைக்காக காத்திருக்காமல் அவராக நாமே ஆகி பரிசுகள் வழங்கிடுவோம்’ என்றார். #Samantha #NagaChaitanya

    நடிகை சமந்தாவுடன் நடிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்று அவரின் கணவரும் நடிகருமான நாக சைதன்யா கூறியிருக்கிறார். #Samantha #NagaChaitanya
    திருமணத்திற்குப் பின் சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தாலும் முதன்முறையாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கிறார். சிவா நிர்வானா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் குறித்து நாக சைதன்யா சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார்.

    “இருவரும் இணைந்து பணியாற்றுவதால் ஒரே நேரத்தில் வீட்டிற்கு செல்கிறோம். ஆனால் காலையில் எனக்கு முன்பாகவே சமந்தா சென்றுவிடுவார். அதிக நேரங்களை நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் செலவிடுகிறோம். 



    இந்த படத்தில் நாங்கள் இருவரும் அதிகமாகச் சண்டை போட்டுக்கொள்வதாகக் காட்சிகள் உள்ளன. ஆனால் உண்மையில் நாங்கள் அப்படி இல்லை. இதனால் அந்த காட்சிகளில் நடிப்பது சற்று கடினமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
    நடிகை சமந்தா - நாக சைதன்யா திருமணம் முடிந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், தங்களது திருமண நாளை, இருவரும் குடும்பத்துடன் வெளிநாட்டில் கொண்டாடி உள்ளனர். #Samantha #NagaChaitanya
    தென்னிந்திய சினிமாவின் புதுமண ஜோடியான சமந்தா - நாக சைதன்யாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இதை கொண்டாடும் வகையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் வெளிநாட்டுக்கு சென்றனர். அங்கே சமந்தா கவர்ச்சியான ஆடைகளுடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையானது.

    ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளான நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருமண நாளை மாமனார் நாகார்ஜுனாவின் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.

    குரோஷியாவிலுள்ள டர்போனிக் நகருக்கு தங்கள் முதல் திருமண நாளைக் கொண்டாடச் சென்றிருக்கும் சமந்தா, இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை ஷேர் செய்து “என் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறந்தவைகளில், நான் ஒவ்வொரு நாளும் உன்னிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடுகிறேன்.



    என்னில் பாதிக்கு முதல் திருமண நாள் வாழ்த்துகள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் நாக சைதன்யா” என்று குறிப்பிட்டிருக்கிறார். திருமண நாளினை குரோஷியாவில் கொண்டாட வேண்டும் என்ற முடிவினைத் தாண்டி, அந்தப் பயணத்துக்கு தனியே செல்லாமல் நாகார்ஜுனா, அமலா, அகில் ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். #Samantha #NagaChaitanya

    ×