என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
சிந்தனையை வளர்த்து கொள்ளுங்கள்.. முன்னாள் கணவர் குறித்து சமந்தாவின் வைரல் பதிவு..
- சமந்தாவும் நாக சைத்தன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர்.
பிரபல நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருட திருமண வாழ்விற்கு பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். தற்போது இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை சமந்தாவை பிரிந்த பிறகு தற்போது நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யா கடந்த சில வாரங்களாக நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், சமந்தாவிற்கு நெருக்கமானவர்கள் சிலர் தான் இதுபோன்ற செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று தனியார் செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா தனது சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 'ஒரு பெண்ணைப் பற்றி வதந்தி செய்திகள் வெளியானால் அது உண்மையாக இருக்கும் என்றும் அதுவே ஒரு ஆண் பற்றி வெளியானால் அதை ஒரு பெண் தான் செய்திருப்பார் என்றும் நினைக்கிறீர்கள். சிந்தனையை வளர்த்து கொள்ளுங்கள். சம்பந்தப்பட்டவர்களே இதனை கடந்து சென்று விட்டனர். நீங்களும் கடந்து செல்லுங்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்