search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mutton Recipes"

    குழந்தைகளுக்கு மட்டன் கீமாவில் கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த கட்லெட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 500 கிராம்
    உருளைகிழங்கு - 200 கிராம்
    எண்ணெய் - 100 - 150 மில்லி
    பெரிய வெங்காயம்- 1
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
    கரம் மசாலா - அரைஸ்பூன்
    மிளகுத்தூள் - அரைஸ்பூன்
    சீரகத்தூள் - அரைஸ்பூன்
    பெருஞ்சீரகத்தூள்- அரைஸ்பூன்
    முட்டை - 1
    கொத்தமல்லி, புதினா - சிறிது
    பிரட் தூள் - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கு .



    செய்முறை :


    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    மட்டன் கீமாவை நன்றாக கழுவி நீர் வடிகட்டி விட்டு குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு தேவைக்கு உப்பு, உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் போட்டு வேக வைத்து இறக்கவும்.

    உருளையை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து மசித்து கொள்ளவும்.

    வெந்த கீமாவை மீண்டும் அடுப்பில் வைத்து தண்ணீர் சுண்ட வைக்கவும்.

    மசித்த உருளையுடன், வேகவைத்த கீமா, வெங்காயம், கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், பெருஞ்சீரகத்தூள், கரம்மசாலா துள், ஒரு முட்டை, பிரட் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    மசாலா பொருட்கள் கலந்த கீமாவை சிறு உருண்டைகளாக உருட்டி விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்டை போட்டு சிவந்து பொரித்து எடுக்கவும்.

    சுவையான சூடான மட்டன் கீமா கட்லெட் ரெடி.

    மாலை நேரத்தில் தக்காளி சாசுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் மட்டன் என்றால் சாப்பிட மறுப்பார்கள். இன்று மட்டனை வைத்து குழந்தைகள் சாப்பிடும் வகையில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாமல் கொத்திய மட்டன் - 200 கிராம்
    கடலைப்பருப்பு - 50 கிராம்
    சோம்பு - 10 கிராம்
    கரம்மசாலாத் தூள் - 2 கிராம்
    பூண்டு - 50 கிராம்
    பச்சைமிளகாய் - 3
    கறிவேப்பிலை - 3 ஈர்க்கு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    சீரகம் - 5 கிராம்
    வெங்காயம் - 25 கிராம்
    பொட்டுக்கடலை (லேசாகப் பொடிக்கவும்) - 20 கிராம்
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    எலும்பில்லாமல் கொத்திய மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பவுலில் கடலைப்பருப்பு, சோம்பு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து ஊறவைத்து பின்பு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த விழுதுடன் கொத்திய ஆட்டுக்கறியையும் போட்டு அரைத்து தனியாக வைக்கவும்.

    பொட்டுக்கடலை, கரம் மசாலாத்தூள், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த மட்டன் விழுது, பொட்டுக்கடலை விழுது, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து, தட்டையாகத் தட்டவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள உருண்டைகளை வடைகளாக தட்டி போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் கீமாவில் கோலா உருண்டை, கிரேவி, புலாவ் செய்து இருப்பீங்க. இன்று மட்டன் கீமா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - தேவையான அளவு
    மட்டன் கொத்துகறி - 150 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பட்டை - 1
    கிராம்பு - 2
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் கொத்துகறியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் கொத்துகறி மசாலா துாள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

    பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவைக் தோசையாக ஊற்றி அதன் மேல் தூவியது போல் மட்டன் கீமாவை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சுவையான மட்டன் கீமா தோசை ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆப்பம், இடியாப்பம், தோசை, இட்லி, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மட்டன் சொதி. இன்று அதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - 200 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    ப.மிளகாய் - 6
    2-ம் தேங்காய் பால் - 200 மில்லி,
    முதல் தேங்காய் பால் - 100 மில்லி
    மஞ்சள் தூள் - 5 கிராம்
    எலுமிச்சைப்பழம் - 1
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
    பட்டை - சிறிய துண்டு
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 3
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்

    எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் மட்டனை போட்டு அதனுடன் ப.மிளகாய், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு, 2-ம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 மணிநேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

    2 மணிநேரம் கழித்து ஃபிரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து குளிர்ச்சி போனவுடன் கடாயில் போட்டு கொதிக்க விடவும்.

    மற்றொரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பின்னர் கொதிக்க வைத்த மட்டனை இதில் சேர்க்கவும்.

    இப்போது முதல் தேங்காய் பால், உப்பு சேர்க்கவும்.

    லேசாக கொதி வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறவும். அதிக நேரம் கொதிக்க வைத்தால் திரிந்து விடும்.

    சூப்பரான மட்டன் சொதி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×