search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mutton Keema Recipes"

    வெஜ், சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் கொத்துக்கறியை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கொத்துக்கறி - 250 கிராம்
    சீரக சம்பா அரிசி - 300 கிராம்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்
    புதினா - சிறிதளவு
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
    பிரிஞ்சி இலை - ஒன்று
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த்தூள் - தேவையான அளவு
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
    நெய் - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:


    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து சேர்த்து தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து மட்டனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து, தீயைக் குறைத்து 15 நிமிடங்கள் வதக்கவும்.

    எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அரிசி முக்கால் பதம் வரும் வரை வேகவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நெய் விட்டு நன்கு புரட்டவும்.

    பின்னர் குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால்... கமகம மட்டன் கொத்துக்கறி பிரியாணி ரெடி.

    குறிப்பு: சீரக சம்பா அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்துக் களையவும். அரிசி ஒரு பங்குக்கு, 2 பங்கு தண்ணீர் போதுமானது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மட்டன் கீமாவில் கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த கட்லெட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 500 கிராம்
    உருளைகிழங்கு - 200 கிராம்
    எண்ணெய் - 100 - 150 மில்லி
    பெரிய வெங்காயம்- 1
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
    கரம் மசாலா - அரைஸ்பூன்
    மிளகுத்தூள் - அரைஸ்பூன்
    சீரகத்தூள் - அரைஸ்பூன்
    பெருஞ்சீரகத்தூள்- அரைஸ்பூன்
    முட்டை - 1
    கொத்தமல்லி, புதினா - சிறிது
    பிரட் தூள் - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கு .



    செய்முறை :


    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    மட்டன் கீமாவை நன்றாக கழுவி நீர் வடிகட்டி விட்டு குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு தேவைக்கு உப்பு, உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் போட்டு வேக வைத்து இறக்கவும்.

    உருளையை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து மசித்து கொள்ளவும்.

    வெந்த கீமாவை மீண்டும் அடுப்பில் வைத்து தண்ணீர் சுண்ட வைக்கவும்.

    மசித்த உருளையுடன், வேகவைத்த கீமா, வெங்காயம், கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், பெருஞ்சீரகத்தூள், கரம்மசாலா துள், ஒரு முட்டை, பிரட் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    மசாலா பொருட்கள் கலந்த கீமாவை சிறு உருண்டைகளாக உருட்டி விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்டை போட்டு சிவந்து பொரித்து எடுக்கவும்.

    சுவையான சூடான மட்டன் கீமா கட்லெட் ரெடி.

    மாலை நேரத்தில் தக்காளி சாசுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் கீமாவில் கோலா உருண்டை, கிரேவி, புலாவ் செய்து இருப்பீங்க. இன்று மட்டன் கீமா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - தேவையான அளவு
    மட்டன் கொத்துகறி - 150 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பட்டை - 1
    கிராம்பு - 2
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் கொத்துகறியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் கொத்துகறி மசாலா துாள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

    பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவைக் தோசையாக ஊற்றி அதன் மேல் தூவியது போல் மட்டன் கீமாவை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சுவையான மட்டன் கீமா தோசை ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×