search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MIT College"

    • புதுவை கலிதீர்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, புதுவை இன்டெக்ரா நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.
    • மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலர்வேலை வாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, புதுவை இன்டெக்ரா நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.

    இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை தந்த அந்நிறுவன மேலாளர்கள் இந்துமதி, தீபன் சக்கரவர்த்தி மற்றும் அருண் ஆகியோர் பங்கேற்றனர். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    முகாமை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 2023-ம் ஆண்டு, இளங்கலை மற்றும் மேலாண்மை துறை பயிலும் மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலர்வேலை வாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரிஜெயக்குமார் செய்து இருந்தார்.

    • புதுவை பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (பி.என்.ஐ) டாபோடில்ஸ் அமைப்பு உறுப்பினர்களின் வாராந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கல்லூரி மேலாண்மை துறை மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்களின் தொழில்துறை ரீதியான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தா–ள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி)யில், புதுவை பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (பி.என்.ஐ) டாபோடில்ஸ் அமைப்பு உறுப்பினர்களின் வாராந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கல்லூரி மேலாண்மை துறை மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பி.என்.ஐ டாபோடில்ஸ் அமைப்பின் தலைவர் ஆனந்த், உப தலைவர் ஜெயசுதர்ஷன், செயலாளர் மற்றும் பொருளாளர்கதிரவன் தலைமையில் அனைத்து உறுப்பினர்களுடன் இக்கூட்டம் நடைபெற்றது.

    முடிவில் பி.என்.ஐ டாபோடில்ஸ் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் அன்பரசு, சுரேஷ் சங்கரன், ரகுநந்தன், டாக்டர்.கணேசன், டாக்டர்.ஜே.சந்தான லக்ஷ்மி, மற்றும் சுரேஷ் ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கிய குழு, கல்லூரி மேலாண்மை துறை மாணவர்களுடன் கலந்துரையாடினர். மேலும் நடுவர் பகுத்தறிவு முன்னிலையில் மாணவர்களின் தொழில் துறை ரீதியான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    எம்.ஐ.டி கல்லூரி முதல்வர் மலர்க்கண், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார், மேலாண்மை துறை தலைவர் பேராசிரியர் பாஸ்கரன், தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வைத்தீஸ்வரன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், கல்லூரி துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • புதுவையில் சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார மேம்பாட்டு மன்றம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஒருங்கிணைப்பு ஏற்பாட்டினை கல்லூரி டாக்டர் வள்ளி, வேலை வாய்ப்பு துறை தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார மேம்பாட்டு மன்றம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) ஆகியவை இணைந்து -பெண்களுக்கான அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் மகளிர் மேம்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியது.

    கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் வழிக்காட்டுதல் படி சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார மேம்பாட்டு மன்ற நிறுவனர் டாக்டர் சர்மிளா நாகராஜன் நிர்வாக இயக்குனர் – மோனீஷ் கல்லூரி முதல்வர் டாக்டர் மலர்க்கண், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி நோக்கம் குறித்து கல்லூரி மாணவர்களுடன் விவரித்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஒருங்கிணைப்பு ஏற்பாட்டினை கல்லூரி டாக்டர் வள்ளி, வேலை வாய்ப்பு துறை தலைவர் டாக்டர் ஜெயக்குமார். டாக்டர் மெய்யப்பன் மற்றும் டாக்டர் வைத்தீஸ்வரன் தலைமையில் செய்யப்பட்டது. 

    • புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), சென்னை ஓப்போ - ப்ரோ மொபைல் டிரேடிங் நிறுவனம் சார்பில் மேலாண்மை துறை மாணவர்களுக்கான பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
    • ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), சென்னை ஓப்போ - ப்ரோ மொபைல் டிரேடிங் நிறுவனம் சார்பில் மேலாண்மை துறை மாணவர்களுக்கான பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.

    இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் ஹரிஷ், மனிதவள துறை நிர்வாகி காயத்ரி மற்றும் குழுவினர், அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார்.

    இந்த முகாமில், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மயிலம் பொறியியல் கல்லூரி மற்றும் கிறிஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளில் இருந்து மேலாண்மை துறை இறுதி ஆண்டு மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர் வைத்தீஸ்வரன் செய்து இருந்தனர்.

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை ஈ-கான் சிஸ்டம் நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • புதுவை மற்றும் அதை சுற்றியுள்ள பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட இறுதியாண்டு படிக்கும் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை ஈ-கான் சிஸ்டம் நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    ஈ-கான் சிஸ்டம் நிறுவன மனிதவளத்துறை மேலாளர் அர்ச்சனா, அத்திபா, வைஷாலி ஆகியோர் அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தின் ேவலை செய்தற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர்.

    எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார். இதில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர். புதுவை மற்றும் அதை சுற்றியுள்ள பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட இறுதியாண்டு படிக்கும் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    முடிவில் ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.

    • புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), எல்.எஸ்.ஈ. குளோபல் அகடாமி நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • திறனாய்வுத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), எல்.எஸ்.ஈ. குளோபல் அகடாமி நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவளத்துறை மேலாளர் வெங்கடேஷ, அஸ்வினி, அருண்மொழி, அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். திறனாய்வுத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில், எம்.ஐ.டி. கல்லூரியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் மேலாண்மை துறை மாணவர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு அந்நிறுவனத்தின் பணி நியமன ஆணை வழங்கப்பெற்று பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்து இருந்தார்.

    • புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் (எம்.ஐ.டி) , சென்னை வோல்டெக் குரூப் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் (எம்.ஐ.டி) , சென்னை வோல்டெக் குரூப் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    இந்த முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் பாலமுருகன் , தவமணி மற்றும் குழுவினர், நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர்.

    தொழில்நுட்ப கலந்துரையாடல் மற்றும் மனிதவள நேர்காணல் ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    முகாமை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த எம்.ஐ.டி. கல்லூரி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மயிலம் பொறியியல் கல்லூரி மற்றும் மின் மற்றும் மின்னணுவியல் துறை இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் 200-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தின் பணி நியமன ஆணை பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் சண்முகசுந்தரம் செய்து இருந்தனர்.

    • புதுவை மதகடிபட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தடகள விளையாட்டு போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.
    • இந்த போட்டியில் கல்லூரியின் அனைத்து துறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிபட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தடகள விளையாட்டு போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்கள்.

    மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மலர்கண் வரவேற்புரையாற்றினார். இந்த போட்டியில் கல்லூரியின் அனைத்து துறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் முதல் இடத்தை மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் மாணவர்கள் தட்டி சென்றனர். வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரியின் முதல்வர் மலர்கண் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    பரிசளிப்பு நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், முதலாம் ஆண்டு துறை தலைவர்கள் டாக்டர் பூங்குழலி, சுமித்ரா, மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சகான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை இயக்குனர் மோகன் செய்திருந்தார்.

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
    • அனைத்து துறைத்தலை வர்கள், கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ெஜயக்குமார், கல்லூரி ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆட்டோமேஷன் துறை தலைவர் ரேணுகா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அனைத்து துறைத்தலை வர்கள், கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ெஜயக்குமார், கல்லூரி ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆட்டோமேஷன் துறை தலைவர் ரேணுகா தேவி உள்பட பலர் முன்னிலையில் எம்.ஐ.டி.கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் முதன்மை செயல் அதிகாரி பாலாஜி மற்றும் சி.ஓ.ஓ. பாலாஜி வரதன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.

    • மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி), இந்திய இளைஞர்கள் ஒற்றுமை அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • மாணவ-மாணவிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள், திறன் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கி தருவதாகும் .

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி), இந்திய இளைஞர்கள் ஒற்றுமை அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொதுவான நோக்கம், பொறியியல் மற்றும் மேலாண்மை துறை மாணவ-மாணவிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள், திறன் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கி தருவதாகும் .

    புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாரன், மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். வேலை வாய்ப்பு துறை அதிகாரி பேராசிரியர் ஜெயகுமார், துறை பேராசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    எம்.ஐ.டி கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் யூத் யுனைடெட் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் தேசிய பொதுச்செயலர் விமல் தமிழக மாநில செயலாளர் சிரீஷ், சவுத் இந்தியா எஜுகேஷன் ஒருங்கிணைப்பாளர் சுஷ்மா ஆகியோர் ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பா

    ×