என் மலர்
நீங்கள் தேடியது "MIT College"
- புதுவை மதகடிபட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தடகள விளையாட்டு போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.
- இந்த போட்டியில் கல்லூரியின் அனைத்து துறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மதகடிபட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தடகள விளையாட்டு போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்கள்.
மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மலர்கண் வரவேற்புரையாற்றினார். இந்த போட்டியில் கல்லூரியின் அனைத்து துறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் இடத்தை மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் மாணவர்கள் தட்டி சென்றனர். வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரியின் முதல்வர் மலர்கண் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், முதலாம் ஆண்டு துறை தலைவர்கள் டாக்டர் பூங்குழலி, சுமித்ரா, மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சகான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை இயக்குனர் மோகன் செய்திருந்தார்.
- புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் (எம்.ஐ.டி) , சென்னை வோல்டெக் குரூப் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
- நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் (எம்.ஐ.டி) , சென்னை வோல்டெக் குரூப் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இந்த முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் பாலமுருகன் , தவமணி மற்றும் குழுவினர், நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர்.
தொழில்நுட்ப கலந்துரையாடல் மற்றும் மனிதவள நேர்காணல் ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
முகாமை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த எம்.ஐ.டி. கல்லூரி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மயிலம் பொறியியல் கல்லூரி மற்றும் மின் மற்றும் மின்னணுவியல் துறை இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் 200-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தின் பணி நியமன ஆணை பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் சண்முகசுந்தரம் செய்து இருந்தனர்.
- புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), எல்.எஸ்.ஈ. குளோபல் அகடாமி நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
- திறனாய்வுத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), எல்.எஸ்.ஈ. குளோபல் அகடாமி நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவளத்துறை மேலாளர் வெங்கடேஷ, அஸ்வினி, அருண்மொழி, அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். திறனாய்வுத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில், எம்.ஐ.டி. கல்லூரியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் மேலாண்மை துறை மாணவர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு அந்நிறுவனத்தின் பணி நியமன ஆணை வழங்கப்பெற்று பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்து இருந்தார்.
- புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை ஈ-கான் சிஸ்டம் நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
- புதுவை மற்றும் அதை சுற்றியுள்ள பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட இறுதியாண்டு படிக்கும் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை ஈ-கான் சிஸ்டம் நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
ஈ-கான் சிஸ்டம் நிறுவன மனிதவளத்துறை மேலாளர் அர்ச்சனா, அத்திபா, வைஷாலி ஆகியோர் அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தின் ேவலை செய்தற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார். இதில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர். புதுவை மற்றும் அதை சுற்றியுள்ள பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட இறுதியாண்டு படிக்கும் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
முடிவில் ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.
- புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), சென்னை ஓப்போ - ப்ரோ மொபைல் டிரேடிங் நிறுவனம் சார்பில் மேலாண்மை துறை மாணவர்களுக்கான பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
- ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), சென்னை ஓப்போ - ப்ரோ மொபைல் டிரேடிங் நிறுவனம் சார்பில் மேலாண்மை துறை மாணவர்களுக்கான பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் ஹரிஷ், மனிதவள துறை நிர்வாகி காயத்ரி மற்றும் குழுவினர், அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மயிலம் பொறியியல் கல்லூரி மற்றும் கிறிஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளில் இருந்து மேலாண்மை துறை இறுதி ஆண்டு மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர் வைத்தீஸ்வரன் செய்து இருந்தனர்.
- புதுவையில் சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார மேம்பாட்டு மன்றம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஒருங்கிணைப்பு ஏற்பாட்டினை கல்லூரி டாக்டர் வள்ளி, வேலை வாய்ப்பு துறை தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
புதுச்சேரி:
புதுவையில் சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார மேம்பாட்டு மன்றம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) ஆகியவை இணைந்து -பெண்களுக்கான அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் மகளிர் மேம்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியது.
கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் வழிக்காட்டுதல் படி சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார மேம்பாட்டு மன்ற நிறுவனர் டாக்டர் சர்மிளா நாகராஜன் நிர்வாக இயக்குனர் – மோனீஷ் கல்லூரி முதல்வர் டாக்டர் மலர்க்கண், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி நோக்கம் குறித்து கல்லூரி மாணவர்களுடன் விவரித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஒருங்கிணைப்பு ஏற்பாட்டினை கல்லூரி டாக்டர் வள்ளி, வேலை வாய்ப்பு துறை தலைவர் டாக்டர் ஜெயக்குமார். டாக்டர் மெய்யப்பன் மற்றும் டாக்டர் வைத்தீஸ்வரன் தலைமையில் செய்யப்பட்டது.
- புதுவை பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (பி.என்.ஐ) டாபோடில்ஸ் அமைப்பு உறுப்பினர்களின் வாராந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கல்லூரி மேலாண்மை துறை மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவர்களின் தொழில்துறை ரீதியான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தா–ள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி)யில், புதுவை பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (பி.என்.ஐ) டாபோடில்ஸ் அமைப்பு உறுப்பினர்களின் வாராந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கல்லூரி மேலாண்மை துறை மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பி.என்.ஐ டாபோடில்ஸ் அமைப்பின் தலைவர் ஆனந்த், உப தலைவர் ஜெயசுதர்ஷன், செயலாளர் மற்றும் பொருளாளர்கதிரவன் தலைமையில் அனைத்து உறுப்பினர்களுடன் இக்கூட்டம் நடைபெற்றது.
முடிவில் பி.என்.ஐ டாபோடில்ஸ் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் அன்பரசு, சுரேஷ் சங்கரன், ரகுநந்தன், டாக்டர்.கணேசன், டாக்டர்.ஜே.சந்தான லக்ஷ்மி, மற்றும் சுரேஷ் ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கிய குழு, கல்லூரி மேலாண்மை துறை மாணவர்களுடன் கலந்துரையாடினர். மேலும் நடுவர் பகுத்தறிவு முன்னிலையில் மாணவர்களின் தொழில் துறை ரீதியான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.
எம்.ஐ.டி கல்லூரி முதல்வர் மலர்க்கண், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார், மேலாண்மை துறை தலைவர் பேராசிரியர் பாஸ்கரன், தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வைத்தீஸ்வரன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், கல்லூரி துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
- புதுவை கலிதீர்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, புதுவை இன்டெக்ரா நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.
- மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலர்வேலை வாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, புதுவை இன்டெக்ரா நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.
இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை தந்த அந்நிறுவன மேலாளர்கள் இந்துமதி, தீபன் சக்கரவர்த்தி மற்றும் அருண் ஆகியோர் பங்கேற்றனர். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
முகாமை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 2023-ம் ஆண்டு, இளங்கலை மற்றும் மேலாண்மை துறை பயிலும் மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலர்வேலை வாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரிஜெயக்குமார் செய்து இருந்தார்.
- பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்து நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.
- சாதி,மதம் பாராமல் உருவாகும் கல்லூரி கால நட்பு இறுதி வரை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் ஆண்டு கலாச்சார மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்து வரவேற்று பேசினார். மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி பேசினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சதீஷ், பேசியதாவது:- எல்லோருக்கும் கல்லூரி மாணவ பருவம் ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்றும் வாழ்வின் எந்த நிலையிலும் அது இனிமையான நினைவை தரும் என்றும் குறிப்பிட்டார். சாதி,மதம் பாராமல் உருவாகும் கல்லூரி கால நட்பு இறுதி வரை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எம்.ஐ.டி போன்ற சிறந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரி நாட்களில் தீயவை தவிர்த்து, பாடத்திட்டம் தாண்டிய செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, வாழ்வில் உத்வேகம் தரும் முன்மாதிரியாக விளங்கும் சிறந்த மனிதர்களை பின்பற்றி உன்னத நிலை அடைந்து, பெற்றோர்களை போற்றி அரவணைத்து, ஆசிரியர்களை மதித்து பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்து நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டு மற்றும் கலாச்சார போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கடந்த கல்வியாண்டில், தேசிய அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவ மாணவிகள் மற்றும் மில்லெட் குக்கிங் போட்டியில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பாராட்டு பெற்றனர். கல்லூரி கலாச்சார குழு மற்றும் மகளிர் அதிகாரம், மேம்பாட்டு குழு பேராசிரியர் உறுப்பினர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். விழாவின் முடிவில், கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று நிகழ்த்திய பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.
விழாவில், மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தைச் சேர்ந்த கல்வி நிறுவன இயக்குனர்கள், முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- கடல் பக்கங்களில் இயந்திர பொறியாளரின் பங்கை பற்றி விளக்கினார்.
- மாணவர்களுக்காகப் பின்பற்றப்படும் பல்வேறு பாட அமைப்புகளை எடுத்துரைத்தார்.
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு தரம் மற்றும் நம்பகத்த ன்மைக்கான தேசிய நிறுவனம் என்.ஐ.கியூ.ஆர் நிறுவன சங்கத்தின் கீழ் மெக்கானிக்கல் என்ஜினீயர்களுக்கான மரைன் என்ஜினீயரிங் வாய்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர், நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் டாக்டர் நாராயணசாமி மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர், முதல்வர் டாக்டர் மலர்க்கன் வாழ்த்துரை வழங்கினார். இயந்திரவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ராஜாராம் வரவேற்று பேசினார்.
துறைத்தலைவர் கோபிநாத் ஏ.எம்.இ.டி பல்கலைக்கழகம் மெக்கா னிக்கல் என்ஜினீயரிங்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பேசினார்.
4-வது என்ஜினீயர் 1-வது என்ஜினீயர் மற்றும் தலைமை என்ஜினீயர் என பல்வேறு நிலைகளில் தலைமை என்ஜினீயர் மற்றும் கேப்டனுக்கு இடையேயான அடிப்படை ஒப்பீட்டையும் அவர் பாகுபடுத்தினார்.
கப்பலின் வழிசெலுத்தல், பாதுகாப்பு அமைப்புகள், உந்துவிசை மற்றும் மின் உற்பத்தி அலகு போன்ற கடல் பக்கங்களில் இயந்திர பொறியாளரின் பங்கை பற்றி விளக்கினார்.
சென்னை ஏ.எம்.இ.டி நகரக் கல்லூரி முதல்வர் கேப்டன் ராமகிருஷ்ணா பேசினார்.
சென்னை ஏ.எம்.இ.டி நகரக் கல்லூரி முதல்வர் கோபிநாத் பல்கலைக்கழகம் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர்களுக்காகப் பின்பற்றப்படும் பல்வேறு பாட அமைப்புகளை எடுத்துரைத்தார்.
அமர்வு கேப்டன் ராம கிருஷ்ணா, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கேள்விகளைக் கேட்டார். முடிவில் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.
- வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை எஸ்.ஏ.இ. இந்தியா உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள்.
- துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன்,மற்றும் பொருளாளர் டி.ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்.ஏ.இ இந்தியா அமைப்புடன் காலேஜியேட் கிளப் திறப்பு விழா நடைப்பெற்றது.
மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்.எம்.தனசேகரன், துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன்,மற்றும் பொருளாளர் டி.ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அனைத்து துறைத்தலை வர்கள், கல்லூரி மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர் எஸ்.அருண்மொழி, கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி எம்.ஜெயக்குமார், கல்லூரி ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆடோ மேஷன் துறை தலைவர் கோ. ரேணுகா தேவி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் எஸ். மலர்க்கண் மற்றும் தலைமை விருந்தினர் ரெனால்ட் நிசான் டெக்கின் துணைத் தலைவர் அனந்த ராமன் பிரகாஷ், கெஸ்ட் ஆஃப் ஹானர் டிசைன் டெஸ்க் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சண்முகம், எஸ்.ஏ.இ. இந்தியா தலைவர் பாஸ்கர சேதுபதி மற்றும் உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த திறப்பு விழாவின் ஒப்பந்தத்தின்படி மாணவர்களை இன்டெர்ன்ஷிப், இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங், வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை எஸ்.ஏ.இ. இந்தியா உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆடோமேஷன் துறை தலைவர் கோ. ரேணுகா தேவி செய்திருந்தார்.
- வேலை செய்வதற்கு உண்டான சூழல் எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.
- முகாமில் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூாரி மேலாண்மை துறை மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில் சென்னை சைடஸ்பெக்டரம் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமில் சைட்ஸ் பெக்ட்ரம் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவன மனிதவள துறை மேலாளர் ரமேஷ், அதிகாரி ஜோஸ்வின், விற்பனை துறை மேலாளர் கிரிஷ் ஆகியோர் நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல் எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து குழு கலந்துரையாடல் நேர்காணல் மற்றும் வேலைவாயப்பு முகாம் நடந்தது.
மணக்கு விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் தலைமை தாங்கினர்.
கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூாரி மேலாண்மை துறை மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் பேராசிரியர் வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.






