search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எம்.ஐ.டி.கல்லூரியில் வளாக வேலை வாய்ப்பு முகாம்
    X

    வேலை வாய்ப்பு முகாமில் எல்.எஸ்.ஈ. குளோபல் அகடாமி மனிதவளத்துறை மேலாளர் வெங்கடேஷ் மற்றும் குழுவினர், கல்லூரி முதல்வர் மலர்க்கண், ஆகியோர் பங்கேற்ற காட்சி.

    எம்.ஐ.டி.கல்லூரியில் வளாக வேலை வாய்ப்பு முகாம்

    • புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), எல்.எஸ்.ஈ. குளோபல் அகடாமி நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • திறனாய்வுத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), எல்.எஸ்.ஈ. குளோபல் அகடாமி நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவளத்துறை மேலாளர் வெங்கடேஷ, அஸ்வினி, அருண்மொழி, அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். திறனாய்வுத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில், எம்.ஐ.டி. கல்லூரியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் மேலாண்மை துறை மாணவர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு அந்நிறுவனத்தின் பணி நியமன ஆணை வழங்கப்பெற்று பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்து இருந்தார்.

    Next Story
    ×