search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எம்.ஐ.டி கல்லூரியில்  வேலை வாய்ப்பு முகாம்
    X

    எம்.ஐ.டி. கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் சென்னை வோல்டெக் குரூப் நிறுவன மனிதவளதுறை மேலாளர் பாலமுருகன், தவமணி மற்றும் குழுவினர் , வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் சண்முகசுந்தரம், வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்ட காட்சி.

    எம்.ஐ.டி கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

    • புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் (எம்.ஐ.டி) , சென்னை வோல்டெக் குரூப் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் (எம்.ஐ.டி) , சென்னை வோல்டெக் குரூப் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    இந்த முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் பாலமுருகன் , தவமணி மற்றும் குழுவினர், நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர்.

    தொழில்நுட்ப கலந்துரையாடல் மற்றும் மனிதவள நேர்காணல் ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    முகாமை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த எம்.ஐ.டி. கல்லூரி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மயிலம் பொறியியல் கல்லூரி மற்றும் மின் மற்றும் மின்னணுவியல் துறை இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் 200-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தின் பணி நியமன ஆணை பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் சண்முகசுந்தரம் செய்து இருந்தனர்.

    Next Story
    ×