search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எம்.ஐ.டி. கல்லூரியில் கலாசார விளையாட்டு விழா
    X

    விழாவில் நடிகர் சதீஷ், பல்வேறு போட்களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    எம்.ஐ.டி. கல்லூரியில் கலாசார விளையாட்டு விழா

    • பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்து நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.
    • சாதி,மதம் பாராமல் உருவாகும் கல்லூரி கால நட்பு இறுதி வரை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் ஆண்டு கலாச்சார மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்து வரவேற்று பேசினார். மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி பேசினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சதீஷ், பேசியதாவது:- எல்லோருக்கும் கல்லூரி மாணவ பருவம் ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்றும் வாழ்வின் எந்த நிலையிலும் அது இனிமையான நினைவை தரும் என்றும் குறிப்பிட்டார். சாதி,மதம் பாராமல் உருவாகும் கல்லூரி கால நட்பு இறுதி வரை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    எம்.ஐ.டி போன்ற சிறந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரி நாட்களில் தீயவை தவிர்த்து, பாடத்திட்டம் தாண்டிய செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, வாழ்வில் உத்வேகம் தரும் முன்மாதிரியாக விளங்கும் சிறந்த மனிதர்களை பின்பற்றி உன்னத நிலை அடைந்து, பெற்றோர்களை போற்றி அரவணைத்து, ஆசிரியர்களை மதித்து பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்து நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டு மற்றும் கலாச்சார போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கடந்த கல்வியாண்டில், தேசிய அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவ மாணவிகள் மற்றும் மில்லெட் குக்கிங் போட்டியில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பாராட்டு பெற்றனர். கல்லூரி கலாச்சார குழு மற்றும் மகளிர் அதிகாரம், மேம்பாட்டு குழு பேராசிரியர் உறுப்பினர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். விழாவின் முடிவில், கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று நிகழ்த்திய பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    விழாவில், மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தைச் சேர்ந்த கல்வி நிறுவன இயக்குனர்கள், முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×