search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettupalayam"

    • இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

     மேட்டுப்பாளையம், :

    மேட்டுப்பாளையம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளையில் 1சி 25 நகர பஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூருக்கு பெரியபுத்தூர் வழியாக இயங்கி வருகிறது. அந்த பஸ்சில் டிரைவராக மூடுதுறை மீனம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலக்குமார் (41) என்பவரும், கண்டக்டராக கணேசன் என்பவரும் பணியாற்றி வந்தனர்.

    நேற்று இரவு 7.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து பஸ் அன்னூருக்கு புறப்பட்டது. பஸ் வெளியே வரும் வழியில் சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த போதை நபர் ஒருவர் டிரைவரை கீழே இறங்கி வாடா என்று தகாத வார்த்தையால் திட்டி ரகளை ஈடுபட்டார் . டிரைவர் அருணாச்சலகுமார் கீழே இறங்கி ஏன் பஸ்சை மறித்து நிற்கிறாய், ஓரமாக செல், பஸ் செல்ல வேண்டும் என கூறினார். உடனே போதை நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டிரைவர் அருணாச்சலகுமாரின் கை மற்றும் வயிற்றுப் பகுதி கத்தியால் குத்தினார். . இதை சற்றும் எதிர்பாராத அருணாச்சல குமார் படுகாயம் அடைந்து அலறினார்.

    அவரை சக ஊழியர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அரசு பஸ் டிரைவரை கத்தியால் குத்திய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் மணிகண்டன் (வயது 40) என்பது தெரியவந்தது. மேட்டுப்பாளையம் பஸ் நிலைய பகுதியில் டாஸ்மாக் கடைக்கு வருபவர்களிடம் காசு வாங்கி மதுகுடிப்பதை வாடிக்கையாக கொண்டு அந்த பகுதியிலேயே திரிந்துள்ளார். நேற்று போதை அதிகமாகி பஸ்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டு பஸ் டிரைவரை கத்தியால் குத்தி விட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தேவையான காவலர்களை நியமித்து பஸ் டிரைவர், கண்டக்டர், பயணிகள் மற்றும் பெண்கள் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

    • 5 ஆண்டுகளாக முறையான ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக தூய்மை பணியாளர்கள் புகார் கூறி வந்தனர்.
    • தனியார் தூய்மை பணியாளர்கள் கோவை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜியிடம்‌ புகார் மனு அளித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 210 தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 60 பேர் நிரந்தர பணியாளர்கள். ஒப்பந்த பணியாளர்கள் 150 பேர்.

    100 பேருக்கான தூய்மை பணியாளர்களின் பணிகளுக்கு கருப்புசாமி என்பவர் நகராட்சியிடம் ஒப்பந்தம் எடுத்துள்ளார். ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தினசரி ஊதியமாக ரூ.600 வழங்க தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

    இதில் தனியார் ஒப்பந்ததாரர் கருப்புசாமி என்பவர் இவரது தரப்பில் பணியாற்றி வரும் 100 பணியாளர்களுக்கு 5 ஆண்டுகளாக முறையான ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக தூய்மை பணியாளர்கள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் நகராட்சியின் சார்பில் இவர்களுக்கு ரூ.355 முதல் ரூ.510 வரை ஊதியம் வழங்கப்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் தெரிந்து கொண்டனர்.

    இதனிடையே தனியார் ஒப்பந்ததாரர் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.300 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊதிய உயர்வு கேட்டும், நிலுவையில் உள்ள ஊதிய தொகையை திரும்ப வழங்க கோரியும் கடந்த இரு வாரமாக தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே நகராட்சி அதிகாரிகள் தனியார் ஒப்பந்த பணியாளர்களிடம் பேசி இந்த மாதம் 5-ந் தேதிக்குள் தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை வழங்குவதாக கூறியிருந்தனர். ஆனால் இதுவரை ஊதியத்தொகை வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த தனியார் தூய்மை பணியாளர்கள் கோவை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பா லாஜியிடம்‌ புகார் மனு அளித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து காவல் துணை ஆய்வாளர்கள் செல்வநாயகம், முருகநாதன் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வா ர்த்தை நடத்தினர். இவர்க ளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியினர் உடன் இருந்து இவர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடத்தப்பட்டதாக அவரது மனைவி புகார் அளித்திருந்தார்.
    • செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    காரமடை

    கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்சக்திவேல் (வயது 30). இவர் மொபைல் ஆப் மூலமாக கார்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    இவரிடம் காரமடையை அடுத்துள்ள விஜயநகரம் பகுதியை சேர்ந்த காவலாளியான அஜித் (30) என்பவர் மொபைல் ஆப் மூலமாக காரை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த நிறுவனம் சொகுசு காரை வாடகைக்கு கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பியது. காரை பெற்று ெகாண்ட அஜித் 2 மாதங்கள் வாடகையாக சரியாக ரூ.80 ஆயிரத்தை கொடுத்தார்.

    அதன் பின்னர் அவர் வாடகை தரவில்லை. காரையும் திருப்பி ஒப்படைக்காமல் இருந்து வந்தார். மேலாளர் சரண்சக்திவேல், அஜித்தை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. நேரில் சென்று விசாரித்தபோது அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை.

    அப்போது தான் அஜித் காரை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த அஜித்தை தேடி வந்தனர். சம்பவத்தன்று போலீசாருக்கு அஜித் அவர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று அஜித்தை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அைழத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மொபைல் ஆப் மூலம் சரண்சக்திவேலிடம் வாடகைக்கு பெற்ற காரை அவர் முத்தையா என்பவருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது. ேமலும் இதேபோன்று பல்வேறு மொபைல் ஆப்களின் மூலமாக அவர் கார்களை வாடகைக்கு எடுத்து அதனை அடமானம் வைத்து ஜாலியாக இருந்து வந்ததும் தெரியவந்தது.

    தொடர் விசாரணையில் கார் வாங்கி விற்பதில் முத்தையாவிற்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் கடத்தப்பட்டதாக அவரது மனைவி புகார் அளித்திருந்தார்.

    அதன்படி அவர் உண்மையாக கடத்தப்பட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 வருடங்களாக ராம்கியின் மனைவி அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
    • காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கரட்டுமேட்டை சேர்ந்தவர் ராம்கி (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

    ஆனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 வருடங்களாக ராம்கியின் மனைவி அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்தநிலையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். மேலும் கட்டிட தொழிலாளியுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

    கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயது சிறுமியை ராம்கி தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரிசீயன் விஜய் (20) என்பவருடன் சேர்ந்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தஞ்சாவூருக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கட்டிட தொழிலாளியுடன் தங்கி இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் அவரை திருமண ஆசை காட்டி கடத்தி சென்ற ராம்கி மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    அங்கு வைத்து சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராம்கி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனையடுத்து போலீசார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த ராம்கி, அவருக்கு உடந்தையாக இருந்த விஜய் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.
    • ரோட்டோரத்தில் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை நீலிபாளையம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (வயது 36). டிரைவர். இவரது 3 வயது மகன் ரித்தீஸ்.

    இந்த நிலையில் நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்காக கோவிலை தூய்மைப்படுத்துவதற்காக தண்ணீர் லாரி அங்கு வரவழைக்கப்பட்டது.

    லாரி கோவிலை வந்தடைந்ததும் முன் பின் நகராமல் இருக்க சக்கரங்களுக்கு கற்களை எதுவும் வைக்காமல் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் கருணாகரன் என்பவர் சென்றார். அப்போது அங்கு ரோட்டோரத்தில் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.லாரி தண்ணீர் மூலம் கோவிலில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் லாரி திடீரென எதிர்பாராத விதமாக தானாகவே நகர்ந்து முன்னோக்கி சென்றது. அப்போது ரோட்டோ ரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ரித்தீஸ் மீது லாரி மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சிறுவன் ரித்தீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த தீபாஸ்ரீ (15) என்ற சிறுமி காயம் அடைந்தார். மற்ற சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    இதைகண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவன் ரித்திசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தகவலை அறிந்ததும் லாரி டிரைவர் கருணாகரன் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியில் பதுங்கி இருந்த கருணாகரனை மடக்கி பிடித்து கைது செய்தனர். 

    • நிறுவனத்தின் எதிரே உள்ள கட்டிடத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
    • அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து செல்போன்களை திருடி செல்வதாக புகார் தெரிவித்தனர்.

    கோவை:

    மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி மேலாளராக வேலை செய்து வருபவர் லட்சுமணராஜ் (வயது 56).

    இவர் வேலை செய்யும் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்கள் நிறுவனத்தின் எதிரே உள்ள கட்டிடத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் யாரோ அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து செல்போன்களை திருடி செல்வதாக புகார் தெரிவித்தனர்.இதையடுத்து அந்த பகுதியில் இரவு நேரத்தில் கண்காணிக்க முடிவு செய்தனர். அதன்படி சுப்பிரமணி மற்றும் யுவராஜ் என்பவர்களை காவல் பணியில் ஈடுபடுத்தினர்.

    அவர்கள் இரவு ரோந்து சென்றபோது வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் ஒருவர் செல்வதை பார்த்தனர். உடனே காவலர்கள் 2 பேரும் அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த மர்ம நபர் அறையில் இருந்த 3 செல்போன்களை எடுத்து அங்கிருந்து தப்பி சென்றார்.

    பின்னர் அவர்கள் அந்த மர்ம நபரை தேடி சென்றனர். அப்போது அந்த மர்ம நபர் அதே பகுதியை சேர்ந்த அபூகுரைரா (21) என்பது தெரியவந்தது. காவல் பணியில் ஈடுபட்டவர்கள் மர்ம நபர் குறித்து மேலாளர் லட்சுமணராஜிடம் கூறினர். இவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பதுங்கி இருந்த அபூகுரைராவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 2 வாலிபர்கள் கைது

    கோவை:

    மேட்டுப்பாளையம் ஆணைக்கார வீதியை சேர்ந்தவர் செய்யது அன்வர் (வயது23). லாரி டிரைவர்.

    இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார். இந்த நிலையில் நேற்று இரவு மேட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரி பின்புறம் அவர் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த சங்கர் நகர் பகுதியை சேர்ந்த அபாபில் (30) மற்றும் கரிமேடு ஆனந்தன் (30) என்பவர்கள் செய்யது அன்வரிடம் கஞ்சா இருந்தால் கொடு என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர் தன்னிடம் கஞ்சா இல்லை என்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் செய்யது அன்வரின் கன்னத்திலும் வயிற்றிலும் மாறி மாறி குத்தினார்.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அபாபில் மற்றும் கரிமேடு ஆனந்தன் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் செய்யது அன்வர் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிகளிடம் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மேட்டுப்பாளையம் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது.
    • பள்ளி இடத்தில் புதிய அறிவு சார் மையம் கட்டுதல் குறித்து விவாதம் நடைபெற்றது

    சிறுமுகை:

    மேட்டுப்பாளையம் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. நகர் மன்ற தலைவர் மஹரிபா பர்வீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணைத் தலைவர் அருள் வடிவு, நகராட்சி ஆணையர் வினோத் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 25 வது தீர்மானமாக மேட்டுப்பாளையம் நகராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022- 2023 ன் கீழ் ஒரு கோடியே 87 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வார்டு எண் 29 மணிநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் எதிர்புறம் உபயோகமற்ற நிலையில் இருந்த பள்ளி இடத்தில் புதிய அறிவு சார் மையம் கட்டுதல் குறித்து விவாதம் நடைபெற்றது.

    இதற்கு அதிமுக வார்டு கவுன்சிலர் 9 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு செயல்படும் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டால் இடப்பற்றாக் குறை ஏற்படும், எனவே பள்ளி வளாகத்தில் அறிவு சார் மையம் அமைக்கக் கூடாது என கூறினர்.

    ஆனால் இதற்கு நகராட்சி ஆணையர் வினோத், இந்த திட்டம் அரசு கொண்டு வந்த திட்டம். திட்டத்தை நிறுத்த முடியாது என்று விளக்கமளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேர் கூட்டம் முடிந்த பின்னரும் வெளியே செல்லாமல் நகர மன்ற கூட்ட அரங்கில் உட்கார்ந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் பூமா, நகராட்சி கமிஷனர் வினோத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்படி அறிவு சார் மையம் அமைக்க ஏற்ற வேறு இடம் தேர்வு செய்யப்படும் எனவும், அதுவரை தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து 9 கவுன்சிலர்களும் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.  

    • இந்த ரெயில் நெல்லையில் இருந்து இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
    • மேட்டுப்பாளையத்தி லிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை வந்தடையும்.

    செங்கோட்டை:

    நெல்லை, தென்காசி மாவட்ட மக்களின் நலன் கருதி கூட்ட நெரிசலை தவிர்க்க தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே ரெயில் இயக்க தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.

    வாரம் ஒருமுறை

    அதன்படி நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்(06030) வருகிற 21-ந்தேதி முதல் ஆகஸ்ட் 18-ந்தேதி வரை வியாழக்கிழமைகளில் புறப்படுகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந்திர ரெயில்(06029) ஜூலை 22-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 19-ந்தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தி லிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை வந்தடையும்.

    பெட்டிகள்

    இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 1 ரெயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்படும்.

    • வனபத்ர காளியம்மன் கோவில் ஆடிக்குண்ட திருவிழா வருகிற 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி ஆகஸ்ட் 2-ந் தேதி நடக்கிறது.
    • போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், கோவிலை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் திருவிழாவுக்கு வந்து செல்லும் வகையில் சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

    சிறுமுகை :

    கோவை மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் ஆடிக்குண்ட திருவிழா வருகிற 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி ஆகஸ்ட் 2-ந் தேதி நடக்கிறது.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வனபத்ர காளியம்மன் கோவிலில் வடக்கு மாவட்ட ஆர்.டி.ஓ.பூமா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு வந்த அனைவரையும் கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் வரவேற்றார். இதில் நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் குண்டம் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக வந்து செல்லும் விதத்தில் போக்குவரத்து மாற்றம், குண்டம் இறங்கும் பக்தர்கள் பவானி ஆற்றுக்கு செல்லும் போது உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் இருந்து பத்ரகாளியம்மன் கோவில் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். ஒருவழிப்பாதையாக உள்ள இந்த சாலையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும். திருவிழா முடியும் வரை மின்வாரிய துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், கோவிலை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் திருவிழாவுக்கு வந்து செல்லும் வகையில் சாலைகளை சீரமைத்து தர வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் விழாவையொட்டி பவானி ஆற்றில் நீராட செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தீயணைப்புத்துறை சார்பில் நீச்சல் வீரர்கள், தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    சுகாதாரத்துறை சார்பில் கோவில் பகுதியில் மருத்துவர் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை ஏற்படுத்தி தர தேவையான மருத்துவ வசதிகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    இதேபோல கோவில் விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் சில இடங்கள் வனப்பகுதியையொட்டி உள்ள சாலைகளில் வர வேண்டி உள்ளது. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    • மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    காரமடை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே புஜங்கனூர் பகுதியில் பழங்கள் மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் திராட்சை, முந்திரி, பெருங்காயம் ஆகியவைகளை மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று பொருட்களை மினி வேனில் எடுத்து கொண்டு அங்கு வேலை செய்யும் அசாம் மாநிலத்தை சேர்ந்த இலியாஸ் அஹமத்(19) என்பவரும் அவருடன் ஜிபன் நோமோசுத்ரா (19)என்பவரும் விற்பனைக்காக சென்றனர்.

    விற்பனை முடித்துவிட்டு பணத்தை வசூல் செய்து மீண்டும் 2 பேரும் புஜங்கனூர் உள்ள தொழிற்சாலைக்கு மினி வேனில் வந்தனர். அப்போது கட்டாஞ்சி மலை, தண்டி பெருமாள் கோவில் அருகே வந்தபோது மர்ம நபர்கள் 3 பேர் மினி வேனை வழிமறித்து கண்ணாடியை உடைத்தனர்.

    மர்ம நபர்கள் அவர்களிடம் இருந்த வசூல் பணம் ரூ.30 ஆயிரத்தை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட ெதாழிலாளர்கள் 2 பேரும் அவர்களிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை வாகனத்திற்குள் பதுக்கினர்.

    அவர் கள் கையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மட்டும் மர்ம நபர்கள் பறித்து கொண்டு அவர்களை தாக்கி விட்டு அங்கி ருந்து தப்பி சென்றனர். பயந்துபோன இலியாஸ் அஹ மத் மற்றும் ஜிபன் நோமோ சுத்ரா புஜங் கனூர் தொழிற் சாலை வந்து உரிமை யாளரிடம் சம் பவம் குறித்து கூறினர்.

    இதையடுத்து இலியாஸ் அஹமத் காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.  

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.
    • இந்த ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    சிறுமுகை:

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்குவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.

    இந்தநிலையில் இந்த ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    வருகிற 19-ந் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுடன் குண்டம் விழா தொடங்குகிறது. 22-ந் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனையும், 23-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    24-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 25-ந் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல் நடக்கிறது.

    தொடர்ந்து 26-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 27-ந் தேதி காலை 10 மணிக்கு முதல் மாவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    28-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஆடி அமாவாசை பூஜைகள், இரவு 7 மணிக்கு பரிேவட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    29-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராடுதல், ஆகஸ்டு 1-ந் தேதி காலை 10 மணிக்கு 108 குத்துவிளக்கு பூஜை, 2-ந் தேதி மறுபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகிறார்கள்.  

    ×