என் மலர்
நீங்கள் தேடியது "extorted money"
- சபரிநாதன் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
- 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் திடீரென சபரிநாதனிடம் தகராறு செய்தனர்
கோவை,
கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகரை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 27). இவர் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
இவர் சம்பவத்தன்று குனியமுத்தூர்-சுண்டாக்காமுத்தூர் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் திடீரென சபரிநாதனிடம் தகராறு செய்தனர். பின்னர் அவரை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2,500 பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து சபரிநாதன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
- ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை
சிவகங்கையை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). இவர் கோவையில் தங்கி காந்திபுரம் 7-வது வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை ராஜ்குமார் பாரில் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ராஜ்குமாரிடம் மதுபாட்டில் தருமாறு கேட்டனர். அதற்கு அவர் கடை திறக்கவில்லை. 12 மணிக்கு பிறகு வந்து வாங்குமாறு தெரிவித்துள்ளார். இதில் அவர்களு க்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ராஜ்குமாரை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து ராஜ்குமார் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் பார் ஊழியர் ராஜ்குமாரை தாக்கி பணம் பறித்தது ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த தொழிலாளி மோசஸ் (28), ரத்தினபுரி வ.உ.சி வீதியை சேர்ந்த மெக்கானிக் தீபக் (20) மற்றும் ரத்தினபுரி பட்டேல் வீதியை சேர்ந்த பூபதி (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 3 பேர் மீதும் கோவை போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. அவர்கள் அந்த பகுதியில் ரவுடிகளாக சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
- மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
காரமடை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே புஜங்கனூர் பகுதியில் பழங்கள் மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் திராட்சை, முந்திரி, பெருங்காயம் ஆகியவைகளை மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று பொருட்களை மினி வேனில் எடுத்து கொண்டு அங்கு வேலை செய்யும் அசாம் மாநிலத்தை சேர்ந்த இலியாஸ் அஹமத்(19) என்பவரும் அவருடன் ஜிபன் நோமோசுத்ரா (19)என்பவரும் விற்பனைக்காக சென்றனர்.
விற்பனை முடித்துவிட்டு பணத்தை வசூல் செய்து மீண்டும் 2 பேரும் புஜங்கனூர் உள்ள தொழிற்சாலைக்கு மினி வேனில் வந்தனர். அப்போது கட்டாஞ்சி மலை, தண்டி பெருமாள் கோவில் அருகே வந்தபோது மர்ம நபர்கள் 3 பேர் மினி வேனை வழிமறித்து கண்ணாடியை உடைத்தனர்.
மர்ம நபர்கள் அவர்களிடம் இருந்த வசூல் பணம் ரூ.30 ஆயிரத்தை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட ெதாழிலாளர்கள் 2 பேரும் அவர்களிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை வாகனத்திற்குள் பதுக்கினர்.
அவர் கள் கையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மட்டும் மர்ம நபர்கள் பறித்து கொண்டு அவர்களை தாக்கி விட்டு அங்கி ருந்து தப்பி சென்றனர். பயந்துபோன இலியாஸ் அஹ மத் மற்றும் ஜிபன் நோமோ சுத்ரா புஜங் கனூர் தொழிற் சாலை வந்து உரிமை யாளரிடம் சம் பவம் குறித்து கூறினர்.
இதையடுத்து இலியாஸ் அஹமத் காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.






